Quantcast
Channel: வலைச்சரம்
Viewing all 300 articles
Browse latest View live

அடி வாங்கும் ஆண்கள்

$
0
0


நேற்றைய பதிவில் கோவர்த்தன் கிரி பற்றிய சில விஷயங்களைப் பார்த்தோம்.  இன்று கோவர்த்தன் அருகில் இருக்கும் [B]பர்சானா எனும் இடத்தினைப் பற்றிய விஷயங்களைப் பார்க்கலாம்!

[B]பர்சானா – ராதையின் பிறப்பிடம் இந்த ஊர்.  நந்த்காவ்ன் எனும் இடத்தில் கிருஷ்ணர் தனது பிள்ளைப் பிராயத்தில் இருந்தார் அல்லவா, அந்த இடத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் ஊர் தான் இந்த [B]பர்சானா.  இவ்விடத்தில் தான் ராதா பிறந்து வளர்ந்தாராம். கிருஷ்ணர் வளர்ந்த இடமான நந்தகோபரின் நந்த்காவ்ன் கிராமத்திலிருந்து ராதையின் ஊரான [B]பர்சானாவிற்கு ஹோலி சமயத்தில் அனைவரும் வந்து சேர்வார்கள். 

வட இந்தியாவில் ஃபிப்ரவரி/மார்ச் சமயத்தில் ஒரு நாள் மட்டும் ஹோலி கொண்டாடுவது வழக்கம்.  ஆனால் இங்கோ ஏறக்குறைய ஒரு மாதம் இந்த ஹோலி கொண்டாட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். தில்லி வந்த இரண்டொரு வருடங்களில் ஹோலி சமயத்தில் இங்கே சென்று நான்கு ஐந்து நாட்கள் கொண்டாட்டங்களில் பங்கு கொண்டதுண்டு! இனிமையான நாட்கள் அவை!

 படம்: இணையத்திலிருந்து....

இந்த ஹோலி கொண்டாட்டங்களில் ஒன்று தான் “லட் மார் ஹோலிஎன்பது! [B]பர்சானா நகருக்கு வரும் நந்த்காவ்ன் ஆண்களை அடித்து பின்னிப் பெடலெடுப்பார்கள். 

இம்முறை மார்ச் மாதத்தில் சென்றபோது கோவர்த்தன் நகரிலேயே வண்டிகளை நிறுத்தி விட்டார்கள்.  [B]பர்சானா செல்ல நினைத்தாலும் நடந்தே தான் செல்ல வேண்டும் என்ற நிலை – அதுவுமல்லாது அடி வாங்குவதற்காக அங்கே செல்ல வேண்டுமா என்ற எண்ணமும் வந்தது! பொதுவாக வெளி ஆட்களை அடிப்பது இல்லை என்றாலும் விழற அடிகளில் ஒன்றிரண்டு நம் மேல் விழுந்து விட்டால்!என்ற பயத்திலேயே அங்கே போகவில்லை. 

 படம்: இணையத்திலிருந்து....

அடிவாங்கும் ஆண்கள் பற்றிய முழு விவரங்கள் மற்றும் சில படங்களை என்னுடைய பக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்டிருந்தேன்.  எனது பக்கத்தினை தொடர்ந்து படிக்கும் நண்பர்களுக்கு அது நினைவிருக்கலாம்.  அதிலிருந்து ஒரு பத்தி மட்டும் கீழே....


முன்பெல்லாம்சாதாரணமாக ஒரு விழாவாக இருந்தது இப்போது நிறைய மாறிவிட்டது. உத்திரப் பிரதேசம் மட்டுமல்லாது பக்கத்துமாநிலமான ஹரியானாவில் கூட இந்த லட் மார் ஹோலிநடக்கிறது. கிராமங்களில் கல்யாணமான பெண்கள் தனது கணவரைத்துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள். முறைப்பெண்களும் அவரது முறைமாமன்களை துரத்தி அடிக்கிறார்கள் அவருடன் கல்யாணம்ஆகாவிட்டாலும்! பெண்கள் அடிக்க, ஆண்கள் கேடயம் போன்ற ஒன்றால் தடுப்பார்கள். ஆனாலும் அடி விழுந்து விடும்!


முழுப்பதிவினையும் அப்போது படிக்காதவர்கள் வசதிக்காக, இன்று இங்கேயும் அதன் சுட்டியைத் தருகிறேன்!


சரி நண்பர்களே, இனி இன்றைய அறிமுகப் பதிவர்களைப் பார்க்கலாம்!

51.   வலைப்பூ:  கீவியின் கூவல்கள்

இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் தான் இவர் பதிவுலகில் பிரவேசம் செய்திருக்கிறார்.  புனிதா எனும் பெயர் கொண்ட இப்பதிவர் இதுவரை வெளியிட்ட பதிவுகள் நான்கு மட்டுமே!  தொடர்ந்து ஊக்கத்துடன் எழுதுங்கள் சகோ.....

அறிமுகப் பதிவு:டொட்டாரா



நியூசிலாந்து நகரில் இருக்கும் டொட்டாரா எனும் மரத்தினைப் பற்றிய குறிப்புகளை இங்கே பார்க்க முடியும். பதிவிலிருந்து ஒரு பகுதி இங்கே அறிமுகத்திற்காக!

நியூஸிலாந்துக்கே உரிய தாவரம். சின்னச் சின்ன முட்கள் போன்ற கூரிய இலைகளும் சின்னதாக சிவப்பு பழங்களும் கொண்டது. இதன் பழங்கள் பறவைகளுக்கு மிகப் பிரியமான உணவு.  மரம் மட்டும் பெரிதாக வளரும். முப்பது மீட்டர் வரை வளரக் கூடும். இங்குள்ள இரண்டு தீவுகளிலும் பரவலாக எல்லா இடங்களிலும் வளர்கிறது. உக்கிப் போகாதிருப்பதும் சுலபமாகக் குடைத்து எடுக்க முடிவதும் இந்த மரத்தின் சிறப்பு. ஆரம்ப காலத்திலிருந்து மஓறி மக்கள் அவர்களது ஃபாறே (whare) கட்டுவதற்கு இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.


அனுராதா ப்ரேம் – இப்பதிவரும் வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது இவ்வருடத்தின் ஜூன் மாதம் தான் என்றாலும் இது வரை 10 பதிவுகள் எழுதி இருக்கிறார்.  சமையல், புகைப்படம் போன்ற ஐந்து தலைப்புகளில் பதிவுகள் காண முடிகிறது. சின்னச் சின்னதாய் பதிவுகள் வெளியிடுகிறார். தொடர்ந்து எழுத ஊக்கம் அளிப்போம்! 

அறிமுகப் பதிவு:படித்ததில் பிடித்தது..

கடைசியாக படித்த விஜய் டி.வி. புகழ் கோபிநாத் அவர்களின் ப்ளீஸ் இந்த  புத்தகத்தை  வாங்கதீங்கபுத்தகத்தில் படித்த, அதில் பிடித்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

53.   வலைப்பூ:  தி.பரமேஸ்வரி

சென்னையில் பிறந்தவர்.  பூங்குழலி, திலீபா என்ற பெயர்களிலும் எழுதியுள்ள இவர் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.  “ம.பொ.சி பார்வையில் பாரதி  என்ற பெயரில் இவரது ஆய்வேடு நூலாக வெளி வந்திருக்கிறது. தவிர இரண்டு கவிதைத் தொகுப்புகளும் [எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி] வெளியிட்டு இருக்கிறார்.


பள்ளிக் கழிவறைகள் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தக இல்லை என்பதும் அவற்றிலும் பல மாணவர்களின் பயன்பாட்டிற்கே விடப்படாமல் பூட்டியே வைக்கப்படுவதும் சில பள்ளிகளில் நேர்கிறது. இடைவேளைகளில், உணவு வேளைகளில் ஒரே நேரத்தில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் இருக்கும் ஓரிரண்டு கழிவறைகளைப் பயன்படுத்துவதும் ஒரு சிக்கலே. மாணவர் விரும்பும் நேரத்தில் கழிவறையைப் பயன்படுத்த அனுமதிப்பதே இதற்குத் தீர்வாகும். இதனை ஆசிரியர் புரிந்து கொள்ள வேண்டுமேயன்றி, மாணவர் தன்னை ஏய்க்கும் உத்தியாகவோ அல்லது வகுப்பறையின் ஒழுங்கு குலைவதாகவோ நினைத்துத் தன் அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்த நினைத்தல் சரியல்ல.

இப்பதிவில் கொடுத்திருந்த பழ. புகழேந்தியின் கவிதையும் இங்கே....

சார்''
ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.
அனுப்பினேன்.

சார்''
உடனே மற்றொருவன்.
அதட்டினேன்.

நொடிகள் நகர
உள்ளேயே ஈரம்

வகுப்பு முழுதும் நாற்றமடித்தது
என் அதிகாரம்.

54.   வலைப்பூ:  என் எண்ணம்

சோமசுந்தரம் ஹரிஹரன் என்பவரின் வலைப்பூ இது. 2010-ஆம் ஆண்டு முதலே எழுதி வருகிறார்.  என்றாலும் மிகச் சில பதிவுகளே இவர் பக்கத்தில் காண முடிகிறது. 


எழுத்துக்காரன் சொன்னான், ஒருநாளைக்கு ஒருவாட்டிதான் எடுப்பார்கள் என்று தன்னுடைய 16 ரூபாயை கொடுத்தான்.

 அப்புறம் நீ எப்படி ஊருக்கு போவ

ஊருக்கு நாளைக்கு போய்க்கிறேன் இந்தா பணம்

55.   வலைப்பூ:  எண்ணப் பறவை

மகாசுந்தர் அவர்களின் வலைப்பூ இது. ஓவிய ஆசிரியராகப் பணியைத் தொடங்கி,தமிழ் ஆசிரியராகப் பணி. இலக்கிய,இசைப் பட்டிமன்றங்களில் பங்கேற்பு. புத்தக வாசிப்பையும்,மனித நேசிப்பையும் தொடர்வதுஎன்று தனது முகப்பில் தன்னைப் பற்றிய குறிப்பாக எழுதி வைத்திருக்கிறார். 

அறிமுகப் பதிவு:இலக்கியச் சாரல்



உலக இலக்கியங்களுள் எந்தப்பாத்திரத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு காப்பியத்தில் சிலம்புக்கு உண்டு. காப்பிய நாயகி கண்ணகி மற்றும் பாண்டிமாதேவியின் அணிகலன்களாக அமைந்து,காப்பியம் முழுதும் வந்து கதையை இழுத்துச் செல்கின்றன.வாழ்த்திவழிபடுதல் வரையில் மூன்று காண்டங்களிலும் சிலம்பு தொடர்ந்து விளங்கிக் காப்பியதையே நடத்திச் செல்வது போலுள்ளது.

என்ன நண்பர்களே இன்றைய பதிவினை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

பால் பேடா

$
0
0




இந்த வாரத்தில் விருந்தாவன், கோவர்த்தன், சௌராசி கோஸ் என நிறைய விஷயங்களைப் பார்த்தோம். ஒரு சிலருக்கு ரொம்பவே கடுப்பாக இருந்திருக்கலாம் – “என்னடா இவன் ஒரேடியா பக்தி மார்க்கத்தில் உலாத்துகிறானேஎன்று! இன்றும் நாம் கோகுலத்தில் தான் சுற்றப் போகிறோம். ஆனால் பக்தி மார்க்கத்தில் அல்ல. 

மதுரா, விருந்தாவன், கோவர்த்தன், கோகுலம் என்று இப்பகுதிகளில் எங்கே சென்றாலும், “[DH]தூத்[dh]பேடா[da]”என்ற ஒரு தின்பண்டம் கிடைக்கும். நிறைய கடைகள் இவற்றை விற்றாலும், ஒரு சில கடைகளில் கிடைப்பவை தான் சுத்தமாகவும், புதியதாகவும் இருக்கும்.  இந்தப் பேடாவினைத் தான் ஆண்டவனுக்கும் படைப்பார்கள்.  இந்தப் பேடாவினைச் செய்வது கொஞ்சம் கடினமான வேலை தான்.

நான்கு கப் பால், ஒரு கப் சர்க்கரை, கொஞ்சம் ஏலக்காய் பொடி, நெய் இவை இருந்தால் போதுமானது. கொஞ்சமே கொஞ்சம் தான் பொருட்கள் தேவை என்றாலும், இதை உங்கள் வீட்டில் தயாரிக்க நிறைய பொறுமையும், நேரமும் தேவை. சுமார் நான்கு மணி நேரம் மிதமான சூட்டில் பாலைக் காய்த்து, தொடர்ந்து கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பொறுமை இல்லா விட்டால் இதனைச் செய்வது கடினம். போலவே, தொடர்ந்து கிளறிக் கொண்டே இருப்பதும் அவசியம்.

இத்தனை பொறுமை எனக்கில்லை என்று நினைப்பவர்கள் கடையில் வாங்கிச் சாப்பிடுவது மேல்! விருந்தாவன், கோவர்த்தன், மதுரா போன்ற அனைத்து இடங்களிலும் “[b]ப்ரஜ்வாசிஎனும் நல்லதொரு நிறுவனம் இருக்கிறது.  இவர்களது பால் பேடாக்கள் மிகவும் நன்றாக இருக்கும். ஒவ்வொரு முறையும் விருந்தாவன் செல்லும்போது இவர்களிடம் இருந்து ஒரு கிலோவாது பால் பேடா வாங்காது வந்ததில்லை.

கொழுப்பு நீக்காத பாலில் செய்வதால் இப்பேடாக்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. ஒரு கிலோ பேடாவும் ஒன்றிரண்டு நாட்களில் தனியொருவனாகவே காலி செய்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இருந்தாலும் அது தான் உண்மை! 



உங்களுக்காக பால் பேடாவின் படம் மட்டுமாவது தந்தேனே என்று மகிழ்ச்சி அடையுங்கள்!

சரி நண்பர்களே இன்றைய அறிமுகங்களைப் பார்க்கலாமா?


எழுத்துகளை வாசிப்போம்.... இதயங்களை நேசிப்போம்...என்று தனது வலைப்பூவின் முகப்பில் எழுதி வைத்திருக்கும் சேவியர் வெற்றிமணி. ஜெர்மனி நகரில் இருக்கிறார். நிறைய பதிவுகள் இவரது பக்கத்தில் காணக் கிடைக்கிறது.


புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் புகைத்தல் நல்லதுஎன குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர்.

57.   வலைப்பூ:  பாலா கவிதைகள்

2007-ஆம் ஆண்டு முதலே இப்பக்கத்தில் எழுதி வருகிறார் பாலசுப்ரமணியன் முனிசாமி.

அறிமுகப் பதிவு: உடல் தானம்

செயலிழந்த உடலுக்குள்
சாகாத உறுப்புகளை
இயலாத மாந்தருக்கு
எடுத்து வைத்தல் நலந்தானே?

செத்தபின்னே சிவலோகம்
செல்லுவதை யாரரிவார்
புத்தியுடன் உடல்கொடை
பூமிக்கே பெருங்கொடை

58.   வலைப்பூ:  மனிதம்

PALANIMVELஎன்ற பெயர் கொண்ட இப்பதிவர் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்த்து அக்டோபர் 2010.  இது வரை எழுதிய பதிவுகள் 84.  ஒவ்வொரு பதிவிற்கும் பொருத்தமாய் மிகத் துல்லியமான அழகான படங்கள் சேர்த்திருக்கிறார் இவர். 
அறிமுகப் பதிவு:     அம்மா

என் உதை நீ தாங்கி
அந்த எமனையும் வென்றவளே

இறுதியாய் என்னை ஈன்றாலும்
இன்றுவரை ஈரம் குறையல்லையே

உன் உதிரம் உருக்கி
என் பசி போக்கியவளே......

59.   வலைப்பூ:  தமிழ்த்துளி

பொதுவன் செங்கை – முனைவர் பட்டம் பெற்ற இவர் பக்கத்தில், குறுந்தொகை, புறநானூறு, பழங்காலக் காசுகள் என நிறைய விஷயங்களை எழுதுகிறார்.  தமிழ் விக்கிப்பீடியாவிலும் தனது பங்களிப்பைத் தருகிறார். எழுத ஆரம்பித்த்து இவ்வருடம் தான் எனினும் இது வரை 825 பதிவுகள் எழுதி விட்டார். இவரது பக்கத்திலிருந்து ஒரு பதிவினைப் பார்க்கலாம்!

அறிமுகப் பதிவு:நற்றிணை #001

நற்றிணை முதல் பாடலின் பொருளாக அவர் தந்திருப்பது இது தான்.

அவன் தான் சொன்னபடி செயலாற்றி நிற்பவர். திரும்பி வரக் காலம் நீட்டித்தாலும் இனியவர். என் தோளை பிரிந்து அறியாதவர். தாமரையில் எடுத்த தேனை சந்தனமரம் தேன்கூட்டில் சேர்த்து வைத்திருக்கும் தேன் போல உயர்ந்தவர். உயர்ந்தவர் நட்பு உயர்ந்ததுதான். நீர் இல்லாமல் உலகம் இயங்காது. அதுபோல அவர் இல்லாமல் நம்மால் வாழமுடியாது. அப்படிப்பட்ட நம்மை நயந்து வந்து அருளியிருக்கிறார். அப்படிப்பட்டவர் நம் நெற்றி பசந்து ஊர விட்டுச் சிறுமைப்படுத்துவாரா? அப்படிச் செய்வதற்கு அவருக்குத் தெரியாது.

60   வலைப்பூ:    சிரிப்பூக்கள்

முஹம்மது அபுபக்கர் ஹாரூஸ் என்பவரின் வலைப்பூ “சிரிப்பூக்கள்சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் இல்லை – கவலையை மறக்க கற்றுக் கொண்டவர்கள்என்று சொல்லும் இவர் பக்கத்தில் நிறைய பதிவுகள் உண்டு.  ஒன்றரை வருடமாக பதிவுகள் ஏதும் புதிதாக இடவில்லை.  கடைசி பதிவு ஃபிப்ரவரி 2013.

அறிமுகப் பதிவு:காதல்

இத்தனை பொண்ணுங்களுக்கு
 மத்தியில் என்னை எப்படி
காதலித்தாய் என அப்பாவியாகக்
கேட்கிறாய்எப்ப­டிச் சொல்லுவேன்..
உன்னைத் தவிர
மற்ற ஃபிகர் எல்லாம் என்னை
கல்லைக் கொண்டு அடிக்காத குறையாக
விரட்டி விட்டதை….:-)

என்ன நண்பர்களே, இன்றைய அறிமுகங்களை ரசித்தீர்களா? பதிவு பற்றிய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை மீண்டும் சந்திப்போம்..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஆதலினால் பயணம் செய்வீர்

$
0
0




பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்பதை எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்குத் தெரியும். தொடர்ந்து எனது வலைப்பூவில் பயணக் கட்டுரைகளை படித்து வருகிறார்களே! வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பினை ஏற்ற இந்த இரண்டு வாரமும், நான் பயணித்த சில இடங்களில் சந்தித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

முதல் வாரத்தில் குஜராத் பயணத்தில் கிடைத்த சில அனுபவங்களும், இரண்டாம் வாரத்தில் விருந்தாவன், கோவர்த்தன் ஆகிய இடங்களில் கிடைத்த சில அனுபவங்களும் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. குஜராத் பற்றிய சில குறிப்புகள் மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  விரிவான பயணக்கட்டுரைகள் விரைவில் எனது பக்கத்தில் வெளிவரலாம்! தற்போதைய வைஷ்ணவ தேவி கட்டுரை முடிந்த பிற்கு சற்றே இடைவெளி – பிறகு ஒரு கோடைவாசஸ்தலம் – அதன் பிறகு குஜ்ராத் – பஞ்சத்வாரகா என வெளியிட எண்ணம்.

இந்த இரண்டு வாரமும் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பினை அளித்த வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  எனக்குத் தெரிந்த அளவில் பதிவுகளை வெளியிட்டு இருக்கிறேன்.  உங்களது எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்யாமல் இருந்திருந்தால் அது எனது தவறு மட்டுமே! வாய்ப்பளித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சீனா ஐயா.

தொடர்ந்து பயணிப்போம்.....  நல்லனுபவங்களைப் பெறுவோம்!

ஆதலினால் பயணம் செய்வோம்!

சரி வலைச்சர வாரத்தின் கடைசி நாளான இன்றைய அறிமுகங்களைக் காண்போமா?


வலைப்பதிவரின் பெயர் பிரசாந்த்.  வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது மார்ச் 2012.

அறிமுகப் பதிவு:காதல் முன் கடவுள் பின்

பிடித்தவரை நேசிக்க ஒரு ஆயுள் போதாது
நேசித்த ஒருவரை வெறுக்க நிமிடம் போதும்
நேசித்தல் நேசிக்க படுதல் இலகுவில் கிட்டாது
இலகுவில் கிடைத்தால் இறுதிவரை வராது
கலைதயாத காதல் இருந்தால் நகராது நிமிடம்
பொறாமையின் அர்த்தம் கடவுளுக்கும் புரியும்.

62.   வலைப்பூ:  என் கனவுகள்

மனதில் தோன்றிய சின்னச் சின்னக் கனவுகளும் நினைவுகளும் கவிதையாய்... என்று சொல்லும் இவரது பக்கத்தில் நிறைய கவிதைகள் காணக் கிடைக்கின்றன. இவரது பெயர் லாக்ரின் ஷர்மா.  மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர். 2010-ல் எழுத ஆரம்பித்திருந்தாலும், ஃபிப்ரவரி 2013-க்குப் பிறகு பதிவுகள் ஏதும் இல்லை.

அறிமுகப் பதிவு:முதல் சந்திப்பு

அவளின்ஓர பார்வை
சொல்லிடும்
பல பதில்கள்...
என்னைகண்டதும்---
சற்றேமறைந்து கொள்கிறாள்..

63.   வலைப்பூ:  தமிழ்ப்பூ

தமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்என தனது முகப்பில் சொல்லும் வலைப்பூ “தமிழ்ப்பூ”.  இதன் உரிமையாளர் முனைவர் அ. கோவிந்தராஜூ. பதிவுகள் எழுத ஆரம்பித்தது சென்ற மாதம் தான்! என்றாலும் இது வரை 16 பதிவுகள் வெளியிட்டு இருக்கிறார். வலையுலகிற்குப் புதியவரான இவரை வாழ்த்தி வரவேற்போம்.

அறிமுகப் பதிவு:ஹைக்கூ கவிதைகள்

வெண்பா இலக்கணம், ஆசிரியப்பா இலக்கணம் படித்த எனக்கு ஹைக்கூ இலக்கணம் தெரியவில்லை. சிலரிடம் கேட்டேன். தெளிவு கிடைக்கவில்லை. பிறகு அது தொடர்பான நூல்களை- ஹைக்கூ எழுதுவது எப்படி போன்ற நூல்களைப் படித்தேன். இவைதான் நான் புரிந்து கொண்டதுஎன ஹைக்கூ பற்றிச் சொல்கிறார். அதில் பிடித்த ஒரு ஹைக்கூ!

மடியில் தொடக்கம்
மண்ணில் அடக்கம்
மனித வாழ்வு!

எத்தனை பெரிய உண்மை மூன்றே வரிகளில் – ஆறே சொற்களில்!

64.   வலைப்பூ:  இப்படிக்கு இளங்கோ

மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமேஎன்பது இவரது முகப்பு வாசகம். தன்னைப் பற்றிச் சொல்லுகையில் விழுகின்ற மழைத்துளிகளில் ஒரு துளியையேனும் உள்ளங்கையுள் சேமித்து வைக்க துணிகின்றேன்என்று சொல்கிறார் பதிவர் இளங்கோ.  எழுத ஆரம்பித்தது  டிசம்பர் 2008.

அறிமுகப் பதிவு:      600 ரூபாய்

இவையெல்லாம் உங்களுக்கு எதற்கு தெரிய வேண்டும்...
மாடங்களில் இருந்து பாருங்கள்...
ஊரே செழிப்பாக இருக்கும்
அவை ஆறுகள் அல்ல
சாக்கடைகள் என்று ஒரு நாளும் நீங்கள் அறியப்போவதில்லை..

சொன்னதே சொன்னீர்கள்,
அந்த அறுநூறு ரூபாயில்
எப்படி ஒரு மாதத்தை தள்ளுவது என்று
பாவப்பட்ட எங்களுக்குச்
சொல்லிக் கொடுங்கள்....

65.   வலைப்பூ:  தினேஷ் மாயா

தினேஷ் மாயா – இது தாங்க நான்என்று சொல்வது - பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, இரண்டு வருடங்கள் வங்கியில் பணியாற்றினேன், தற்போது மத்திய அரசு வருவாய்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறேன். என் மனதில் இருக்கும் கருத்துக்களை எனக்கான வலையில் பதிவு செய்கிறேன். வருகைத்தரும் அனைவர்க்கும் நன்றி. ஆதரவு தரும் நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

அறிமுகப் பதிவு:மழை

நீ குடைப்பிடித்து நடந்து வருகிறாய்..
உன் மேல் தன் ஒளியை வீசமுடியாமல்
ஏக்கத்தில் வானம் வடிக்கும் கண்ணீர்தானோ -
மழை !

என்ன நண்பர்களே இன்றைய அறிமுகங்களை ரசித்தீர்களா? கடந்த இரண்டு வாரமாக [10-11-2014 முதல் 23-11-2014 வரை] வலைச்சரத்தில் நான் எழுதிய பதிவுகளை நீங்கள் படித்து, ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  எனக்குத் தெரிந்த வரை சில விஷயங்களை இங்கே சொல்லி இருக்கிறேன். அதில் ஏதேனும் தவறுகளோ, குறைகளோ இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். 

தொடர்ந்து எனது பக்கத்தில் வரும் பதிவுகளையும் படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்கள். உங்களது தொடர்ந்த ஆதரவினால் இது வரை எழுதி வந்திருக்கிறேன். அது மேலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு!

வாய்ப்பளித்த சீனா ஐயா அவர்களுக்கும்,  தொடர்ந்து படித்து கருத்துரை சொன்ன அனைத்து நட்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி. நாளை முதல் எனது தளத்தில் சந்திப்போம்... சிந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

செல்விருந்தோம்பி நல்விருந்து காத்திருத்தல்

$
0
0
அன்பின் சக பதிவர்களே
09.11.2014 ல்  முடியும் வாரத்திற்குஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் சதங்கா  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 053
அறிமுக படுத்திய பதிவுகள் : 054
பெற்ற மறுமொழிகள் : 069
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 9 

10.11.2014 முதல் துவங்கும் வாரத்தில் இருந்து )   இரு வார காலத்திற்கு ( 23.11.2014  ) ஆசிரியப் பொறுப்பினை ஏற்று அன்புடனும் ஆர்வத்துடனும்  வெங்கட் நாகராஜ்  அறிமுகப் பதிவுகளை வெளியிட்டு தான் ஏற்ற பொறுப்பினை   சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி இன்று மாலையில் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.  

இவர் இட்ட பதிவுகள் : 014
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 72
அறிமுக படுத்திய பதிவுகள் : 137
பெற்ற மறுமொழிகள் : 541
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 74
இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தார்.  ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாம் வருடமாக பதிவு எழுதுவது தொடர்கிறது.  பிறந்தது நெய்வேலியில். தற்போது வசிப்பது இந்தியத் தலைநகரில்.  பயணம் செய்வது, புத்தகங்கள் வாசிப்பது, புகைப்படங்கள் எடுப்பது ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவர்.  இருபத்தி மூன்று வருடங்களுக்கு மேலாக தலைநகர் வாசம். மனைவியும் மகளும் இரு வலைப்பூக்கள் வைத்துக் கொண்டு  தனித் தனியாகப்  பதிவுகளை எழுதி வருகிறார்கள். 

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ( 24.11.2014  ) ஏற்கும்  மஞ்சு பாஷினி சம்பத் குமாரினை  வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு ( 30.11.2014 ) சிறந்த  பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளை  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இவர் பெயர் மஞ்சுபாஷிணி… இவரது  கணவர் சம்பத்குமார், இவரது  குழந்தைகள் விக்னேஷ்ராம், இபானேஷ்ராஜ், அம்மா, தம்பி தீபக்ராஜேஷ் (குடும்பம்) எல்லோருடனும் குவைத்தில் வசிக்கிறார். கதை, கவிதை, பாடல் எல்லாமே இஷ்டம் இவருக்கு. 

மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ரசனை கண்டிப்பாக இருக்கும். ரசனை இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே முடியாது. இல்லை என்றால் பிறந்து இத்தனை வருடங்கள் ஒவ்வொரு நொடியும் ஒரு அட்வென்ச்சர் போல் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாமல் இவரது குடும்பத்தினர் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்பார்களா ??? 

இவரது தளத்தில் இவர் இவரது  படைப்புகள் பதிவதை விட பிறரின் படைப்புகள் வாசித்து இவர்  எப்படி உணர்கிறார் ? அவர்கள் வரிகளை படித்து என்பதை இவரது  கருத்தாய் சமர்ப்பிப்பதில் இவருக்கு  கூடுதல் விருப்பம்.

நல்வாழ்த்துகள் சதங்கா 

நல்வாழ்த்துகள் வெங்கட் நாகராஜ்

நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி சம்பத் குமார் 

நட்புடன் சீனா 

வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் முதல் நாள்

$
0
0
நண்பர்கள் அனைவருக்கும் அன்புக்காலை வணக்கங்கள்...




ரொம்ப நாள் இல்ல இல்ல மாதங்கள் கழித்து உங்க எல்லோரையும் மீண்டும் சந்திப்பது சந்தோஷமா இருக்குப்பா.. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க சொல்லி சீனா அண்ணா சொன்னப்ப அட மீண்டும் மூன்றாவது முறை எனக்கு இந்த வாய்ப்பா என்று சந்தோஷமாக இருந்தது. அதோடு குட்டியூண்டு பயமும்… அந்த பயத்தை எல்லாம் தூக்கிப்போட செய்து வலைச்சர ஆசிரியர் பொறுப்பை தந்த சீனா அண்ணாவுக்கும் உதவிய நண்பர் வெங்கட் நாகராஜுக்கும் மனமார்ந்த அன்பு நன்றிகள்.

கடந்த இரண்டு வாரமாக அசத்தலாக வலைச்சரத்தை தன் எழுத்துகளால் நிரப்பிக்கொண்டிருந்த வெங்கட்டுக்கு மனமார்ந்த அன்பு வாழ்த்துகள்.
இயந்திரம் போல் நாட்களை வேகமாக கடத்திக்கொண்டிருக்கும் நமக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள கிடைத்த இடம் தான் வலைப்பூ. நம் மனதில் தோன்றுவதை பகிரவும், நல்லதை சொல்லவும், பிறரின் படைப்புகளை படிக்கவும், திறமைகளை அறியவும் வலைப்பூவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.


நான் மஞ்சுபாஷிணி… என் கணவர் சம்பத்குமார்என் குழந்தைகள் விக்னேஷ்ராம்இபானேஷ்ராஜ்அம்மாதம்பி தீபக்ராஜேஷ் (குடும்பம்) எல்லோருடனும் குவைத்தில் வசிக்கிறேன். கதைகவிதைபாடல் எல்லாமே இஷ்டம் எனக்கு. மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ரசனை கண்டிப்பாக இருக்கும். ரசனை இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே முடியாது. இல்லைன்னா பிறந்து இத்தனை வருடங்கள் ஒவ்வொரு நொடியும் ஒரு அட்வென்ச்சர் போல் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாமல் நாம் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போமா??? அப்ப நான் சொன்னது சரி தானேப்பா?

என் தளத்தில் நான் என் படைப்புகள் பதிவதை விட பிறரின் படைப்புகள் வாசித்து நான் எப்படி உணர்கிறேன் அவர்கள் வரிகளை படித்து என்பதை என் கருத்தாய் சமர்ப்பிப்பதில் எனக்கு கூடுதல் விருப்பம்.

இன்னைக்கு முதல் நாள் என்பதால் என்னுடைய வலைப்பூவில் ஒரு சில பதிவுகள் மட்டுமே போட்டுடறேன்..
எனக்கு மிகவும் பிடித்த என் பதிவுகள்..




முதல் நாள் - மனம் கவர் பதிவர்கள்





தினமும் இவர் பதிவுகள் ஏதாவது இருக்கா என்று முதலில் ஓடி வந்து பார்ப்பேன். எளிய வரிகளில் மனதை நெகிழவைக்கும் கதைகள், குழந்தையில் இருந்து பெரியோர் வரை ரசிக்கும் ஜ்வல்யா கவிதைகள், அனுபவங்கள் இப்படி நிறைய எழுதுவார்... காற்றை மழையை நேசிப்பவர்... அம்மா என்று ஆத்மார்த்தமாய் சொல்லும் வரிகளில் பாசத்தை உணரலாம்... காற்று பற்றி மழை பற்றி எழுதிய வரிகள் வாசிக்கும்போதே மழையின் சாரலை, காற்றின் ஜில்லென்ற தன்மையை உணரலாம்.. ஒரு பக்க கதைகளில் அப்படியே நம்மை கட்டி நிற்க வைத்துவிடும் வரிகள். எழுத்தையே சுவாசமாக நேசிப்பவர்... வெள்ளையங்கிரி சென்று வந்த அனுபவம் வாசிக்கும்போதே மனம் சிலிர்க்கிறது. 



அந்த நாள் தேவதை



2. தீதும் நன்றும் பிறர் தர வாரா




முதலில் நான் வலைப்பூவில் விமர்சனம் எழுதத் தொடங்கிய பதிவு ரமணி சாரின் பதிவு... அன்று தொடங்கிய பயணம்.... இன்று வரை... இடை இடையே காணாமலும் போகிறேன்... ரமணி சார் பதிவுகள் எப்போதுமே கருத்தை உள்ளடக்கி வரும் பகிர்வுகளாகவே வரும்.. 






ரிட்டையர் ஆகிவிட்டாலே அக்கடான்னு உட்கார்ந்துகிட்டு சீரியல் பார்க்கவும் கோயில்களுக்கு போகவும் அக்கம் பக்கத்து மனுஷா கிட்ட அரட்டை அடிக்கவும், இன்னும் ஒரு சிலருக்கோ என்ன செய்றது போர் அடிக்கறதேப்பா இந்த ரிட்டையர்மெண்ட் லைஃப் என்று அலுத்துக்கொள்வோர் மத்தியில் இதோ நிறைய போட்டிகள் வைத்து எல்லோர் எழுத்தையும் ஆக்டிவாக வைக்க இவர் வைத்த போட்டிகளே சாட்சி. அலுப்பே இல்லாமல் தொடரும் எழுத்துக்கு சொந்தக்காரர்.. 




அசால்டா வந்து அனாயசமா எழுதிட்டு போய்க்கிட்டே இருப்பார். அட இவரா எழுதினார்னு ஆச்சர்யமா இருக்கும்.. டைம் இருக்குமா எழுத?? தெரியாது... தமிழ் உச்சரிப்பும் எழுத்தின் வேகமும் அசத்த வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.. கோபு அண்ணாவின் பிரம்மாண்ட பரிசுப்போட்டியை பற்றி இவருடைய எழுத்தில் வாசிப்பது சுவாரஸ்யம்..






தமிழ் மீது அதீதப்பற்று. எழுத்துகளை கவிதையாக்கி வரிகளில் செதுக்கும் அழகே அழகு.. உலகப்பயணம் சென்றுவிட்டு வந்து அதை கூட சுவாரஸ்ய வரிகளில் எழுதியவர். வரிகளில் தமிழ் வாசமும் பாசமும் இருக்கும். உடல்நலம் சரியில்லை என்றாலும் எழுத்து மட்டும் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.  கண்ணில் ஏற்பட்ட சிரமங்கள் குறைந்து சீக்கிரமே எழுத்துகள் தொடர்ந்திட வேண்டிக்கொள்கிறேன்.






சௌந்தர்ய தமிழ் எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.. திடீர் என்று என்னைப்போலவே காணாமல் போய் திரும்ப வந்து அசத்திக்கொண்டிருக்கும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். இவருடைய பதிவில் நான் நிறைய அழகு தமிழை வாசித்திருக்கிறேன். 






இவர் எழுத்துக்கு என்ன தான் வயசு ??  சுறுசுறுப்பான எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.. இவரின் எழுத்தை வாசிக்கும்போதே நம் உதடுகள் புன்னகைக்கும். துறுதுறு... சுறுசுறு.... 



8. மின்னல் வரிகள்


சரித்திரமா, நகைச்சுவையா, திருப்பாவையா... எல்லாமே இவர் எழுத்தில் வாசிப்பது கூடுதல் சுவாரஸ்யம்.. ஏன்னா கேட்கறீங்க? எதிர்ல இருக்கிறவங்க கிட்ட பேசறமாதிரியே எழுதிடுவார் அசத்தலா... பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும் யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதி ரசிக்கவும் வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்...


அரசன் தந்த பரிசு

கிளி கிலி கிழி

கவிதை எழுதுவது எப்படி?


9. திண்டுக்கல் தனபாலன்


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவிலும் கருத்தையே முதன்மைப்படுத்தி பாட்டு வரிகளோடும் ரசிக்க வைக்கும் புதிய புதிய யுத்திகளோடும் எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர்.  பேச்சில் இருக்கும் மென்மை இவர் எழுத்திலும் இருப்பதை பார்க்கலாம்.  சொல்ல வந்த கருத்தை அழுத்தமாய் எழுதியதை வாசிக்கலாம்..

மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?

வயதான காலத்தில் நிம்மதியை தருவது எது?

மனிதனுக்கு மிகப்பெரிய தண்டனை எது?


10. எங்கள் பிளாக்

எங்கள் பிளாக்

நல்லவைகளை எங்கு கண்டாலும் கேட்டாலும் அதை சிரத்தையாக பகிர்வதில் மிகப்பெரிய பங்கு இந்த வலைப்பூ சொந்தக்காரர்களுக்கு உண்டு. இவர்கள் எழுத்தில் பாசிட்டிவ் செய்திகள் வாசிக்கலாம்.. ஊக்கமும் உற்சாகமும் தந்து எல்லோரையும் எழுத்துகளாலேயே பாராட்டும் எழுத்துக்கு சொந்தக்காரர்கள்.. பன்மையில சொல்றேன்னு தானே பார்க்கறீங்க... டீம் வர்க்பா... டீம் வர்க்...

அலுவலக அனுபவங்கள்: இப்படியும் நடப்பதுண்டு

கல்கி விகடன் துக்ளக் குமுதம் கங்கை அமரன் பொன்னியின் செல்வன் வெட்டி அரட்டை

ரெஹானா ஜப்பாரி

நாளை மீண்டும் என் மனம் கவர் பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே !!



வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - இரண்டாம் நாள்

$
0
0
இரண்டாம் நாள் சுகந்த மணத்துடன் பவளமல்லி வாசத்துடன் அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே….

எத்தனையோ பூக்கள் பார்த்திருப்பீங்க, மாலையா கோர்த்திருப்பீங்க, தலையில் சூடி இருந்திருப்பீங்க. பவளமல்லி பூ பற்றி யாரேனும் அறிந்திருக்கிறீர்களா? ஏன் இதைப்பற்றி கேட்கிறேன்னா எங்க வீட்டு தோட்டத்தில் பவளமல்லி மரம் இருந்தது ஒருக்காலத்தில். நிறைய பூக்கள் பூத்து பறிக்க சிரமம் ஏற்படாமல் அழகா கொட்டி இருக்கும்.. ஆரஞ்ஜ் கலர் காம்புடன் மனம் நிரப்பும் மணத்துடன்… இந்த மலருக்கு இருக்கும் மணம் போல் வேறெந்த மலரிலும் நான் உணர்ந்ததில்லை. பாட்டி தினமும் கோயிலுக்கு போகுமுன் பூக்களை ஈர மண்ணில் இருந்து எடுத்து கழுவி கோர்த்து மாலையாக வைத்திருப்பேன். பெருமாளுக்கு பாட்டி எடுத்துட்டு போய் ஐயரிடம் கொடுத்து சார்த்த சொல்வாங்க. மானிடர்கள் சூடிக்கொள்ளமுடியாத தெய்வீக மலர் இது. சமீபத்தில் இதைப்பற்றி முகநூலில் எழுதினேன். தமிழில் பவளமல்லி, தெலுகில் பாரிஜாதா…


உன் வாசம்
என் நுனிமூக்கை
நிரடுகிறது....
உன் பனித்துளி
தொடுதலில்
மனம்
சிலிர்க்க வைக்கிறது...
உன் அழகை
சிலாகிக்க
இந்த ஒரு யுகம்
போதவே இல்லை
எனக்கு
கண்ணனை
மட்டுமே
தழுவிக்கொள்ளும்
உன் தெய்வீகத்தில்
சிந்தனை மெழுகாகிறது...
பூத உடல் வேண்டாம்
எனக்கு
உன்னைப்போலவே
வாசம் பரப்பி
மனதை நிறைக்கும்
பவழமல்லி 
மலர்களாக்கிவிடு
இறையை தழுவிக்கொண்டு
நானும் சற்றே
இளைப்பாறிக்கொள்கிறேன் !!!

இன்று இந்த பவளமல்லி பூவைப்போல் பூவையரின் பதிவுகளை அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன்... மென்மையும் பெண்மையும் நிறைந்த பூவையர் பகிர்வுகளை பார்ப்போம் இன்று...



என் மனம் கவர் பதிவர்கள் – இரண்டாம் நாள்

ஆன்மீகமும் சுலோகங்களும் கோயிலுக்கு செல்ல இயலவில்லையே என்ற சிரமத்தையும் போக்கி கைப்பிடித்து கோயிலுக்கே அழைத்து சென்று கர்ப்பக்கிரஹத்துள் அமரவைத்து தெய்வ தரிசனம் செய்ய வைத்து உலகில் உள்ள கோயில்கள் எல்லாவற்றையும் தரிசிக்கும் பாக்கியத்தை தரச்செய்யும் அற்புதம் இவர் பதிவுகளில் காணலாம்.

கண்ணன் இருக்கும் கோயிலைத்தேடி நாம் போய் தரிசிக்கிறோம்.. இங்கே கண்ணனையே நம் முன் கொண்டு வந்து நிறுத்தி விடும் சக்தி இவர் எழுத்துகளில் உண்டு. கண்ணன் நிறைந்திருக்கும் பூலோக சுவர்க்கத்தை இவர் வலைப்பூ பக்கம் போய் வாசித்து மகிழலாம்.

பார்வையிலும் பேசும் வார்த்தைகளிலும் எழுத்திலும் அன்பெனும் வாஞ்சை... சுற்றுப்பயணம் செய்துவிட்ட வந்த இடங்களில் எல்லாம் தன்னுடைய சுவடுகளை மறக்காமல் எழுத்தால் பதித்துவிட்டு வந்த தாரகை. இவர் எழுத்துகளில் நல்லவை கூட மென்மொழியிலேயே இருக்கும். ரசிக்கவைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர். 

சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர், சமையல் ஆகட்டும், பொது விஷயங்களாகட்டும், நிகழ்வுகளாகட்டும், எல்லாவற்றையுமே அழகாய் கட்டுக்கோப்பாய் தன் எழுத்துக்குள் கொண்டு வந்து விடுவார்.

சிட்டிகை போட்டால் தும்மல் வருவது போல் ஒரு வார்த்தை சொன்னால் அதை வைத்து ஒரு கவிதையே சந்தம் இசைத்து பாடல் அமைத்து எழுதிவிடுவார்கள்.. கவிதையே பாடலைப்போல் இனிமையாக இருக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.

6. அனன்யாவின் எண்ண அலைகள்
இவர் எழுத்தில் எவ்வளவு விஷயங்கள் இருக்குமோ அவ்வளவு நகைச்சுவையும் இருக்கும், ரசனைக்காரி... எழுத்துகளில் ரசனை படிமன் இல்லா வரிகளே இருக்காது. இனிய குழந்தை.. இவருடைய வரிகள் படிக்கும்போதே மழலைமொழி படிப்பது போலவே ஒரு சந்தோஷம் ஏற்படும்..
தூசி உறிஞ்சி
இம்சையான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள்
அத்திதி தேவோ பவ

7. வேதாவின் வலை
தமிழ் கொஞ்சும் இவர் எழுத்துகளில்.. தூய்மையான தமிழ் வார்த்தைகளை இவர் எழுத்துகளில் வாசித்து ரசிக்கலாம். இயற்கை, பயணம், குழந்தை, கருத்து இப்படி எல்லாவற்றை பற்றி மிக அசத்தலாக எழுதி இருப்பார் இவர் வலைப்பூவில்.
பசுமை நறுமணம் புல்தரை
எட்டும் வரை எட்டு
குழந்தைத் தூக்கம்

8. ரஞ்சனி நாராயணன்
இவர் எழுத தொடங்கியதே ரொம்ப லேட் தான். ஆனால் எழுத ஆரம்பித்தப்பின் அசுர வேகம், மலைகள் பல தாண்டியதை போன்றதொரு உற்சாகம், இவர் எழுத்துகள் எப்போதுமே நம்மிடம் பேசுவது போலவே இருக்கும்.. ரசனையான எழுத்துகளின் சொந்தக்காரர் இவர். நிறைய கட்டுரைகள், பயனுள்ள மருத்துவ கட்டுரைகள், பெண்களுக்கான கட்டுரைகள், குழந்தை வளர்ப்புக்கான கட்டுரைகள் இப்படி பல விஷயங்கள் நிறைந்த இடம் இவர் வலைப்பூ.
அரியலூர் அடுக்கு தோசை
குழந்தையா வேலையா?
நோய் நாடி நோய் முதல் நாடி

9. திருமதி பக்கங்கள்
இவர் செல்லும் இடமெல்லாம் நம்மையும் அழைத்து சென்றுவிடுவார் எழுத்தின் ஊடே. அருமையான நல்ல விஷயங்களை அற்புதமாய் பகிரும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக இவருடைய பகிர்வு வந்துள்ளது. மனமார்ந்த பாராட்டுகள் !!
அச்சரப்பாக்கம் சிவன் கோயில்
பாப்பா பாடும் பாட்டு கேட்டு தலைய ஆட்டு

10. கீதமஞ்சரி
சத்தமில்லா சாதனைகள் புரிந்த எழுத்துகள் இவருடையது. இனிமையான கவிதை வரிகள் மனதை கொள்ளைக்கொள்ளும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். எண்ணமே இவரின் எழுத்துகளானது. அதுவும் வீரியமானது.
தவறிய கணிப்பு
வானரக்கண்ணே என் காதல் பெண்ணே
தமிழ்விடு தூது

11. சந்திரகௌரி சிவபாலன்  (கௌசி)
இவர் எழுத்துகள் ஜனரஞ்சகமாக இருக்கும். சிறுவயது காலத்து விளையாட்டு முதல் தாலாட்டு வரை, பெற்றோர் குழந்தைகள் இடையே இருக்கும் அருமையான பந்தம், ஆன்மீகம், இலக்கியம்  இப்படி நிறைய எழுதி இருக்கிறார்.
நமக்கு நாமே எதிரி
எழுந்திடு பெண்ணே எழுந்திடு
பணம் பணம் பணம் பணமில்லையேல் பிணம்

12. தென்றல்
எளிய நடையில் அழகு தமிழில் மழையாய் கவிதை பிரவாகம் இவர் எழுத்துகளில்...புத்தகம் வெளியிட்டிருக்கிறார். கவிதைக்கொஞ்சும் இவர் எழுத்துகளில்.. தெம்மாங்கு பாடும் எளிய நடையில்...
எல்லாக்கல்லும் சிலையாக
கற்க கசடற
தமிழ்ச்சாரல்

13. தேன் மதுரத்தமிழ் கிரேஸ்
இவரின் துளிர் விடும் விதைகள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி பதிவை அப்படியே பகிர்கிறேன். இவருடைய நூலை வெளியிட்டு பகிர்ந்தவை மிக அற்புதமானவை. இவரின் எழுத்துகளே இதற்கு சான்று.
துளிர் விடும் விதைகள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி
கதிர் கொண்டு வளைச்செல்லும் களவன்
அணிலும் பாடுதே

14. எண்ணத்தூரிகை
வசீகரிக்கும் எழுத்துகளில், சில மனம் நெகிழவைக்கும், பல ரசிக்கவைக்கும், ஒருசில உருகவைக்கும். கட்டிப்போட்டுவிடுவார் தன் எழுத்துகளில் இவர்.
மன சாம்ராஜ்யம்
சுமுகமான உறவுகள் நிலைத்திட
ஸ்ரீயின் செல்லக்குறும்புகள்

15. சுந்தர நேசங்கள்
சுந்தர எழுத்துகளுக்கு சொந்தமானவர்.  எங்காவது ஒரு படம் பார்த்துவிட்டால் உடனே அந்த படத்திற்கேற்ற பொருத்தமான மிக அற்புதமான கவிதை ஒன்றை வரைந்துவிடுவார். அத்தனை தத்ரூபம் இவர் எழுத்துகளில்.
அஸ்தினாபுரம் தந்த அங்கதேச அரசன் நான்
பெண்மை பெருந்தவ பிறப்பு
காவேரி பூம்பட்டிண கலையழகி நான்

நம் எண்ணங்கள் செயல்கள் வார்த்தைகள் எப்போதுமே நல்லவையாகவே இருந்துவிட்டால் நமக்கு இடர் வரும் நேரமெல்லாம் நம் நல்லவையே அற்புதங்களாக மாறி மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவிடும்.. நம்மை காத்திடும்..
இன்றைய நாள் எல்லோருக்கும் நலன்கள் தரும் நன்னாளாகட்டும் !!
மீண்டும் நாளை என் மனம் கவர் பதிவர்களோடு சந்திக்கிறேன் நண்பர்களே.
அதுவரை நன்றி வணக்கம் !!




வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - மூன்றாம் நாள்

$
0
0
குளிர் காலை அன்பு வணக்கங்கள் நண்பர்களே !!



கோபம் வரும்போது காச் மூச் என்று குழந்தைகளிடமோ அல்லது நம் கோபம் எங்கு செல்லுபடி ஆகிறதோ அங்கு கத்திவிடுகிறோம். அதே கோபம் நம் மேலாளரிடமோ அல்லது நம்மை விட வயது மூத்தவர்களிடமோ அல்லது நாம் அதிகம் மதிக்கும் நேசிக்கும் நபரிடமோ நம் கோபம் செல்லுபடியாவதில்லை. ஏனெனில் நாம் கோபத்தை அவர்களிடம் காண்பிக்க தயங்குகிறோம். ஏன்?? நம் கோபம் அவர் மனதை காயப்படுத்திவிடுமோ என்று பயப்படுகிறோம்.

இது ஒருப்பக்கம். அதே சமயம் உரிமை இருக்கும் இடத்தில் கோபமும் வெகு இயல்பாய் வந்துவிடுகிறது.  மூன்றாம் நபரிடம் ஏற்படும் கோபத்தை நாம் வார்த்தைகளை கட்டுப்படுத்தி மௌனமாக இருந்துவிடுகிறோம். அலுவலகத்தில் மேலாளரோ அல்லது உடன் பணி புரிபவரோ ஏதாவது நம் மனம் வருந்தும்படி கோபப்பட்டால் பதிலுக்கு கோபத்தை காட்ட இயலாமல் அதை அதோடு விடவும் செய்யாமல் மன வருத்தத்தோடு பத்திரமாக அந்த கோபத்தை கட்டுச்சோறாக கட்டி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறோம்.

அங்கே விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளை மீதோ அல்லது சீரியல் பார்த்துக்கொண்டு அக்கடா என்று உட்கார்ந்திருக்கும் அம்மா அப்பா மீதோ, அல்லது சமையலறையில் பாத்திரத்தை உருட்டிக்கொண்டிருக்கும் மனைவி மீதோ, அல்லது வீடு துடைக்க, சாமான் கழுவ வந்திருக்கும் வேலையாள் மீதோ சிந்தாமல் சிதறாமல் பத்திரமாக கட்டி கொண்டு வந்த கோபத்தை அப்படியே அபிஷேகம் செய்துவிடுகிறோம்.  நம் மீது காட்டப்பட்ட கோபத்தின் வீரியத்தை தாங்க இயலாமல் பெற்றதை திரும்ப வார்த்தைகளாக  கொட்ட இயலாமல் அந்த இயலாமையை நம்மை விட இயலாமையால் இருப்போரிடம் கொட்டிவிடுகிறோம். இது சரியா தவறா?

நம்மை எல்லோர் முன்பும் கோபமாக கத்தும்போது நாம் அவமானமாக உணர்வது போல தானே நாம் நம் கோபத்தை பிறர் மீது காட்டும்போது அவர்களும் இப்படி அவஸ்தை படுவார்கள்? இதை மனசுல வெச்சுக்கோங்க.. கோபம் வந்தால் கொட்டிடுங்க. அதுக்காக மனசுல வெச்சு புழுங்கவோ வருத்தப்படவோ கூடாது.

வரும் கோபம் நியாயமானதாக இருந்தாலும் சரி அதே கோபத்துடன் உடனே வார்த்தைகளை உதிர்க்காமல், ரெண்டே நிமிஷம் பொறுத்து அதன் பின் கோபத்தை காட்டுங்க. கோபத்தின் உக்கிரம் கொஞ்சம் குறைஞ்சிருக்கும். இன்னும் ரெண்டு நிமிஷம் பொறுத்தால், அட நாம் இப்படி கோபப்படுவது சரியா? பொறுமையா சொல்லலாமே என்று நினைக்கத்தோன்றும்.. இன்னும் ரெண்டு நிமிஷம் பொறுத்தால், அட இதுக்கெல்லாம் கோபம் எதுக்கு? நல்லவிதமாவே சொல்லுவோம்.  யார் தான் தவறு செய்யலை? யார் தான் பர்ஃபெக்ட் இங்கே? கோபம் எதுக்கு இதுக்கு அப்படின்னு நம்ம மனசே நம்மை தட்டிக்கொடுத்து கூலாக்கிவிடும்..

முயற்சித்து பார்த்துவிடுவோமா?

அட எங்களுக்கு இப்படி எல்லாம் சொல்றீங்களே நீங்க எப்படி அப்படின்னு என்னை கேட்க நினைக்கறீங்க தானே? :)  மனித இயல்புப்பா இது மனித இயல்பு... நாம ஒரு நல்லதை சொன்னால், உடனே அட நீங்க இதெல்லாம் தாண்டாமயா வந்திருப்பீங்க? அப்டின்னு கேட்ருவீங்களே.. நானும் பயங்கர கோபக்காரி தான் அதெல்லாம் முன்பு.. இப்ப அப்படி கிடையாது.

வயது ஆக ஆக மனசும் பண்படவேண்டும் தானே? கோபமும் கட்டுக்குள் வரவேண்டும் தானே? தவறுகளை பொறுமையாக கையாளலாம் தானே? சரி செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லை முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் போதும்.

நான் கோபப்படனும்னு நினைத்தாலும் கோபம் வரமாட்டேன்கிறது இப்பொழுது.  எனக்கு துன்பம் தருகிறவர்களை கூட மன்னிக்கும் பக்குவம் வந்துவிட்டது.

உடல்நலம் நன்றாக இருக்கும் கோபத்தை குறைத்துக்கொண்டால்.

க்ளாஸ் எடுத்தது போதும் தாயே. பதிவர்களை அறிமுகப்படுத்தும்மா என்று முணுமுணுப்பது கேட்கிறது. சரி சரி...

இன்றைய அறிமுகங்கள் - மூன்றாம் நாள்

இன்றைய அறிமுகங்களின் வலைதளங்கள் முகநூல் வழியாக பெற்றது.

1. தமிழ்த் தேன் சுவை தேன்
30 வருஷமாக பத்திரிகை துறையின் சாதனையாளர். சிவ வாசகம் இவர் எழுதி வெளியிட்டுள்ள அற்புத நூல். இதுவரை 8 நூல்கள் எழுதி இருக்கார்.பெரியபுராணம் புதுக்கவிதை நடையில் அருள் தொண்டர் அறுபத்துமூவர்... சிலபத்திகாரம் புகார் காண்டம் செம்மொழிச் சிலம்பு எனும் நூலாக...நடைமுறை இதழியல்.. பத்திரிகை துறைக்கு வரத்துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் சிறந்த கையேடு.

2. நந்தலாலா,காம்
அற்புதமான பல கவிஞர்களின் படைப்புகளை பார்த்து நான் பிரமித்த ஒரு அருமையான வலைதளம்.
மௌனத்தின் தண்டனை

3. வைகறை வைகறை
காலத்தடங்களை அழுத்தமாய் பதிக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
பாட்டியென்றொரு பூட்டப்பட்ட கதவு

4. உணர்வுகள்
மன உணர்வுகளை  கவிதை வரிகளாக்கி குழந்தையாய் தவழவிடுவார் எழுத்துகளில் நம்மை வரிகளில் நெக்குருக வைப்பார்..
மனதுக்கு பிடித்தவர்களிடம்

5. இரவின் புன்னகை
இரவின் அடர்த்தியில் இவரின் எழுத்துகளே புன்னகையாய். இவரின் எண்ணம், தேடல் எல்லாமே எழுத்துகளாய்..
உதிரும் நான்

6. ஓர் அழகிய கவிதை.... காதல் !!!
கவிப்பித்தனான இவர் எழுத்துகளில் காதல் கூட அழகிய அஹிம்சையான கவிதை என்று சொல்கிறார்..
அஹிம்சையாள்

7. கரந்தை ஜெயக்குமார்
எழுத்து சாதனையே இவருடைய வலைதளம்... கணிதமேதை இராமானுஜம் பற்றி அறியாதோர் வாசிக்க எளிய வரிகளில் அற்புதமாக தொடராய் எழுதி பிரமிக்க வைத்தவர். இவர் எழுத்துகள் வாசிக்காமல் நகரவே இயலாது. அத்தனை அருமையான பொக்கிஷங்கள் அடங்கிய வலைதளம்.
சிம்பனி

8. கே.பி,ஜனா
இரண்டே வரிகளில் தமிழாக்கம் செய்து அதை அர்த்தமுள்ள கவிதையாக மாற்றிவிடும் வல்லமை படைத்த எழுத்துகள் இவருடையது.
நல்லதா நாலு வார்த்தை

9. வீரா
ஒரு படம் பார்க்கும்போது அதன் நுணுக்கங்கள் படம் எடுத்த விதம் எல்லாமே விமர்சனமாக இவர் எழுத்தில் மிளிரும்.. மேடை நாடகம் பார்த்துவிட்டு வந்து அந்த நாடகத்தில் பங்கேற்றவரின் நடிப்புத்திறமையில் இருந்து நாடகம் எடுத்த விதம் என்று ஒவ்வொன்றையும் சிலாகித்து எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
மீசை - குறும்படம் பற்றி

10. இனியவை கூறல்
எளியோன் எனைப்பற்றி இயம்ப ஏதுமில்லை என்று சொல்லும் இவர் எழுத்துகள் அசாத்திய விஷயங்களை சொல்லி செல்கிறது. அறிவியல் சார்ந்த விஷயங்களும், கதைகளும் கவிதைகளும் அழகாய் பகிர்கிறது.
கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை விரும்புகின்றன?

11. அன்பின் அர்த்தங்கள்
உணர்வுகள் எழுத்துகளாகி கவிதையானது இவர் வலைப்பூவில்.
நீயாகத் தான் வாழ்ந்தேன்

12. ஒருத்தியின் பார்வையில்
இவர் எண்ணங்களில் தோன்றியவை எல்லாம் எழுத்தாக மாறி வசீகரிக்கிறது.
முகப்புத்தகம்

13. மலர்ஸ் கிச்சன்
சுவையான சத்தான சமையல் குறிப்பை தந்திருக்கிறார் இவர் தளத்தில்.
முடக்கத்தான் கீரை தோசை

14. சங்கவி
நான் ஒரு எழுத்தாளனுமல்ல கவிஞனுமல்ல என்று இவர் தன்னைத்தானே சொன்னாலும்  இவர் எழுத்து சோபிக்கத்தான் செய்கிறது. மனதில் தோன்றியதை நேர்மையாக பகிரும் எழுத்து இவருடையது.
” குடி குடியைக்கெடுக்கும் ” இது யாருடைய தவறு?

15. வர்த்தகம் மற்றும் சேமிப்பு
இந்த பக்கத்தில் வர்த்தகம் மற்றும் சேமிப்பு பற்றிய அனைத்து தொகுப்புகளையும் மிக அழகாக எழுதி இருக்கிறார்.
பிள்ளைகளின் உயர் கல்வி திருமணம், கடன் வாங்காமல் திட்டமிடுவது எப்படி?

16. அந்தரத் தோட்டம்
எண்ணங்களின் வண்ணத்தோட்டம் இவரின் அந்தரத் தோட்டத்தில்..
சில ஆமைக்குஞ்சுகளும் அநாமதேய கனவுகளும்

17. எண்ணச்சிதறல்கள்
குட்டி குட்டி கவிதைகள் நிறைந்த அழகிய வலைப்பூ.
குட்டி கவிதைகள்

18. விழுதுகள்
உள்ளத்தேடல்களும்  தேடி பிடித்தவைகளும் உலக தேடல்களுக்காக சிறு பங்களிப்பு என்று சொல்லி பகிர்ந்தவை முகநூலில் மலர்ந்தவை.
விழுதுகளில் ஒரு துளி இங்கே

19. மௌனத்தின் சப்தங்கள்
இந்த சந்தோஷ விரும்பியின் அழகிய எண்ணச்சிதறல்கள் மௌனத்திலும் கவிதையின் சப்தங்களாக இனிமையாக வரிகளில்..
எனக்காகவே

20. எல்லாப்புகழும் இறைவனுக்கே
இவர் எழுதிய நோன்பின் நினைவலைகளை வாசித்து பாருங்கள். அற்புதமான பகிர்வு இது.  எழுத்துகளில் ஆத்மார்த்தம். சமையல் குறிப்புகளில் சுவையும் ரசனையும் ஒருங்கே தென்படும்.
நோன்பு நினைவலைகள்

ஒவ்வொரு நாளும் நல்லபடியாகவே விடியவேண்டும் என்று தான் பிரார்த்திக்கிறோம். அன்றைய நாள் முழுக்க நல்லதே நடக்கவேண்டும் என்றும் விரும்புகிறோம். உறங்கப்போகுமுன் கண்மூடி யோசித்து பார்க்கவேண்டும் அன்றைய நாளில் நாம் செய்த நல்லவை என்னென்னவென்று... இப்படி ஒவ்வொரு நாளும் யோசிக்க ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக ஒவ்வொரு நாளுமே நமக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே நல்லபடியாகவே விடியும்... நல்லதே நடக்கும்...

மீண்டும் மனம் கவர் பதிவர்களோடு நாளை சந்திக்கிறேன் நண்பர்களே.

அன்பு நன்றிகள் வணக்கம் !!!





வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - நான்காம் நாள்

$
0
0
மழைக்கால அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே….




நேற்று என் மகன் இபானின் நண்பனுடைய அம்மா என்னை அலைபேசியில் அழைத்தார்கள். எப்போதாவது அழைத்தால் ஒரு மணி நேரத்துக்கு குறைவாக பேசுவதை நிறுத்துவதில்லை. பெண்கள் என்றாலே இப்படித்தான். ஒரு மணி நேரத்துக்கு பேச அப்படி என்ன தான் இருக்கோ என்று நினைக்கிறீர்கள் தானே? கண்டிப்பாக யார் தலையையும் உருட்டும் பேச்சு இல்லை. மிக மிக பொதுவான பேச்சு தான். 

பழைய காலத்தில் வீடு கட்டும்போதே திண்ணை வைத்து கட்டுவார்களாம். ஆமாம் எங்கள் வீடும் இரண்டு பக்கமும் விஸ்தாரமான திண்ணையோடு இருந்ததை பார்த்திருக்கிறேன். பாட்டி அதிகாலை எழுந்து வந்து வாசல் தெளித்து விட்டு திண்ணையில் யாராவது படுத்திருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். பழைய காலத்தில் அதாவது நம் தாத்தா பாட்டி காலத்தில் கூட்டுக்குடும்பம் வெகுவாக போற்றப்பட்டது.. எது செய்தாலும் வீட்டில் மூத்தோரின் அனுமதியை வேண்டியப்பின்னரே அதை நடைமுறை படுத்தும் நிலை இருந்தது. 

எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவார்கள். வளரும் குழந்தைகள் பாட்டி சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டே தாத்தாவுடன் விளையாடிக்கொண்டே அப்பாவின் ஆகிருதியை தானும் பெற சின்ன வயதிலிருந்தே அப்பாவை ஹீரோவாக நினைத்து அப்பாவை போலவே படித்து நன்றாக முன்னுக்கு வருவது போலவே அப்பா பெரியவர்களுக்கு தரும் மரியாதையை பார்த்து பிள்ளைகளும் கற்று, அம்மாவின் மென்மையை, தாய்மையை, பாசத்துடன் சமைத்து பரிமாறும் உணவை உண்டு மகிழ்ந்து, உற்றார் உறவினரோடு சந்தோஷமாய் விருந்து கொண்டாடி விளையாடி மகிழ்ந்து கல்வி கற்கும்போதே தாத்தா பாட்டி அம்மா அப்பா அத்தை மாமா சித்தப்பா சித்தி அக்கா தங்கை அண்ணா தம்பி என்று கூட்டுக்குடும்பத்தில் வளரும் பிள்ளை பிற்காலத்தில் நல்ல ஒரு குடிமகனாக நாட்டுக்கும் நல்ல ஒரு பிள்ளையாக வீட்டுக்கும் உருவாகும். 

இப்ப இருப்பது போல் முதியோர் இல்லங்கள் தென்படாது. டிவியில் சீரியல் ஓடிக்கொண்டிருந்தாலும் பார்ப்பதற்கு ஆள் இருக்காது. இதெல்லாம் பழைய காலம்.. இப்போது??? கூட்டுக்குடும்பமாக வாழ வீடும் பெரியதாய் வேண்டும், பரந்த மனசும் வேண்டும். வாடகைக்கு அவ்வளவு பெரிய வீடு கிடைக்காதே. ஒரு அறை, ஒரு சமையலறை காமன் பாத்ரூம் இப்படி தானே இருக்கிறது. அம்மா அப்பா பாரமாகிவிடுகிறார்கள். பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேலைக்கு ஆள் வைத்தால் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு போவோர் இருப்பாரோ என்ற அவநம்பிக்கையிலும் இவ்ளோ சம்பளம் கொடுத்து வேலைக்கு வேற ஆள் வைக்கணுமா? வயதான அம்மா அப்பா இதற்கு அவசியப்படுகிறார்கள். 

ந்யூக்ளியர் ஃபேமிலி, பிரவேசி வேண்டுவோர் எக்ஸ்ட்ரா சொந்தங்களை அவஸ்தையாக நினைக்கிறார்கள். வயதானோர் வீட்டில் இருந்தால் அவர்களுடன் உட்கார்ந்து பேச டைம் இருப்பதில்லை யாருக்கும்.. எல்லோரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடவும் நேரம் இருப்பதில்லை. அப்ப என்ன தான் செய்வாங்க?? தொலைக்காட்சி இவர்களின் சமயங்களை அழகாக ஆட்கொள்கிறது. சீரியல்கள் எல்லாம் இவர்களுடைய தோழமைகள் ஆகிவிடுகிறார்கள். வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும் ஆண்கள் உடலும் உள்ளமும் அயற்சியாக இருக்க அதை போக்கும் உத்வேகத்துடன் வலை, முகநூல் என்று மேய்வார்கள். 

வீட்டில் இருக்கும் வயதானோர், வேலைக்கு செல்லாத பெண்கள், தங்கள் பொழுதைப்போக்க தொலைக்காட்சியை நாடுகின்றனர். அம்மா அப்பா இப்படி அவர்கள் வேலையில் பிசியாக இருக்கும்போது பிள்ளைகள் சொல்ல நினைப்பதை, பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களை, தோழமைகளைப்பற்றி எதுவும் சொல்ல ஆள் கிடைக்காமல் வீடியோ கேம்ஸில் மூழ்கி விடுகிறார்கள். அப்போது உடலுக்கு உடற்பயிற்சியைப்போல் விளையாட்டு இருந்தது. இப்போது வீடியோ கேம்ஸ் போதுமாக இருக்கிறது.

எல்லோர் வீட்டிலும் இப்படி நடப்பதாக நான் சொல்ல வரவில்லை. ஆனால் பொதுவாக இப்படி நடக்கிறது. உண்மை. விருந்தினர் வீட்டுக்கு வந்தால் டிவியில் சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும். சீரியலில் இருந்து கண்களை அகற்றாமல் வாங்க என்று சொல்வார்கள். இந்நிலை மாறுமா? எல்லோருக்கும் வேலை படிப்பு என்று அவசரமாய் பறந்துக்கொண்டு இருப்பதால் வாரத்துக்கு ஒரு முறை எல்லோரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டு கதை பேசுவோம்.

வயதானோரிடம் அவர்கள் வாழ்க்கையை சொல்ல சொல்லி கேட்டு அந்த அனுபவத்தை நமக்கு பாடமாக எடுத்துக்கொண்டு பிள்ளைகளுடன் உட்கார்ந்து அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு, பிள்ளைகளை வீடியோ கேம்ஸ் விளையாடுவதை குறைக்கச்சொல்லி வெளியே விளையாட அனுப்பி சுறுசுறுப்பாக்கி, வயதில் மூத்தோரிடம் மரியாதையுடன் பிள்ளைகளை பழகவும் பேசவும் பிள்ளைகளை பழக்கி, நல்லதை சொல்லிக்கொடுப்போம். வலிமையுடன் தோல்வியை எதிர்க்கொள்ள சொல்லிக்கொடுப்போம், பிரச்சனைகளை கண்டு மிரண்டு பின் வாங்காமல் அதை சரி செய்யும் முயற்சியில் நம்பிக்கையுடன் முனையச்சொல்வோம்.. இப்படி பேச ஆரம்பித்து ஒரு மணி நேரம் போவதே தெரியாம பேசிக்கொண்டு இருந்தோம். அதை தான் இன்று இங்கு எழுதி இருக்கிறேன் நண்பர்களே..

போதும்மா தாயே.. வரும்போதெல்லாம் இவ்ளோ நீளத்துக்கு அறிவுரையா அடுக்கிக்கிட்டு போறியே.. நாங்க எவ்ளோ நல்ல பிள்ளைகள்.. நீ அட்வைஸ் பண்றதை நிறுத்திட்டு பதிவர்களை அறிமுகப்படுத்த தொடங்குமா என்று எல்லோரும் உரக்க சொல்வது கேட்கிறதுப்பா.. ரைட்டு போலாமா?

மனம் கவர் பதிவர்கள் – நான்காம் நாள்

1. சேட்டைக்காரன்
எழுத்துகளில் ஹாஸ்யத்தை கலந்து எழுதுவதில் வித்தகர் இவர். இவர் எழுத்தை வாசித்த பலர் இவரை சந்திக்கவேண்டும் எப்படியாவது என்று நினைத்திருக்கின்றனர். அனாயசமாக எழுதிவிடுவார் அற்புதமாய்.
கிட்டாமணியை வெட்டென மற

2.  gmb writes
உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும் என்ற எழுத்துகளுக்கு சொந்தக்காரர். வாழ்க்கையை ரசனையுடன் வாழ்கிறார் என்பதற்கு சாட்சி இவர் எழுத்துகள்.
அடி மேல் அடி அடித்தால்

3.  killergee
300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து , மரித்திருக்கவேண்டும் என்றும் இந்த சமூக மானிடனை காணும் அவா இல்லை என்னும் எழுத்துக்கு சொந்தமானவர். வித்தியாசமான எழுத்து, வித்தியாசமான சிந்தனைக்கு சொந்தக்காரர்.
காயல்பட்டிணம், கயல்விழி & காயாம்பு

4.  கட்டபொம்மன்
ஜனரஞ்சகமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர். ரசனையுடன் எழுதுவார்.
அறிமுக நாயகன்

5.  கற்றலும் கேட்டலும்
நிறைகுடம்... இலக்கியம், ஆன்மீகம், கதை, கவிதை எல்லாவற்றிலும் முதன்மை. இவர் எழுத்துகள் நிறைய நான் முன்பே வாசித்திருக்கிறேன். இவருடைய படைப்புகள் பல இணையங்களிலும் வந்திருக்கிறது. சிறப்பு பெற்றிருக்கிறது.
பிரமி

6.  மாதவன்
இவரின் எழுத்துகள் நகைச்சுவையோடு அனுபவங்கள் பலதை எழுதி இருக்கிறார். சுவாரஸ்யமாக இருக்கிறது இவருடைய எழுத்துகள் வாசிக்க.
மன்னை மைந்தர்களில் ஒருவர்.
காலேஜு டேஸ்ல நடந்தது

7.  தீராத விளையாட்டுப்பிள்ளை
இந்த தீராத விளையாட்டுப்பிள்ளையின் எழுத்துகள் மிக அற்புதமாக இருக்கிறது. பல திறமைகள் கொண்ட இவரின் தற்போதைய சாதனை என்று குறிப்பிடுவதே ப்ளாக் எழுதுவது தான். எழுத்துகள் வசப்படுகிறது இவர் கைக்கு. நாம் இவர் எழுத்துக்கு வசப்படுகிறோம்.
மன்னார்குடி டேஸ் : ஜீவா துரை

8.  நோக்கும் இடமெல்லாம் நாமன்றி
துணிச்சலான சமூக சிந்தனை எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.  ஆசிரியர். இவரின் எழுத்துகள் நேர்மையாகவும் தவறை தைரியமாக தட்டிக்கேட்கும் விதமாகவும் இருக்கும்.
தேர்வல்ல மதிப்பீடே தேவை

9.  வளரும் கவிதை
தமிழ் மீது தீரா பற்று கொண்டவர். இவர் எழுத்துகளில் இடம்பெறா தலைப்பே இருக்க முடியாது. பிறர் படைப்புகள் பிடித்ததை தன் பாணியில் விமர்சனம் எழுதி அழகாக தன் வலைப்பக்கம் போடுவார்.
முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா?

10. திடங்கொண்டு போராடு
இவர் உலகம் எழுத்துகளால் நிறைந்திருக்கிறது. எழுத்துகளாலேயே நிறைந்திருக்கட்டும் என்ற வள்ளல் எழுத்துக்கு சொந்தக்காரர்.
ரியல் எஸ்டேட் மிருகமும் - வண்டலூர் ஜூவும்

11. தூரிகையின் தூறல்
அட்டகாசமான எழுத்துக்கு சொந்தக்காரர். பலருக்கும் உதவிய எழுத்துகள் இவருடையது. நாவல்கள் எழுதி இருக்கிறார். குட்டி கவிதைகள் எழுதி இருக்கிறார். குறும்படமும் இயக்கி இருக்கிறார்.
திருமணத்தை தள்ளி வைத்துக்கொள்ளலாம்

12. ஸ்கூல் பையன்
இவரின் எழுத்துகள் எப்போதுமே ரசிக்கும்படியாக இருக்கும். இவர் எழுதும் எந்த ஒரு பதிவும் நகைச்சுவையும் ரசனையும் கலந்ததாக இருக்கும்.
டியர் எம்.டி.எஸ்

13. தளிர்
தளிர் நடையிடும் இவருடைய எண்ணங்கள் எழுத்தோவியங்கள் ஆகும் என்ற எழுத்துகள் நிறைந்த வலைக்கு சொந்தக்காரர்.
சிகரெட்டுக்கு தடையும் முதல் எச்சரிக்கையும்

14. ரூபனின் எழுத்துப்படைப்புகள்
இவரின் எழுத்துகள் கவிதைகள் சங்கமமாக, மிகப்பெரிய கவிதைப்போட்டி ஒன்றை நடத்தி அதை வெற்றிகரமாக முடித்தார். இவருடைய எழுத்துகள் சங்கமத்திலிருந்து ஒரு துளி பார்ப்போம்.
நேரில் பேசும் தெய்வங்கள்

15. இளையநிலா
தமிழ் மீது தீராப்பற்று கொண்ட எழுத்தர். சமீபத்தில் நடந்த ஒரு கவிதைப்போட்டியில் முதல் பரிசுப்பெற்ற கவிஞர்.
பூக்கூடை உள்ளே

16. சிவகுமாரன் கவிதைகள்
வெண்பாவும் எழுதுவார்.  தெம்மாங்கு தெள்ளுத்தமிழிலும் எழுதுவார். சமீபத்தில் நடந்த கவிதைப்போட்டியில் கலந்துக்கொண்டு பரிசும் பெற்றார்.
பூத்துக்குலுங்குதய்யா

17. கவிஞர் கி.பாரதிதாசன் கவிதைகள்
 கவிதைகள் கடல் போல் பிரவாகமாய் இருக்கும் இவர் வலைதளத்தில். தமிழ்ப்பற்று மிக்கவர். இலக்கணமும் இலக்கியமும் இவர் எழுத்தின் வசீகரம்.
ஓங்கி அளந்த உத்தமன் பேர் பாடி

18. இதயம் பேசுகிறது
இவரின் எழுத்துகள் மிக ஆழ்ந்தவை. அழுத்தமானவை.. உருக்கமானவை. நகைச்சுவை மிக்கது.. கோபத்தில் கூட இவர் எழுத்துகள் பேசும்.
மஞ்சப்பை

19. eraeravi
இந்த எழுத்தரை அறியாதவர் இருந்திருக்கமுடியாது. தேன் மதுர தமிழ் கிரேஸ் எழுதிய துளிர் விடும் விதைகள் கதைக்கு இவர் எழுதிய விமர்சனம் மிக அருமை.
துளிர் விடும் விதைகள் விமர்சனம்

20. வரலாற்று சுவடுகள்
அழுத்தமான சுவடுகளை பதிக்கும் பல பதிவுகள் இவர் வலைதளத்தில் நான் வாசித்திருக்கிறேன்.
சுற்றுப்புற சூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்

ரோட்டில் நடந்து செல்லும்போது எதிர்ப்படுவோரைப்பார்த்து சின்ன புன்னகைத்தீற்றல் நம் முகத்தில் மலர்ந்தால் எதிர் வருவோர் ஒரு நொடி குழப்பமாகி பின்னர் தயக்கத்துடன் அவர் முகத்திலும் நம் புன்னகைத்தீற்றல் தொற்றிக்கொள்ளும். தெரிந்தவரை கண்டால் மட்டும் தான் நம் முகத்தில் புன்னகை மலருமா என்ன? அறியாதவர் என்றாலும் பஸ்ஸில் நம் அடுத்து உட்காருவோர், ட்ரெயினில் நம் அடுத்து உட்காருவோர், பஸ் ஸ்டாண்டில் நம் அடுத்து நிற்போர், இப்படி பலபேரை நாம் பார்க்கும் சந்தர்ப்பத்தில், ஒரு சின்ன புன்னகை  நம் நாளை மட்டுமா? எதிர் வருவோர் நாளையும் அழகாய் மலரவைக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? இறைவன் நமக்கே நமக்கென்று கொடுத்த இந்த அழகான புன்னகையை தயக்கமின்றி பகிரலாமே..  சௌந்தர்யமாக விடியட்டும் இன்றைய நாள் எல்லோருக்கும்...

நாளை மீண்டும் மனம் கவர் பதிவர்களோடு சந்திக்கிறேன் நண்பர்களே.

அன்பு நன்றிகள் வணக்கம் !!!











வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஐந்தாம் நாள்

$
0
0
விடுமுறை நாளின் அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே...



நம்முடைய நிறைவேறாத ஆசைகளை கனவுகளை நம் பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறோமா? அப்படி செய்தால் அது சரியா?  பெரிய டான்ஸராகனும் என்பது என் கனவு.. ஆனால் என் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அதனால் என்ன? நான் சாதிக்காததை என் பிள்ளை சாதிக்கும்.. நடனத்தில் சாதிக்க வைப்பேன்.

இப்படியாக தன் கனவு நிறைவேறாத ஒவ்வொரு பெற்றோரின் துடிப்பான வரிகள். இங்கே நிறைய இஞ்ஜினியர்கள். அவர்களுடைய பிள்ளைகளும் இஞ்ஜினியரிங் தான் படிக்கவேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறார்கள். டாக்டரின் மகன் டாக்டர் தான் ஆகவேண்டுமா? பெற்றோர் பிள்ளையின் பக்கம் நின்று பிள்ளையின் ஆசை அவன் கனவு என்னவென்று அறிய முயன்றால் நலம்.

பிள்ளைக்கும் தன் பெற்றோரின் கனவை நாம் நனவாக்குவோம் என்று முயன்று சாதிக்க முன்னேறுவது இயல்பான விஷயம். அப்படி இல்லாமல் போய், பிள்ளையின் கனவு வேறு மாதிரியாக இருந்துவிட்டால்? இஞ்ஜினியருக்கு தான் படிக்கவேண்டும் என் பிள்ளை.. அதனால் அந்த பிள்ளையை படி படி படி என்று சிரமப்படுத்துவது சரியல்லவே. அந்த பிள்ளைக்கு வேறு எதுவாகவோ ஆக விருப்பம்..

அதன் லட்சியம் வேறு ஏதாவதாக கூட இருந்திருக்கலாம்.. அதனால் பெற்றோர் தன் கனவை தன் பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளுமுன், பிள்ளையின் கனவு லட்சியம் என்னவென்று அறிந்து அதில் முன்னுக்குக்கொண்டு வர பிள்ளைக்கு துணையாக நின்று அவன் சாதனையில் பங்கேற்றுக்கொண்டால் பிள்ளையின் லட்சிய பெற்றோர் ஆவார். அது நிச்சயம்..

காலங்கார்த்தால ஆரம்பிச்சிட்டியா என்று கேட்டுவிடுமுன் சுருக்க முடித்துக்கொள்கிறேன் என் பிரதாபத்தை.. பதிவர்கள் அறிமுகத்துக்கு போய்விடுவோமா?

மனம் கவர் பதிவர்கள் - ஐந்தாம் நாள்


1.  தனி மரம்
தனிமரம் என்று சொல்லிக்கொள்ளும் வலைதளத்துக்கு சொந்தக்காரரான இவரின் எழுத்துகள் மசாலா சேர்த்த வேர்க்கடலை சாப்பிட எத்தனை சுவையோ அதுபோல் இவரின் விமர்சன வரிகள் அத்தனை ரசனை.
கையறு நிலை

2.  கலா தென்றல்
தென்றலின் வலைதளத்தில் சென்று சற்றே இளைப்பாறலாம். எழுத்துகள் அங்கே கவிதையாய் மிரட்டும், குழந்தையாய் கொஞ்சும், தாய்மையாய் கனிவை பொழியும். எழுத்துகள் இங்கே ஜனரஞ்சகமாய் மிளிரும்.
மூச்சை தின்று தின்று

3.  ஆயுத எழுத்து
ஆங்காங்கே நிகழ்பவைகளை, நிகழ்த்துபவர்களை, சக, சுக, சிநேக மனிதர்களைப் பற்றியும் சுவாரஸ்யமாய் படைக்கும் பல்சுவை பரிணாம எழுத்துக்கு சொந்தக்காரர்.
சந்தேகமும் நம்பிக்கையும்

4.  பயணம்
முகமும் புன்னகையும் வெள்ளந்தியாய். ஆனால் எழுத்துகள் அனாயசமாய். குறும்படம் இயக்கும் அளவுக்கு முன்னேற்றம். உலக சினிமாக்கள் பார்க்க ஒரு குவாலிஃபிகேஷன் வேண்டும் என்று சொல்லுபவர் பல சினிமாக்களின் விமர்சனம் மிக தத்ரூபமாய் எழுதி இருக்கிறார்.
IFFI 2014 - A SHORT GLANCE

5.  தில்லையகத்து
தன்னைப்பற்றிய சுய அறிமுகம் கூட் ஆங்கிலத்தில் எழுதி உள்ள வலைதளத்துக்கு சொந்தக்காரரான இந்த ஆங்கில ஆசிரியர் வலைச்சர தொகுப்பினை மிக அழகாய் எழுதி இருக்கிறார். வாசித்து மகிழ்ந்தேன். அதையே பகிர்கிறேன்.
தில்லையகத்தின் அறிவுச்சுரங்கம்

6.  ஆர். உமையாள் காயத்ரி
சுவையான சமையல் குறிப்புகள் முதல் தீராக்காதல் கொண்ட கண்ணன் வரை எழுதி  வசீகரித்த வலைதளத்துக்கு சொந்தக்காரர். கண்ணனைப்பற்றி எழுதிய ஒரு பகிர்வை பார்த்து சொக்கிப்போனேன். அதையே பகிர்கிறேன்.
மனமீர்த்த மாதவா பதில் சொல்

7.  கோவை 2 தில்லி
திருவரங்கத்து தேவதையின் வலைதளத்துக்கு சென்றால் அங்கே பல்சுவை விருந்தாய் அனுபவங்கள், சமையல் என்று அசத்தி இருக்கிறார். புதிய முயற்சியாய் செய்த சிறுதானிய பொங்கல் பற்றிய பகிர்வும் தந்திருக்கிறார்.
சிறுதானிய பொங்கல்

8.  அமைதிச்சாரல்
அமைதிச்சாரலின் எழுத்துகள் பெயருக்கேற்றார்போலவே அமைதியாய் தன்மையாய் இதமாய் பொழியும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். மென்மையின் வடிவமாய் அங்கு கவிதைகள் அழகு.
தேங்குதல் தவிர்ப்போம்

9.  பறத்தல் பறத்தல் நிமித்தம்
இவருடைய சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற சொல்லும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். இவர் எழுதும் விமர்சன வரிகளின் ரசிகை நான் முன்பே. நிலாமகளின் விமர்சன எழுத்தே இப்படி என்றால் இவருடைய படைப்பு இன்னும் எத்தனை அழகாக இருக்கும். வாசித்து பாருங்கள்.
அப்புறம் என்னாச்சு?

10. கவியாழி
இடையறாது பொழியும் கவிதை பிரவாகத்தில் சுகமாய் வாசகர்களை மிதக்க வைக்கும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.
இறைவா எங்கே நீ இருக்கின்றாய்?

11. ஊமைக்கனவுகள்
கனவுகள் வேண்டுமானால் ஊமையாக இருக்கலாம். ஆனால் இந்த எழுத்தரின் சிந்தனை எப்போதுமே எதையாவது சிந்திப்பதும் எழுதிக்கொண்டிருப்பதும் இவருடைய பகிர்வில் தெரிகிறது.. என்ன ஏன் எது என்று தெரிந்துக்கொள்ள விழையும் ஒரு மழலை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எத்தனை சுவாரஸ்யமும் அழகோ அத்தனை சுவாரஸ்யமும் அழகும் இவர் வலைதளத்தில் இருக்கும் பகிர்வுகள்.
பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு

12. ரிலாக்ஸ் ப்ளீஸ்
படிச்சுப்பாருங்க ஏமாறமாட்டீங்க என்ற உத்தரவாதத்துடன் தொடங்கும் அற்புதமான எழுத்துக்கு சொந்தக்காரர்..
உங்க வள்ளி அத்தைக்கு சாமி வருமாமே?

13. அரட்டை
காபி என்றால் அது ஃபில்டர் தான் என்பது போல அரட்டை என்றாலும் அதில் ஆக்கப்பூர்வமாக கருத்து மிக்கதாக எழுதிக்கொண்டு செல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
ஹள்ளி மனேயும் டைப்ரைட்டரும்

14. ஆறுமுகம் அய்யாசாமி
எழுதும் விஷயத்தை சுவாரஸ்யத்துடன் நகைச்சுவையை மிதமாக கலந்து பகிர்வதில் முதன்மையானவர் இந்த எழுத்தர். இவருடைய பகிர்வை படித்ததும் சிரிப்பு வந்தாலும் யோசிக்கவும் வைத்தது.  சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த எழுத்துகளின் சொந்தக்காரர்.
கொள்ளையோ கொள்ளை

15. செய்தாலி
அடர் மழை அடாது பெய்துவிட்டு மழை ஓய்ந்தாலும் சிலுசிலுப்பும் சாரலும் எப்படி தொடர்ச்சியாக இருந்துக்கொண்டிருக்குமோ அதுபோல் கவிதை மழையில் சுகமாய் நனையவைத்துக்கொண்டே இருப்பதில் வித்தகர். கவிதையும் ஜனரஞ்சகமாக, சமூக சிந்தனைகள், அனுபவங்கள், காதல் கவிதைகள் என்று எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர்.
சலாவுதீன் காக்கா

16. சைக்கிள்
இவர் எழுதும் கவிதை வாசிக்கும்போதே வாசிப்போரின் சுவடு எங்கோ அதில் பதிந்திருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை தரவைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர். கவிதையின் வரிகள் மட்டுமல்லாது அதற்கு வைக்கும் தலைப்பே வெகு அழகாக ரசனை மிக்கதாக இருக்கும் இவர் வலைதளத்தில்.
களிச்சிற்றலை

17. டாக்டர் பி.ஜம்புலிங்கம்
இன்றைய மாணாக்கர்கள், இளைஞர்கள், இளைஞிகள் அறிய வேண்டிய அவசியமான பழைய கால பொக்கிஷத்திலிருந்து நிறைய அரிய விஷயங்களை கண்டுப்பிடித்து ஆராய்ச்சி செய்து அதை அப்படியே நமக்கும் பகிரும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.
தஞ்சை பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள்

18. எனது எண்ணங்கள்
ஓய்வு வேலைக்கும், உடலுக்கும் மட்டும் தானே அன்றி மனசுக்கோ எழுத்துக்கோ சிந்தனைக்கோ அல்ல என்று நிரூபித்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர். ஆத்மார்த்த எழுத்துகளை வரைவதில் நிகர் இவரே. இவருடைய பகிர்வுகள் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும், உருக்கமாகவும் இருக்கும். யோசிக்க வைக்கும்படியாகவும் இருக்கும்.
மார்ச் மாதம் சம்பளம் இல்லை

19. குழல் இன்னிசை
இவருடைய எழுத்து நடை மிக எளியதாக எல்லோரையும் சென்று அடையும் விதமாக மிக அருமையாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில், சொல்ல நினைத்த கருத்துகளை ஆழமாய் அழுத்தமாய் நெஞ்சுரத்தோடு எழுதும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். வலைதளத்தின் பெயர் குழல் இன்னிசை என்ற பெயர் வைத்ததில் இருந்தே இவர் கண்ணனுடைய நேசத்துக்குரியவர் என்பதும் அறிய முடிகிறது.
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம்

20.  ஆயிஷா ஃபாரூக்
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது ஒரு வகை. இப்படித்தான் வாழவேண்டும் என்பது ஒரு வகை. இந்த எழுத்தரின் ஒவ்வொரு பகிர்வும் இவர் வாழும் வாழ்க்கையை பற்றியும், இவருடைய போராட்டம்  நல்லதை நாடறிய செய்யவேண்டும் என்பதில் இருக்கும் உறுதியை பற்றியும் இருக்கும். சமூக சிந்தனையுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் நெருப்பில் தோய்த்து சாட்டையால் அடிப்பது போன்ற  கம்பீர வரிகளுக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர்.
மாற்றுத்திறனாளிகள் பாக்கியவான்கள்

வழியில் அவசரமாய் வேலைக்கு செல்லும்போது ரோடில் யாராவது மயங்கி விழுந்துவிட்டால்  மயக்கம் போட்டு விழுந்தவரை முகத்தில் நீர் தெளித்து குடிக்க நீர் கொடுத்து பக்கத்தில் இருக்கும் ஆஸ்பிடலில் சேர்த்துவிட்டு செல்வீர்களா? அல்லது ஐயோ ஆபிசுக்கு லேட்டாறதே மேனேஜர் கடுவன் பூனை லேட்டானால் மெமோ கொடுத்துடுவாரே என்று கண்டுக்கொள்ளாமல் ஓடுவீர்களா?

மனிதம் எப்போது உயிர்த்திருக்கும்???  கண் முன் யாராவது துன்பப்படும்போது பார்த்தும் பார்க்காதது போல் செல்லாமல் சட்டென்று ஓடி போய் சகாயம் செய்ய முனைவோம்.. மனிதம் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதரிடையே உயிர்த்தே இருக்கிறது என்பதின் அடையாளம் இதுவாக இருக்கும்.

இன்றைய நாள் எல்லோருக்குமே  அற்புதத்தை தரும் நாளாக அமைய வேண்டிக்கொள்கிறேன் !!

நாளை மீண்டும் மனம் கவர் பதிவர்களோடு சந்திக்கிறேன்.

அன்பு நன்றிகள் வணக்கம் !!



வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஆறாம் நாள்

$
0
0
சிலு சிலு சாரல் அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே...



நம்மால் முடியாததை வேறு யாராவது சாதித்தால் மனம் நிறைந்து பாராட்டும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோமா? அல்லது அவர் சாதித்ததை நம்மால் சாதிக்க முடியவில்லையே என்று மனம் வெதும்புகிறோமா? எங்க ஆபிசுல இதைப்பற்றி ஒரு சர்ச்சையே நடந்தது. நமக்கில்லாததை நம்மால் முடியாததை இவரால் நடத்தி காட்ட முடிந்ததே என்று மனம் நிறைந்து பாராட்டும் மனப்பாங்கு நம்மில் எத்தனைப்பேருக்கு இருக்கிறது. நேர்மையாக சொல்லவேண்டும் என்றால் நம்மில் இப்படி ஒரு எண்ணம் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கிறது.

நம்மைக்கண்டு கற்று வளரும் குழந்தைகள் முன்பே நாம் ஒரு ரோல் மாடலாக திகழ வேண்டாமா? பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நல்லவை சிறுவயதில் இருந்தே சொல்லிக்கொடுத்து வளர்ப்போமா?  தம்பி நீ செய்யாததை அந்த குழந்தை செய்து காட்டிடுத்து பார்.. நீயும் அதைப்போல் செய்யவேண்டும் என்ற உத்வேகத்தை அந்த குழந்தை உனக்கு உதாரணமாய் காட்டி இருக்கான் பார் என்று பாசிட்டிவாகவே சொல்லி வளர்ப்போம். அவன் ஜெயிச்சிட்டான்.. பாரு என்று குத்தி குத்தி பிள்ளையை குதறும்போது பிள்ளை மனதில் தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது.

அந்த பிள்ளை வளர்ந்தப்பின்னரும் ஜெயிப்பவரை பார்த்து மனதில் பொறாமை உணர்வை வளர்த்துக்கொண்டு சாதித்தவரை மனம் நிறைந்து பாராட்டும் குணத்தை வளர்த்துக்கொள்ள தவறிவிடுகிறது. இந்த மனப்பான்மை நம்மில் வராமல் இருக்க, நாமும் நல்லவை காணும்போதும் திறமைகளை பிறர் சாதித்து காட்டும்போது பாராட்டும் நற்குணத்தை நம்முள் வளர்த்து கொள்வோமாக.

என்ன இன்னைக்கு ரொம்ப இழுக்காம சுருக்க முடிச்சிட்டேனா முன்னுரையை ?

மனம் கவர் பதிவர்கள் - ஆறாம் நாள்

1.  மனவிழி
கண்ணால் பார்ப்பதெல்லாம் பார்க்கும் பார்வையில் இல்லை, எப்படி பார்க்கிறோம் மனம் கொண்டா அல்லது கண் கொண்டா என்று சொல்லி செல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர். மனதுக்கு விழி இருந்தால் அது கண்டிப்பாக எப்படி செயல்படும், மனசாட்சி ஒருபோதும் தன் நிலை மாறி தவறு பாதையில் செல்லாது என்பதை அடித்துச்சொல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர். இவர் எழுதும் எளிய கவிதையி  அர்த்தங்கள் ஆழ்ந்து இருக்கும்.
நதிமூலம்

2.  ஷீநிசி கவிதைகள்
மதத்தின் பெயரைச்சொல்லி அடித்துக்கொள்ளும் மனிதரிடையே மதங்களை மறந்து மனிதத்தை நேசிக்கும் நாள்  தான் மனிதம் பிறந்த நாள் என்று அழுத்தமாய் சொல்லி செல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர். குட்டி குட்டி நாலு வரி கவிதையில் கூட நம்மை இழுத்து நிற்கவைத்துவிடும் வலிமையான கவிதைகளின் சொந்தக்காரர். பல வருடங்களுக்கு முன்பே இவருடைய நான்கு வரிகளின் கவிதைகளில் சாராம்சத்தை நச் என்று சொல்லிவிடும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம்.
உதிராத நினைவுகள்

3.  செல்வா ஸ்பீக்கிங்
ஹலோ மைக் டெஸ்டிங் செல்வா ஸ்பீக்கிங்... ஒன்... டூ... த்ரீ...  நான் ஜஸ்ட் பகிர்கிறேன் அவ்வளவே என்று சொல்லி எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர்..
போலாம் ரைட்டு கடவுள் நேரில் வர வேண்டாம்

4.  அவர்கள் உண்மைகள்
இந்த மதுரை தமிழனின் எழுத்துகள் அரசியல் சமூகம் தொழில்நுட்பம் நகைச்சுவை எல்லாமே சுவாரஸ்யமாக எழுதி படிக்கவும் ரசிக்கவும் வைப்பவை.
கவலைகளும் கண்ணீர் துளிகளும்

5.  எளியவை
எளியவை என்று வலைதளத்துக்கு பெயர் வைத்திருந்தாலும் இவருடைய எழுத்துகள்  நேர் சிந்தனைக்கோட்டில் சென்று சிந்திக்க வைக்கிறது.
காசிருந்தால் இங்கிருக்கவும்

6.  ஷண்முகப்ரியனின் படித்துறை
மனம் என்ற நதி ஓடிக்கொண்டே இருக்கிறது அதன் படித்துறையில் என்ற வாசகத்துடன் இவருடைய வலைதளம் மிளிர்கிறது. சிறுகதைகள் சொல்லும் பாடம் மிக அற்புதம்.
ஒரு நாயும் ஒரு சன்னியாசியும்

7.  மனசு
சிறகை விரிக்கும் சிந்தனைகள் ரெக்கை கட்டி பறக்கும் மனம் போல் எழுத்துகள் எல்லோரையுமே சென்று அடையும் வகையில் மிக அருமையாக எழுதுகிறார்.
பந்தயம்

8.  மன அலைகள்
ரிட்டையர்மெண்ட் வாழ்க்கையை மிக பயனுள்ளதாக பிறருக்கு பயன்படும் வகையாக எழுத்து பூஞ்சோலை ஒன்றை அமைத்து அதை எல்லோருக்கும் பகிர்கிறார். எழுத்துகள் ஒவ்வொன்றும் நேர்மை சொல்லும் உச்சம்...
இயேசுவின் கடைசி யாத்திரை

9.  கரை சேரா அலை...
எண்ணத்தூறல்களின் சங்கமம் எப்படி இருக்கும்?? இவருடைய எழுத்தின் அலைகள் ஓய்வதே இல்லை.. கரை சேர்வதும் இல்லை. ஆனால் வாசிப்போர் மனதில் அழகாய் சிம்மாசனமிட்டு அமர்ந்துக்கொள்கிறது இவருடைய பகிர்வுகள்.
வேரோடும் வேரடி மண்ணோடும்

10. ஆறாவது பூதம்
சின்னக்குழந்தைகள் சாப்பிடலன்னா உடனே அம்மாக்கள் பயன்படுத்தும் ஆயுதம் பூதம் கிட்ட புடிச்சு கொடுத்துருவேன்.  ஆனால் இந்த ஆறாவது பூதம் இருக்கே.. இதை கூப்பிட்டிருந்தால் குழந்தையை பயமுறுத்தி இருந்திருக்காது. அதற்கு பதில் அழகிய  சுவாரஸ்யமான பகிர்வுகளை கதைப்போல் சொல்லி வாசிப்போரை ரசிக்கவும் வைக்கும்.
ஒரு இனிய அனுபவம்

11. பேரண்ட்ஸ் கிளப்
குழந்தை வளர்ப்பும் குழந்தை கல்வியையும் எத்தனையோ பேர் சொல்லி வைத்தாலும் இந்த வலைதளம் பெற்றோர்களுக்காகவென்றே உருவாக்கி, குழந்தை வளர்ப்பு பற்றி மிக அருமையாக தன் எழுத்தில் சொல்லி இருக்கிறார்.
புரிந்துக்கொள்வோம் வாருங்கள்... குழந்தையை !!

12.  மகிழ்நிறை
இவர் குரலில் இருக்கும் அன்பும் உற்சாகமும் துளி கூட குறையாமல் எழுத்து பிரவாகத்தில் கொண்டு வரும் வித்தகர் இந்த இனியவர்.  இவர் பகிர்ந்த கத்தரி கைகள் ஆங்கில படம் நானும் முன்பு பார்த்து வியந்திருக்கிறேன். அதே படத்தை பற்றி இவர் கண்ணோட்டத்தில் எழுதிய பகிர்வை கண்டிப்பாக வாசித்து பாருங்கள்.
கத்தரி கைகள்

13. உண்மையானவன்
உண்மையானவன் என்று தனது தளத்துக்கு பெயர் வைத்து தனது எழுத்துகள் சத்தியம் உரைப்பவை என்ற எழுத்துக்கு சொந்தக்காரர்.
சைவ சித்தாந்த செல்வர் சொக்கலிங்க ஐயா (1856 - 1931)

14. நிகழ்காலம்
செல்லும் இடமெல்லாம் கேமராவை கொண்டு செல்வோம் புகைப்படம் எடுத்துக்கொள்ள, இவரோ தான் பார்த்துவிட்டு வந்ததை எல்லாம் எழுத்துப்படம் எடுத்துக்கொண்டு வந்து கோர்வையாக படத்துடன் பகிர்ந்துவிடுகிறார்ள் தன் தளத்தில்.
நம்பிக்கை மனுஷிகள்

15. சேம்புலியன்
ஒருவரின் அனுமதியில்லாது அவரது வீட்டுக்குள் செல்லக்கூடாது. ஆனால் இவரின் அனுமதிக்காக வேண்டியிராமல் இவர் தளத்துள் சென்று இவர் பதிவுகளை படிக்க சுவாரஸ்ய தேன் மிட்டாய்களை அழகாய் அடுக்கி வைத்திருக்கிறார். படித்து பாருங்களேன். உத்தரவுக்காக காத்திருக்காமல் உள்ளே வா என்ற சொல்லுடன் இவர் எழுத்துகள் தொடர்கிறது.
தி.நகர் ஆடி ஸ்பெஷல்

16. துளசிதளம்
துளசி இல்லாத வீடே இல்லை அப்போதெல்லாம். இப்போதோ துளசிதளத்தில் பகிர்ந்தவை வாசிக்காதவரே இருக்கமுடியாது. இவர் எழுத்தை அறியாதவர் இருந்திருக்கவே முடியாது.
கொடுமையில் இருந்து தப்பிப்பிழைச்ச பிள்ளையார்

17. குடந்தையூர்
வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்பவரின் எழுத்துகள் வீரியம் மிக்கவை. எழுத்துகளோடு நின்றுவிடாமல் குறும்படமும் இயக்கிவிட்டார் இந்த எழுத்தர்.
திருமண ஒத்திகை - 5

18. மனத் தோட்டம்
இவருடைய மனத்தோட்டத்தில் பூக்கும் எழுத்து பூக்கள் எல்லாமே அன்பின் மை தோய்த்து எழுதியவை போலும். ஏனெனில் அருமையான கவிதைகள் எல்லாமே அன்பின் வாசத்துடன் இவருடைய வலைதளத்தில் மிக அருமையான எழுத்துகளில் எழுதி இருக்கிறார்.
ஆயிரம் தவறுகள் செய்தாலும்

19. பாண்டியனின் பக்கங்கள்
ஜனரஞ்சக கவிதைகள், சிறுகதைகள் என்று நிறைந்திருக்கும் அருமையான வலைதளம் இவருடையது.
பேசுதலின் நிமித்தம்

20. காரிகன்
இசையும் எண்ணங்களும் இவருடைய விருப்பங்களும் என்று எழுதிய எழுத்துகள் பழைய இனிமையான பாடல்களைப்பற்றி இவருடைய எழுத்தில் வாசிப்பது சுகம்.
இசை விரும்பிகள் - எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி

இனிமையான புன்னகையும், அன்பையும் நிரப்பிய அக்‌ஷய பாத்திரமாய் இன்றைய நாள் எல்லோருக்கும் நலம் தரும் நன்னாளாய் அமைய வேண்டுகிறேன்.

நாளை மீண்டும் மனம் கவர் பதிவர்களோடு வருகிறேன் நண்பர்களே

அன்பு வணக்கங்கள் !!






வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஏழாம் நாள்

$
0
0
விடுமுறை நாளின்... அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே....



உதவி செய்ய சந்தர்ப்பம் இருந்து அந்த உதவி செய்தோம் என்றால் செய்த உதவியின் பலன் நம்மை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.... நமக்கு அவசியமான நேரத்தில் சரியாக நாம் செய்த உதவியின் நற்பலன் நமக்கு உதவியாக திரும்ப கிடைக்கும்..  என் அனுபவத்திலே இது பலமுறை நடந்திருக்கிறது. உதவி என்று கேட்டு வரும்போது அவர் நம் நட்பா விரோதியா உறவா, பதிலுக்கு வேறு ஏதாவது திரும்ப கிடைக்குமா இந்த உதவியால்  என்று பாராமல், உதவி செய்ய முற்படுவது தான் ஆத்மார்த்த உதவி. 

இன்னைக்கு இன்னும் சுருக்க எழுதிட்டேன் பார்த்தீங்களா?? படிக்க பொறுமை இருக்கனும்ல உங்களுக்கும்.. அதான் குட்டி குட்டியாவே எழுதிடறேன்...

இன்னைக்கு வெற்றிகரமான ஏழாம் நாள்... எனக்கு கொடுத்த பொறுப்பை நான் சரிவர செய்தேனா என்பதை வலைச்சர ஆசிரியர் குழு தான் சொல்லவேண்டும். 

மனம் கவர் பதிவர்கள் - ஏழாம் நாள்
1.  கானகம்
இவர் வலைதளத்துக்கு இந்த பெயர் வைத்ததற்கான காரணத்தை மிக அருமையாக எழுதி இருக்கிறார். விவசாயத்தை பாடமாக படித்ததாலும், காடுகளின் மீது கொண்ட தீராக்காதலும் தான் இந்த பெயர் வைக்க காரணமாக இருந்தது என்றும், ஆனால் இவருடைய எழுத்துகள் எல்லாவற்றையும் சுற்றி வந்து எழுதும் எழுத்துகள் என்று சொல்லி இருக்கிறார்.
ஆதிக்காலத்து ஒரிஜினல் நாகப்பட்டிணம் நெய் மிட்டாய்க்கடை

2.  என் ராஜப்பாட்டை
ஜனரஞ்சகமான எழுத்துக்கு சொந்தக்காரர். குடந்தையூர் சரவணன் எடுத்த குறும் படம் பற்றிய அருமையான விமர்சனம் எழுதி இருக்கிறார்.
சில நொடி சிநேகம் குறும்பட விமர்சனம்

3.  வெங்கட் நாகராஜ்
ஊர் ஊராய் சுற்றிய பயணங்களை சுவாரஸ்யமாக எழுத்தில் படமாக்கி கொண்டு வந்து பகிர்ந்து, சிந்தித்தவை எல்லாம் பதிவாக்கி, போன வாரமும் அதற்கு முன் வாரமும் வலைச்சர ஆசிரியர் களத்தில் சிறப்பாய் எழுதிய வித்தகர் இவர்.
ஃப்ரூட் சாலட் 

4.  கவிச்சோலை
களைப்பை போக்கி இளைப்பாரவைக்கும் கவிச்சோலை இவருடைய வலைதளம்..
மீண்டு வருமோ

5.  மூங்கில்வனம்
மூங்கில்வனம் மிரட்டவில்லை... மாறாய் அனுபவங்களை சொல்லி செல்கிறது.
பயணம்

6.  குரல்
இவருடைய குரல் இவர் விரும்பி ஏற்ற தொழில் பேச்சு... இவருடைய எழுத்து இவர் நேசித்த ஊற்று...
அபி உலகம்

7.  புதியவன் பக்கம்
நெஞ்சுரமும் நேர்மையும் பாரதியின் வரிகளை தன் வலைதளத்தில் முகப்பாக வைத்திருக்கும் கம்பீர எழுத்தாளர். மனதில் பட்டதை தைரியமாக எழுதும் திண்மையான எழுத்தாளர்.
கொஞ்சம் சிரிக்க கொஞ்சம் சிந்திக்க

8.  எனது கவிதைகள்
இவருடைய எழுத்துகள் யாவுமே கவிதைகளின் காதலனாகவும் குழந்தையின் ரசிகனாகவும் சொல்லி செல்கிறது... வாசிக்கும் நமக்கும் பிரமிப்பு ஏற்படுவது உண்மை.
கோடிக்கணக்கில் கொன்று குவிக்கப்படுகிறார்கள் குழந்தைகள்

9.  வித்யாசாகரின் எழுத்துப்பயணம்
கால ஏட்டில் கண்ணீராகவேனும் கரையத்துடிக்கும் ஒரு இதயத்துடிப்பு இவருடைய எழுத்துகள் என்று சொல்லும் இந்த வித்தகரின் ஒரு நூலுக்கு அணிந்துரை எழுதிய சந்தோஷம் எனக்குமுண்டு.. நிறைய புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார். அழகிய கவிதைகள், மனம் கவரும் பகிர்வுகள் என்று ஏராளம் உண்டு.
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்

10. கடற்கரை
இவருடைய எண்ண அலைகள் சங்கமிக்கும் கரை என்று சொல்லும் இந்த எழுத்தாளரின் கைவண்ணத்தில் தீபாவளி என்ற சிறுகதை மிக அருமை.
நாளைக்கு தீபாவளி ( தீபாவளி சிறப்பு சிறுகதை)

11. சிலிர்க்கும் சிந்தனை
நேர்க்கொண்ட சிந்தனை, எழுத்துகளில் தெறிப்பதுண்டு... சமூக அவலங்களை சாட்டையடியாக தன் எழுத்தில் கொண்டு வந்ததும் உண்டு. இதை தவிர இன்னும் மூன்று வலைதளமும் இவருக்கு உண்டு.
எந்தமிழே

12. கணிணி மென்பொருட்களின் கூடம்
இவருடைய எழுத்துகள், இவருடைய தீராக்காதல் எல்லாமே கணிணியை சார்ந்ததாகவே இருக்கும்.. நிறைய கணிணி சம்மந்தப்பட்ட விவரங்களை வலைதளத்தில் அசத்துகிறார் இவர்.
பெண்டா ஷோ - ஆபிசு 2013 இலவசமாக

13. நாஞ்சில் மனோ
இவருடைய பகிர்வை படித்துவிட்டு சிரிக்காமல் இருக்கவே முடியாது. அத்தனை தத்ரூபமாய் நகைச்சுவை இருக்கும் இவர் எழுத்தில்.. சுவாரஸ்யத்தை கூட்டி எழுதும் வித்தகர் இவர்.
கத்தி திரைப்படம் நாஞ்சில் மனோ விமர்சனம்

14. நிலவோடு ஒரு நெடும் பயணம்
நிலவோடு பயணிக்கும்போது உலகத்தையே மறக்கிறேன் என்று சொல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர்... இவருடைய பகிர்வை வாசிக்கும் நமக்கோ இவருடைய வலைதளத்தை விட்டு நகரமுடியாதபடி விஸ்தரிக்கிறார். அருமையான எழுத்தாளர்.
என் பள்ளி ஆசிரியர்கள்

15. KASU SOBANA
எல்லோருக்கும் பயனுள்ள நல்ல விஷயங்களை பகிரும் வலைதளத்துக்கு சொந்தக்காரர்.
எறும்பு

16. DR. PRAKASH
நிறைய நல்ல நல்ல விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
இந்தியாவின் பட்டினியை போக்கியவர்

17. அண்ணாமலையின் கவிதைகள்
காதலைப்பற்றி எழுதி சோர்ந்து போகாத எழுத்துக்கு சொந்தக்காரர்.
காதல் கற்றவன்

18. இளையநிலா ஜான் சுந்தர்
மெல்லிசை கலைஞரான இவர் எழுதியவை எல்லாம் மெல்லிசை கலைஞனின் நினைவு குறிப்புகளும், வற்றாத கவிதை பிரவாகமான எழுத்துகளும்...
தெருவில் அலையும் தேவதைகள்

19. STUDENTS TALENTS
இந்த வலைதளத்தில் எல்லா குட்டீசுடைய வரையும் திறனை வெளிக்கொணர்ந்து அதை உற்சாகப்படுத்தி வரவேற்கிறார்கள். இந்த வலைதளத்தில் என் மகன் இபானுக்கும் ஒரு முறை அவனுடைய வரைதல் திறமைக்கு முதன்மையாக வந்தான். இதோ சசிகாந்த் என்ற  ஒரு குழந்தை சாதித்ததை கொடுத்திருக்கிறேன் பாருங்கள்
SASIGANTH'S BEN 10

20. காணாமல் போன கனவுகள்
நம்ம ராஜியோட வலைதளத்தை குறிப்பிடாமல் நான் வலைச்சரத்தை முடித்துவிட்டால் சாமி வந்து என் கண்ணை குத்திவிடும்.. அட்டகாசமான பேசும்போதே டைமிங் கௌண்டர் கொடுத்து அசரவைக்கும் இவருடைய எழுத்துகள் மிக மிக வீரியம் பெற்றவை.. அது சுவையான சமையலானாலும் சரி, அனுபவ பகிர்வு கோப்பானாலும் சரி, கோயிலுக்கு சென்று ஒவ்வொரு கோயில் பற்றிய தொகுப்பானாலும் சரி. ஐஞ்சுவை அவியலானாலும் சரி. அனாயசமாக எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
கோதுமை வடை - கிச்சன் கார்னர்


என் மனம் கவர் கவிதைகள் நிறைய முகநூலில் பார்த்து வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். அவர்களும் ப்ளாக் தொடங்கி எழுதவேண்டும் என்பது என்னுடைய  பேராசை பேரன்பு மிக்க பேராசை. ஏனெனில் முகநூலில் மூழ்கி இருக்கும் இவர்களுடைய தொகுப்புகள் அப்படியே போய்விடாமல் ப்ளாக் தொடங்கி அதில் பதிந்தால் தன் சொந்தவீட்டில் பதிந்தது போன்றதொரு மனதிருப்தியை தரும்.  நிறைய பேருடைய பகிர்வுகள் வாசித்திருந்தாலும் என்னால் அத்தனையும் பகிர இந்த ஒரு நாள் போறாது. நேரமும் இல்லை. அதனால் ஒரு சிலருடைய பகிர்வை மட்டும் பகிர்கிறேன்.

(முகநூலில் இருந்து)

யதார்த்த வரிகளில் அழகிய கவிதை பூத்துவிடும் இவர் எழுத்தில்....


தேவதைகள் புடைசூழ
ஆடுகளத்திற்கு வந்தார்
கடவுள்
போட்டியின் துவக்கத்திலிருந்து
சாத்தானின் கையே ஓங்கியிருந்தது
அவரின் சாதுர்ய வியூகத்திற்கு
ஈடு கொடுக்க முடியா
கடவுள்
நடுவருடன் ஒப்பந்தித்தார்
இந்தமுறை
கடவுள்
வெற்றிப் பெற்றதாய்
அறிவிக்கப்பட்டது
சாத்தான் வசம்
அதிகமாகிக்கொண்டிருந்தது
தேவதைகளின் எண்ணிக்கை.
யாழி

நிகழ்வுகள் கவிதையாகிவிடும் அற்புதம் இவர் எழுத்துகள்....


வடை கதைகளை 
தனியே 
புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் 
பாட்டிகள். 
ச்சோட்டா பீமின் 
லட்டுகளை கவனித்துக்கொண்டிருக்கின்றன
காக்கைகள்.
ஊர் புகுந்து
வடை கடைகளை
துவங்கிவிட்டன
நரிகள்.

மனம் நெகிழவைக்கும், உருகவைக்கும், சிரிக்கவும் வைக்கும் இத்தனை ஜனரஞ்சகமான எழுத்துக்கு சொந்தக்காரர்..




அழுக்கு அன்னப்பூரணி

புன்னகையுடன் 

மீன்களுக்கு உணவிட்டவள்
யாருமறியாமல்
தவளைகளுக்கும் உணவிடுகிறாள்.

உணவுண்டு கிளிகள் பறந்தபின்
காகங்களுக்கென 
தண்ணீர் வைக்கிறாள்

அச்சமின்றி 
தெருநாய்களுக்கு 
முத்தம் கொடுக்கிறாள்

வெகு கவனமாக
தளும்பாமல் தண்ணீர் கொண்டு
பேப்பர் பொறுக்குபவருக்கு
தருகிறாள்

நாட்டி கேர்ள் 
அல்லது
டர்ட்டி கேர்ள் என்கிறார்கள்
எல்லோரும்

நானோ லோக நாயகி 
அன்னபூரணி என்கிறேன்.!


4.  கனிமொழி.ஜி
கனிய கனிய மழலை மொழியும் குரல்... ஆனால் எழுத்திலோ ஆணித்தரமான கருத்துகளுடன், இனிமையான மென்மையான கவிதைகளுடன் இவருடைய எழுத்துகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது..

மெல்லிய கயிரால் பிணைக்கப்பட்டு
உறங்கிக் கொண்டிருக்கிறது
உள்ளே என் மிருகம் ....
உறுதியான கொம்புகளோ
வளைந்த கூர்நகங்களோ 
நீண்டு குதறும் பற்களோ
கொலைக் குரூரமோ இல்லவே இல்லை....
ஆனாலும்
முட்டிபிராண்டிகவ்வி
மூர்க்கம் செய்யும் அதை
மிருகம் என்கிறான் வருடிக்கொடுத்தவாறு.....

எழுத்துகளில் சில சமயம் மென்மையும், சில சுமயம் சூறாவளியும் காணலாம் இவர் தொகுப்பில்.


தாயாக உனை மடியேந்தவில்லை
தந்தையாகத் தோள் சுமக்கவில்லை
முன்பிறந்து வழி நடத்தவில்லை
பின்பிறந்து பின் நடக்கவில்லை
கரம் பற்றித் துணை ஆகவில்லை
உன் சேயாய் உலகு புகவில்லை
இத்தனை வாய்ப்புகள் மறுதலிப்பு
இறைவனின் அகம் என்னவோ...
தாயாய் பாசம் காட்டிட
தந்தையாய்த் தவறு களைந்திட
முன் பின்னாக வேண்டிய
இடம் நின்று இணை நடந்து
துணையாய் கரம் வலுவாக்கிட
சேயாய் செல்லம் கொஞ்சிட
அனைத்துமாய் தனித்துவமாய்
கலம் வைத்த நீராய்...
இமை மூடும் நாள் வரைக்கும்
நெஞ்சில் உனை சுமந்திருக்க
அன்பில் உனைத் திளைத்திருக்க
உறக்கத்திலும் நினைத்திருக்க
உனக்காகத் துடித்திருக்க
தேவையெனில் உயிர் கொடுக்க
இறையளித்த அனுமதிப் பத்திரம்
நட்பெனும் அட்சயப் பாத்திரம்..!!
தினா.


இவருடைய பக்கம் போய் பார்த்தால் அத்தனை சுவாரஸ்யம் இவருடைய எழுத்துகள்.. சுவாரஸ்யம் மட்டுமில்லை... மனசுக்கே றெக்கை கட்டி பறக்க வெச்சிரும்.. அத்தனை உற்சாக வரிகள் இவருடைய எழுத்துகள்.

அழகான காலைப்பொழுது


இன்று உழவர் சந்தையிலே நடந்த சுவாரஸ்யமான விஷயம்...
கீரைக்காரப் பாட்டியிடம் மணத்தக்காளிக்கீரை கேட்க,
"எல்லாம் தீந்துடுச்சு கண்ணு.. இந்த உதிரிக் கீரைதான் இருக்கு....அஞ்சு ரூபா குடு சாமி.... "
என்று இரண்டு கைப்பிடி கீரையைக் காட்ட,
நான் .. "குடுங்க பாட்டி, அது ஒரு துவையலுக்கு ஆகும்ல .."என்று வாங்கிப் பையில் வைத்தேன்.

பக்கத்துக் கடை அம்மிணி வாழைப்பூ, தண்டு எல்லாம் விற்பவர்..அதைக் கேட்டதும்,
"என்னது....? இந்தக் கீரைலே துவையலா ?? அது எப்படி....?? கசக்காது ...? "
என்று கேட்கவும்....
"ஆஹா.... !!! சிக்கீட்டாண்ய்யா சேகரு"என்று.... நான் கையிலே வைத்திருந்த காய்கறிக்கூடையைக் கீழே வைத்து விட்டு,
சுற்றிலும் நான்கைந்து பேர் நின்று ஆவலோடு கேட்டுக் கொண்டிருக்க..
"உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ,மல்லி விதை, வர மிளகாய் வறுத்து, சின்ன வெங்காயம் வதக்கி, கூட இந்தக் கீரையையும் நல்லா வதக்கிட்டு, கொஞ்சம் தேங்காய் , உப்பு புளி வச்சு அரைச்சா .... துவையல் ரெடி..."என்று சொல்லி, இதே போல கரிசலாங்கண்ணி , பொன்னாங்கண்ணி , முருங்கைக்கீரை.. முசுமுசுக்கை என்று
என்னென்ன கீரையில் துவையல் அரைக்கலாம்... எப்படி சமைக்கலாம் என
வகுப்பெடுக்க ஆரம்பித்து விட்டேன்.
அங்கிருந்த பிரண்டைக்கட்டைக் காட்டி ஒரு இளம் தம்பதி..
"இதை என்ன செய்ய...?"என்று கேட்க ..
"அதே போலத் துவையல் செய்யலாம்ங்க.. கீரைக்குப் பதிலா ..பிரண்டையை நல்லா சுத்தம் செஞ்சு, நல்லெண்ணை விட்டு நல்லா பொன்னிறமா வதக்கி... அதே பொருட்களோட சேர்த்து அரைங்க.
ஆனா, இதை சுத்தம் பண்ணறது கொஞ்சம் கவனமா செய்யணும். கைய்யிலே எதாவது எண்ணெயைப் பூசிட்டு, இல்லன்னா மெலிசான கையுறை போட்டுட்டு தோல் எடுக்கணும் இல்லேன்னா கையெல்லாம் அரிக்கும் "என்று தொடர்ந்தது என் வகுப்பு.
ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்திற்கு மேல்... அங்கே ஒரு அருமையான கலந்துரையாடல்...!
"கண்டிப்பா நாமளும் பிரண்டை சட்னி செய்யணும்.. "என்றபடி ஒரு கட்டுப் பிரண்டையை வாங்கிக் கொண்டு தம்பதியர் நகர,
"அக்கா இனிமே கையிலே கிடைக்கற கீரையை வதக்கித் துவயலா அரைச்சிட வேண்டியதுதான் ... "என்று வாழைப்பூக் கடைத் தங்கை சந்தோஷிக்க ....
பை நிறையக் காய்கறிகளும் மனம் நிறைய திருப்தியுமாய்.....
புன்முறுவலோடு வீடு திரும்பினேன் . அழகானது என் காலைப் பொழுது.. 


இந்த ஏழு நாட்களும் ஊர் ஊராக சென்று ஒவ்வொருடைய பதிவுகள் வாசித்து அதை வலைச்சரத்தில் பகிர எனக்கு மூன்றாம் முறையாக வாய்ப்பு கொடுத்த சீனா அண்ணாவுக்கும் பொறுமையாக நான் எழுதிய முன்னுரை, பகிர்ந்த வலை முகவரிகள், அறிமுகப்படுத்திய பதிவர்கள் சென்று வாசித்து, வாசித்தற்கு கருத்தும் ஊக்கமும் உற்சாகமும் தரும் பின்னூட்டங்களும் கொடுத்து உடன் பயணித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....

ஒரு சிலரிடம் பணம் இருக்கும் ஒரு சிலரிடம் பணம் இருக்காது, ஒரு சிலரிடம் பணம் அதிகமாக இருக்கும், பொருள் இருக்கும், வசதிகள் இருக்கும், ஒரு சிலர் அன்றாட தேவைகளுக்கே தினம் தினம் போராடிக்கொண்டு இருப்பார்கள். இப்படி இயந்திரமயமாகிவிட்ட உலகில் ஒருவருக்கொருவர் பகிரக்கூடிய அன்பு மனதில் பெருகி இருக்கும்போது அதை பகிர தவறாதீர்கள்... வாழ்க்கை இனிமையானது... ஒவ்வொரு நாளும் அற்புதமாவது அன்பின் புன்னகையை தவறாமல் முகத்தில் ஒட்டிக்கொள்வது...அன்பை பகிர்வது...

டிசம்பர் 1 முதல் அடுத்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்க வரும் அடுத்த வலைச்சர ஆசிரியருக்கு மனமார்ந்த அன்பு வாழ்த்துகள் !!!

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் !!







அன்புச் சகோதரி மஞ்சு பாஷினி வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை உயர்திரு பழனி கந்த சாமி ஐயா அவர்களிடம் ஒப்படைக்கிறர்.

$
0
0
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் (30.11.2014 ல்)  முடியும் வாரத்திற்குஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமைத் தங்கை திருமதி மஞ்சு பாஷினி  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 131
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 184
பெற்ற மறுமொழிகள் : 274
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 38
வருகை தந்தவர்கள்      : 1866



அன்புச் சகோதரி மஞ்சு பாஷினியினைப் பாராட்டி நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்பி வைப்பதில் பெருமையுடன் கூடிய பெரு மகிழ்ச்சி  அடைகிறேன்.



01.12.2014 முதல் துவங்கும் வாரத்தில் இருந்து ஒரு வார  காலத்திற்கு ( 07.12.2014  ) ஆசிரியப் பொறுப்பு ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  இணக்கம் தெரிவித்த உயர்திரு பழனி கந்த சாமி ஐயா அவர்கள்   நாளை ( 01.12.2014 ) காலை முதல் தான் ஏற்ற பணீயினைச் சிறப்பாகச் செய்யும் வண்ணம் - அறிமுகப் பதிவுகளை வெளியிட்டு தான் ஏற்ற பொறுப்பினை   சரி வர முழு மனதுடன் நிறைவேற்ற  சம்மதித்து இருக்கிறார்.

இவருடைய வாழ்க்கைக் குறிப்பு. :

இவர் 1935 ம் வருடம் கோவைக்கு அருகிலே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தகப்பனார் சிறு வயதிலேயே கோவை நகரத்திற்கு குடி பெயர்ந்தவர். இவர் தன்  சிறு வயது  முதல் இன்றுவரை இவருடைய வாசம் கோவை நகரமே.

இவரது  படிப்பு ஒன்றாம் வகுப்பிலிருந்து பி.எச்.டி. வரை கோவையிலேயே முடித்தார்.. விவசாய இலாக்காவில் 1956 ம் வருடம் சேர்ந்து பல பதவிகளில் வேலை பார்த்து 1994 ம் ஆண்டு பணி நிறைவு பெற்றார். பணிக் காலத்தில் ஸ்வீடன், நெதர்லாந்து, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா ஆகிய வெளி நாடுகளுக்குச் சென்று  வந்திருக்கிறார்,

இவருடைய பொழுது போக்குகள், கர்னாடக இசை கேட்டல், புத்தகங்கள் படித்தல், சுற்றுலா செல்தல் ஆகியவை ஆகும். இவருடைய நண்பர் ஒரு பதிவு வைத்திருந்ததைப் பார்த்து இவரும் பதிவுலகில் 2009 ம் ஆண்டு அடிஎடுத்து வைத்தவர்.  இது வரை சுமார் 700 பதிவுகள் பதிந்திருக்கிறார்.

உயர்திரு பழனி கந்த சாமி அவர்களை வருக ! வருக ! என வரவேற்று நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை ஏற்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி சம்பத் குமார் 

நல்வாழ்த்துகள் பழனி கந்த சாமி

நட்புடன் சீனா 

என்னைப் பற்றி...

$
0
0

ஒரு சினிமாவில் வடிவேலு “நானும் ரவுடிதான்” என்று சொல்லிக்கொண்டு போலீஸ் ஜீப்பில் போய் தானாக ஏறிக்கொள்வார். உலகத்தில் ரவுடி என்ற அங்கீகாரம் இருப்பதில் பல சௌகரியங்கள் உண்டு.அது போல தமிழ் பதிவுலகத்தில் “நானும் பதிவர்தான்” என்று சொல்லிக்கொள்ள ஒரு அளவுகோல் உண்டு. அவர் “வலைச்சரத்தில்” ஒரு முறையாவது ஆசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். வலைச்சரம் அவ்வளவு பிரபலமான பெயர் பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை எனக்களித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் வலைச்சர பொறுப்புக் குழுவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முன்பே எனக்கு வரவேற்பு தெரிவித்துள்ள அனைத்து நண்பர்களுக்கும், சகோதரி மஞ்சுபாஷிணி அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு.சீனா ஐயா பதிவுலகத்திற்கு ஒரு பெரும் தொண்டு ஆற்றி வருவது அனைவரும் அறிந்ததே. வலைச்சரத்தைப் பற்றி கேள்விப்பட்டிராத தமிழ் பதிவர்கள் யாரும் இருக்க முடியாது. அதை ஆரம்பித்தது பலரின் கை வண்ணமாக இருந்தாலும் அதை 2007 லிருந்து பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தி வருவது திரு. சீனா ஐயா அவர்களே. அவர்களின் துணைவியாரும் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கிறார்கள்.
              

(திருப்பூர் ஜோதிஜியின் “டாலர் நகரம்” புத்தக வெளியீட்டு விழாவில் 27-1-2013 ல் எடுத்தது.)

பல நாட்களுக்கு முன்பே இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள திரு. சீனா ஐயா எனக்கு அழைப்பு விடுத்தார். அப்போது எனக்கு கொஞ்சம் வசதிப்படாததால் மறுக்க வேண்டியதாய் விட்டது. இப்போது மறுபடியும் அன்புடன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதையும் மறுத்தால் நான் பதிவராக இருக்க அருகதையற்றவனாவேன். ஆகையால் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டேன். இந்தப் பொறுப்பு டிசம்பர் 1 ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு, அதாவது ஏழு நாட்கள்.

என்னைப் பற்றிய ஒரு அறிமுகப் பதிவு போடவேண்டுமென்பது ஒரு மரபு. அதனால்தான் இந்தப் பதிவு. நான் 2009 ல் பதிவுகள் பதிய ஆரம்பித்தேன். என் நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் பதிவுகள் போட்டுக்கொண்டு இருந்தார். அதைப் பார்த்த நானும் பதிவுகள் போட ஆரம்பித்தேன். முதலில் ஆங்கிலத்தில்தான் ஒரு சில பதிவுகள் போட்டேன். பிறகுதான் தமிழ் பதிவுகளைப் பார்த்து நானும் தமிழ் பதிவுகள் போட ஆரம்பித்தேன். இது வரை ஏறக்குறைய 700 பதிவுகள் போட்டிருக்கிறேன்.

என்னுடைய தளத்தின் பெயர் “மன அலைகள்”. முதலில் “சாமியின் மன அலைகள்” என்று பெயர் வைத்திருந்தேன். என் பெயரிலேயே சாமி இருக்கிறதே, பிறகு தளத்தின் பெயரிலும் “சாமி” எதற்கு என்று சாமியை நீக்கி விட்டேன். என் பெயரையும் மாற்றி “பழனி.கந்தசாமி” என்று வைத்துக்கொண்டேன். பழனி என்பது என் தந்தை பெயரான பழனிச்சாமி என்பதின் சுருக்கம். மற்றபடி பழனிக்கும் எனக்கும் தொடர்பில்லை.

நான் கொஞ்சம் அதிக சுயமரியாதை அதாவது தலைக்கனம் கொண்டவன். யாரிடமும் எந்த தயவிற்கும் போக மாட்டேன். இந்த பதிவு போட ஆரம்பித்ததும் யாரையும் உதவி கேட்கப்போகவில்லை. நானே தூக்கம் விழித்துக் கற்றுக்கொண்டேன். அடுத்ததாக மிகுந்த சோம்பேறி. ஆமையும் முயலும் கதை கேட்டிருப்பீர்கள். அதில் வரும் முயல் போல திடீரென்று வேகம் கொள்வேன். பிறகு படுத்துக் கொள்வேன்.

என்னுடைய இந்த கல்யாண குணத்தினால் இந்த ஆசிரியப் பொறுப்பு வகிக்கும்போது பல குற்றங்கள் புரியும் வாய்ப்புகள் உண்டு. அதில் முக்கியமாக பல நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்தாமல் போவது. என் வயதைக் கருத்தில் கொண்டு என் குற்றங்களைப் பொறுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அப்படிப் பட்ட பொறுமை இல்லாதவர்கள் எனக்கு “சீக்கிரமே மோக்ஷப் பிராப்திரஸ்து” என்று சாபம் கொடுத்தால் ஜன்ம சாபல்யம் அடைந்து என்றென்றும் (அதாவது மறுபிறவிகளிலும்) நன்றியுடையவனாக இருப்பேன்.

ஆனாலும் இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பை தூங்காமல்@ நிறைவேற்றி விடலாம் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். உங்கள் ஆதரவுடன் இந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்.

@ தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
   தூங்காது செய்யும் வினை - குறள்


வலைச்சரத்திற்கு ஒரு திருஷ்டி கழிப்பு

$
0
0

வலைச்சரப் பதிவுகள் பல வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றன. திரு.சீனா ஐயா அவர்கள் இதை கனகச்சிதமாக உருவாக்கி எங்கும் தடையில்லாமல் ஆற்றின் நீரோட்டம் போல் ஓடுமாறு செய்திருக்கிறார்.

இப்படியே போய்க்கொண்டு இருந்தால் திருஷ்டி விழுந்து விடும் இல்லையா? அந்த திருஷ்டி விழாமலிருக்க என் ஆசிரியப் பொறுப்பு உதவியதில் எனக்கு மகிழ்ச்சி.

இன்று என்னுடைய அறிமுகப்பதிவு காலையிலேயே வந்திருக்கவேண்டும். அடுத்ததாக சில மணி நேரம் கழித்து என் முதல் பதிவு வந்திருக்கவேண்டும். இதுதான் வலைச்சரத்தின் வழிமுறை. ஆனால் நாம்தான் எப்போதும் எல்லோரும் போகும் வழியை விட்டு விலகி, தனி வழியில் போவதுதானே வழக்கம். ரஜனிகாந்த் ஏதோ ஒரு படத்தில் "என் வழியே தனி வழி"என்று சொல்வதாக ஒரு வசனம் வரும். நானும் அந்த வர்க்கம்தான்.

வலைச்சர ஆசிரியராக நியமித்தவருக்கு வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை இரவுக்குள் வலைச்சர ஆசிரியர் குழுவிடமிருந்து ஒரு அழைப்பு மின்னஞ்சலில் வரும். அதில் Accept Invitationஎன்று ஒரு சிவப்பு பின்னணியில் ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் இன்னொரு பக்கம் திறக்கும். அதிலும் இதே மாதிரி ஒரு பட்டன் இருக்கும். அதையும் அழுத்தினால் உடனே உங்கள் பிளாக் டேஷ்போர்டில் வலைச்சரப் பதிவு தெரியும்.

நாம் வழக்கமாக பதிவு போடுவது போலவேதான் வலைச்சர பதிவுகளையும் போட ஆரம்பித்து விடலாம். சிறு பிள்ளை விளையாட்டு போலத்தான். இந்த முன் வேலைகள் இரண்டு நிமிடத்தில் முடிந்து விடும்.

ஆனால் உங்களுடைய நல்ல காலத்தினால் எனக்கு வந்த மின்அஞ்சலில் இந்த பட்டன் வேலை செய்ய மறுத்து விட்டது. யாரோ சூனியம் வைத்து விட்டார்கள். என் சந்தேகம் எல்லாம் போனவாரம் ஆசிரியர் பொறுப்பில் இருந்த திருமதி மஞ்சுபாஷிணி பேரில்தான். தனக்குப் பிறகு ஒரு பிரபல பதிவர் (நான்தான்)ஆசிரியராகப் பொறுப்பேற்று தான் பெற்ற புகழைத் தட்டிக்கொண்டு போகப் பார்க்கிறாரே என்ற நல்லஎண்ணம்தான் அவரை இப்படிச் செய்ய தூண்டியிருக்கும் என்று நம்புகிறேன்.

நான் திங்கட்கிழமை முழுவதும் சந்தோஷமாக இருந்தேன். ஆஹா, நம்மை ஆசிரியர் பொறுப்பிலிருந்து கழட்டி விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. இனி ஜாலிதான் என்று இருந்தேன். அந்த எண்ணத்திற்கு "தமிழ்வாசி பிரகாஷ்"அவர்கள் ஆப்பு வைத்து விட்டார்கள். திங்கட்கிழமை மாலை என்னுடன் தொலை, இல்லை இல்லை தொல்லை பேசியில்  பேசியவர் இதோ மறுபடியும் அழைப்பு அனுப்புகிறேன் என்று சொல்லி இரண்டு நிமிடத்தில் மறு அழைப்பு அனுப்பிவிட்டார்.

அதில் உள்ள பட்டனைத்  தொட்ட உடனே வேலை செய்தது. அடுத்த நிமிடம் என்னுடைய டேஷ்போர்டில் வலைச்சரம் தெரிய ஆரம்பித்தது. இது உங்களுடைய துரதிர்ஷ்டமே. ஒரு வாரம் என்னுடைய அறிமுகப் பதிவுகளைப் படிக்கவேண்டும் என்று உங்கள் தலையில் எழுதியிருந்தால் அது விட்டுப் போகுமா?

ஆகவே இப்படி ஒரு திருஷ்டி பரிகாரம் நடந்து, இந்த வார வலைச்சர பதிவுகள் லேட்டாக வருவதற்கு காரணமாகி விட்டது. என் அறிமுகப் பதிவை திங்கள் மாலை போட்டு விட்டேன். திங்கள் வரவேண்டிய ரெகுலர் பதிவு செவ்வாய் காலையில் வரும். எப்படியும் ஏழு நாட்களுக்குப் போடவேண்டிய ஏழு பதிவுகளையும் உங்கள் தலையில் கட்டியே தீருவேன்.

அன்பர்கள் பொறுமை காக்கவேண்டும்.

சீனியர் பதிவர்கள்

$
0
0
வலைச்சரம்முதல்நாள்  1-12-2014 திங்கட்கிழமை


நேயர்களுக்கு அன்பான வணக்கம். 

இந்தப் பதிவு நேற்றே வெளிவந்திருக்கவேண்டியது. காலத்தின் அருமையைப்  போற்றுபவர்களும் செயல்களை தள்ளிப்போடக்கூடாதென்று சொல்பவர்களும் அடிக்கடி சொல்லும் வசனம் "இன்று செய்ய வேண்டிய வேலையை நாளைக்கென்று தள்ளிப்போடாதே"என்பதாகும். ஆனால் நம் வழிதான் தனி வழியாயிற்றே. அதனால் என் கொள்கை என்னவென்றால் நேற்றைய வேலையை இன்று செய்தால் போதும் என்பதாகும். இதில் என்ன சௌகரியம் என்றால் அநேக சந்தர்ப்பங்களில் அடுத்த நாள் அந்த வேலையைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் போகும். எப்படி என் லாஜிக்.

ஆனால் இந்த வலைச்சர ஆசிரியர் வேலை அப்படி மறைந்து போவதாகக் காணோம். அது என் காலைச் சுற்றியே நிற்கிறது. வேறு வழியில்லை. ஆகவே நேற்றைய பதிவை இன்று போடுகிறேன்.

இந்தப் பதிவில் பல சீனியர் பதிவர்களை அறிமுகப்படுத்தப் போகிறேன். இனம் இனத்தோடு கலக்கிறது. அதில் என் இனத்தைச் சேந்தவர்கள் சிலரை முதலில் அறிமுகப் படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

1.கடுகு அகஸ்தியன்அவர்கள்.

இவருடைய பிளாக்க்கின் முகப்பு


பிளாக்கின் பெயர் “கடுகு தாளிப்பு” லிங்க்: http://kadugu-agasthian.blogspot.in/+
இவருடைய பிளாக்க்கின் முகப்பு
இவர் தனக்காக தேர்ந்தெடுத்திருக்கும் படம்.


இவரைப் பற்றி கூறவேண்டுமானால் ஒரு பதிவு போறாது. இன்றைய பதிவர்களில் இவர்தான் மூத்தவர் என்று நம்புகிறேன். இவரது வயது என்னவென்று சரியாகத் தெரியவில்லை.

இவர் மிக இளம் வயதிலேயே சென்னையில் தபால் இலாக்காவில் சேர்ந்து பிறகு டில்லிக்குப் போய் பணி ஓய்வு பெறும் வரையில் அங்கே இருந்து விட்டுப் பிறகு சென்னையில் இருக்கிறார்.
நான் 8 வயது முதல் வாரப் பத்திரிக்கைகளான ஆனந்தவிகடன் கல்கி ஆகியவைகளைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போதைய வாரப் பத்திரிக்கைகளில் சிறுகதை, தொடர்கதை, கட்டுரைகள், செய்தித் துணுக்குகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவை வெளியாகும். சினிமா செய்திகள் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் இருக்கும்.
அப்போது இருந்த கதாசிரியர்களில் கடுகு அவர்கள் நகைச்சவையாக எழுதுவதில் தலை சிறந்தவராக இருந்தார். நான் இவர் கதைகளை மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். புத்தக்ப பிரியர். இவரைப்பற்றிய பல தகவல்களை இவரே தன்னுடைய பதிவில் வெளியிட்டிருக்கிறார். இவரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை.
பழைய நினைவுகளை தற்போது தன்னுடைய பதிவில் பகிர்ந்து கொண்டு வருகிறார். பழமை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும் தளம்.

2.புலவர்ராமானுஜம்அவர்கள்.


இவருடைய பிளாக்கின் பெயர்:
பிளாக்கின் லிங்க்: http://www.pulavarkural.info/2014/10/blog-post_24.html

இவர் தமிழாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். ஆசிரியராக பணி புரிந்த காலத்தில் தமிழாசிரியர்களுக்காக தனி சங்கம் அமைத்து அவர்களுக்காக பல சலுகைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். மற்ற பாட ஆசிரியர்களுக்குச் சமமான நிலையை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறார்.

முதல் இரண்டு பதிவர் சந்திப்புகளை திட்டமிட்டு சென்னையில் வெற்றிகரமாக நடத்தியவர். மதுரை மூன்றாம் சந்திப்பிற்கு உடல் நிலை காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை.

இந்த வயதிலும் ஐரோப்பா மற்றும் கிழக்கு நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுலா போய் வந்திருக்கிறார். பெரும்பாலும் கருத்தாழம் மிக்க கவிதைப் பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறார். இவர்தான் பதிவுலகில் எனக்குத் தெரிந்து இரண்டாவது சீனியர் பதிவர்

3.திரு. தருமி அவர்கள்.

லிங்க்: http://dharumi.blogspot.in/

தருமி

கேள்விகள்கேட்பதன்றிவேறொன்றும்அறியேன், வலைஞர்களே!


                       
கம்பீரமாகக் காட்சியளிக்கும் இவர் மதுரைக்காரர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். போட்டோ எடுப்பதில் ஆர்வம் மிக்கவர்.

கருத்தாழமும் சிந்தனைத் துணிவும் கொண்டவர். பதிவுலகத் தவறுகளை தைரியமாகச் சாடுபவர். எனக்கு ஒரு இனிய நண்பர்.

இவரின் பதிவுகள் மிகவும் சுவையாக இருக்கும். அதே சமயம் வாழ்க்கைக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். புதிய பதிவர்கள் இவருடைய பதிவுகளைக் கட்டாயம் படிக்கவேண்டும்.

4.திரு.ஜி.எம்.பாலசுப்பிரமணியன் அவர்கள்.


அவருடைய பிளாக்கின் பெயர் :

gmb writes

பிளாக்கின் லிங்க்: http://gmbat1649.blogspot.in/

இவர் ஒரு கொள்கைப் பிடிப்புள்ள பதிவர் இவரது பதிவுகள் உங்கள் சிந்தனையைத் தூண்டும்.

இவர் மத்திய அரசின் பல நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம் பெங்களூருவில் வசிக்கிறார். அவர் வீட்டிற்கு நான் ஒரு முறை சென்றிருக்கிறேன். தம்பதிகள் இருவரும் விருந்தோம்பலில் இணையற்றவர்கள். பாசத்துடன் பழகக் கூடியவர்கள்.
இவருடைய பதிவுகள் அனைத்துத் தரப்பினரும் வாசிக்கவேண்டியவை.

5.திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.


பதிவின் தலைப்பு : VAI. GOPALAKRISHNAN

லிஙுக்: http://gopu1949.blogspot.in/

இவர் பதிவையும் இவர் நடத்திய சிறுகதை விமரிசனப்போட்டியைப் பற்றியும் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவருடைய சிறுகதைகள் கலை நயம் மிக்கவை. வாழ்க்கையின் பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுபவை. இவரின் கதை எழுதும் திறன் அபூர்வமானது.

பழகுவதற்கு அன்பான மனிதர். gனக்கு இனிய நண்பர். இவர் பதிவுலகில் ஒரு மைல் கல்லாக விளங்குகிறார் என்று சொன்னால் மிகையாகாது. இவரின் உழைப்பைக் கண்டு நான் வியப்படைகிறேன்.

பதிவுலகில் யாரும் செய்யாத ஒரு போட்டியை உருவாக்கி, தன் சொந்தப் பணத்தை கணிசமாகச் செலவழித்து, பல பரிசுகள் பல பதிவர்களுக்கு கொடுத்திருப்பது ஒரு இமாலய சாதனை என்றுதான் சொல்லவேண்டும். சிறுகதைகளை யாரும் ஆழ்ந்து படிப்பதில்லை என்பது ஒரு உலகியல் உண்மை. ஆனால் சிறுகதைகளை ஆழ்ந்து படிக்கவைக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் இந்த விமரிசனப் போட்டியை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கறார்.

இப்படி ஒரு போட்டி நடத்தும் அளவிற்கு இவர் அவ்வளவு சிறுகதைகள் எழுதியிருப்பது ஒரு வியப்பு. அந்தக் கதைகளுக்கு விமர்சனம் எழுத ஒரு போட்டி வைக்கலாம் என்பது இவர் மனதில் உதித்த ஒரு அபூர்வ எண்ணம். இதை ஒரு ஒழுங்கு முறையாக நடத்தி, அதை பரிசீலனை செய்ய ஒருவரைக் கண்டுபிடித்து அந்த விமரிசனங்களில் பல பரிசுக்குரியவைகளைத் தேர்ந்தெடுத்து, பரிசுகளை திட்டமிட்டபடி விநியோகித்த திறமை அவருடைய மேலாண்மைத் திறனுக்கு ஒரு சாட்சி.

இவரை அறிமுகப்படுத்திப் பாராட்டுவதில் பெருமை கொள்கிறேன்.

6.திரு.சுப்புத் தாத்தா அவர்கள்


இவரின் தளம்: இவரின் பெயரேதான்
தன்னை தாத்தா என்று அழைத்துக் கொள்ளும் தைரியமும் மனநிலையும் எல்லோருக்கும் சீக்கிரம் வந்து விடாது. அதற்கு ஒரு மனமுதிர்ச்சி தேவை. இவருக்கு அது இருக்கிறது. போன சென்னை பதிவர் சந்திப்பில் இவரை சந்தித்தேன்.
இவருடைய பதிவுகள் புது மாதிரியானவை. என்னை மாதிரி பெரிசுகளுக்கு மிகவும் பிடித்தமானவை. பழங்காலத்து சினிமா பாடல்கள், அந்தக் காலத்து செய்திகள் ஆகியவை இவருடைய பதிவுகளில் காணலாம்.

7.திரு சீனா ஐயா அவர்கள்


இவரைப்பற்றி முன்பே கூறியிருந்தாலும் இவரும் ஒரு சீனியர் பதிவர் ஆதலால் இங்கும் குறிப்பிடுகிறேன். அமைதியும் ஆழமும் கொண்டவர். இவரைப்பற்றி அறியாத பதிவர் எவருமிலர். ஆகவே அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

8.அமரரான இரு பதிவர்கள்

பல பிரபல பதிவர்கள் அமரராகி விட்டார்கள். அவர்களை எனக்குப் பரிச்சயமான இருவர் பற்றி இங்கு நினைவு கூர்கிறேன்.

      i) டோண்டு ராகவன்.

நான் பதிவுலகத்திற்குள் பிரவேசித்த காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் இவர். வேறு யாரோ ஒருவர் இவர் பெயரை உபயோகித்து இவர் பதிவில் சில விஷமங்கள் செய்து வந்தார். அந்த நபர் சிங்கப்பூரில் இருந்து கொண்டு இந்த சில்மிஷம் செய்து வந்தார். டோண்டு ராகவன் பல முயற்சிகள் செய்து அவரை கண்ணி வைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

இவர் ஒரு மொழி பெயர்ப்பாளர். அதை முழுநேரத் தொழிலாகச் செய்து வந்தார்.

இவருடைய பதிவுகளில் நாட்டு நடப்புகளை கடுமையாக சாடுவார்.இவர் மறைவு பதிவுலகத்திற்கு பேரிழப்பாகும்.

      ii) பட்டாபட்டி வெங்கிடபதி

இவர் கோவைக்காரர். சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். பட்டாபட்டி என்ற பெயரில் பதிவு இட்டு வந்தார். பழகுவதற்கு இனிமையானவர். மலேசியா போயிருந்தபோது மாரடைப்பால் மறைந்தார்.

இந்த இரண்டு பேருக்கும் என் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

அடுத்த பதிவில் சில பிரபல பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்..




சில பிரபல பதிவர்கள்

$
0
0
வலைச்சரம்இரண்டாம்நாள்   2-12-2014 செவ்வாய்க்கிழமை


எனக்கு தற்பெருமை அடித்துக்கொள்ளப் பிடிக்காது. அதனால் என் தளத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. இருந்தாலும் என் போட்டோ இருக்கட்டுமே என்று போட்டிருக்கிறேன்.

இன்றுஎன்மனதைக்கவர்ந்தசிலபிரபலபதிவர்களைஉங்களுக்குஅறிமுகப்படுத்துகிறேன். அவர்கள்தான் ஏற்கெனவே பிரபலமானவர்களாயிற்றே, அவர்களுக்கு அறிமுகம் எதற்கு என்று சிலர் நினைக்கலாம். பூக்கடைக்கும் விளம்பரம் வேண்டிய காலம் இது.
பிரபல பதிவர்களாயிற்றே என்று அவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டால் அவர்களுக்கு உற்சாகம் குறைந்து விடும். பிறகு நஷ்டம் நமக்குத்தான்.

ஒரு சிறு குறிப்பு: வலைச்சரப் பதிவுகளின் பின்னூட்டங்களுக்கு மறுமொழி இடும்போது பின்னூட்டமிட்டவர்களின் பெயரையும் சேர்த்தே மறுமொழி இடுகிறேன். ஆனால் அவர்கள் பெயருக்குப் பின்னால் "அவர்களே"என்ற அடைமோழி சேர்க்கவில்லை. இரண்டு காரணங்கள்-ஒன்று கூடுதலாக தட்டச்சு செய்ய சோம்பேறித்தனம். இரண்டாவது பெரும்பாலானவர்கள் எனக்கு இளையவர்களே. அவர்களுக்கு இப்படி அடைமொழி சேர்த்தால் அந்நியோன்யம் இல்லாமல் போகும் என்ற எண்ணம். என் கருத்து தவறாக இருந்தால் தெரிவிக்கவும். திருத்திக்கொள்கிறேன்.

1.திருமதி இராஜராஜேஸ்வரி  அவர்கள்.

தினமும் சூரியன் உதிக்க மறந்தாலும் மறக்கலாம். ஆனால் இவர்களின் பதிவு தவறாது.
தளத்தின் பெயர் : மணிராஜ்”
லிங்க்:http://jaghamani.blogspot.com/2014/11/blog-post_30.html

இவருடைய தளத்தின் அடையாளம்



இவர் கோவையில்தான் இருக்கிறார் என்றாலும் தன்னை இது வரையில்  எங்கும் வெளிப்படுத்திக்கொண்டதேயில்லை. இவருடைய புகைப்படமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இவர் பதிவுகள் முழுவதும் ஆன்மீகப் பதிவுகளே. அநேகமாக இவர் தொடாத ஆன்மீக விஷயங்களும் எழுதாத கோவில்களும் இருக்காது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும் பல முழுமையான விவரங்களும் நிறைய புகைப் படங்களும் இருக்கும். இந்தப் பதிவுகளைத் தயார் பண்ண ஒரு ஆபீசே நடத்துகிறார் என்று நம்புகிறேன். 

இது வரை ஆயிரத்தி ஐந்நூறு பதிவுகள் போட்டிருக்கிறார். இந்த அளவு பதிவுகள் போட்டவர்களை நான் பார்க்கவில்லை.

இன்னொரு விஷயம். இவர் பதிவுகளிலிருந்து ஒரு துரும்பைக்கூட யாரும் எடுத்துக்கொண்டு போக முடியாது. அவ்வளவு டைட் செக்யூரிடி.

வாழ்க இவர் தொண்டு.

2.திரு ஜோதிஜி அவர்கள்


ராமநாதபுரத்திலிருந்து திருப்பூருக்கு வந்தவர். திருப்பூரின் பின்னலாடைத் தொழிலை முழுமையாக அறிந்தவர். நல்ல சிந்தனாவாதி.
இவருடைய தளம்:
இவருடைய மேலாண்மைத் தத்துவங்கள் நடைமுறைக்கு மிகவும் ஏற்றவை. திருப்பூரின் தொழில் நுணுக்கங்களைப் பற்றி பதிவுகளில் எழுதி வருகிறார். இவருடைய எழுத்தார்வம் மெச்சத்தகுந்தது.
பல புத்தகங்களைப் பதிப்பித்திருக்கிறார். அதில் “டாலர் நகரம்” என்ற புத்தகம் மிகவும் அருமையானது. இவருடைய பதிவுகளை தொழில் நடத்தும் ஒவ்வொரும் தவறாது படிக்கவேண்டும்.

3. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள்

                                           

தளத்தின் பெயர்: அவருடைய பெயரே


மிகக்குறுகியகாலத்தில்மிகப்பிரபலமானவர். இவர்பிரபலமாகக்காரணம்இவரதுஅசாத்தியஉழைப்பு.
ஒருசமயத்தில்இவருடையபின்னூட்டங்கள்இல்லாததமிழ்ப்பதிவுகளேஇல்லைஎன்றநிலைஇருந்தது. வேலைப் பளு காரணமாக இதை இப்போது கொஞ்சம் குறைத்திருக்கிறார்.

4. திருஸ்ரீராம்அவர்கள்

இவருடைய படம் கிடைக்காததினால் அவருடைய பிளாக்கிலிருந்து ஒரு இனிப்பான படத்தைப் போட்டிருக்கிறேன். இந்த இனிப்பைப் போலவே அவரும் இனிமையானவரே.



தளத்தின் பெயர்: “எங்கள் Blog”
லிங்க்: http://engalblog.blogspot.in/

இவர் ஒரு குழுவாக இந்தத் தளத்தை நடத்தினாலும் இவரே அதிகம் பொறுப்புகளைச் சுமக்கிறார் என்று நினைக்கிறேன்.
தன் போட்டோ எதையும் தளத்தில் போடவில்லை. வாழ்க்கைக்கு பயனுள்ள செய்திகளைப் பிரசுரிக்கிறார்.

5. திரு ரமணி அவர்கள்

       My Photo

“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற தலைப்பில் சமூகப் பிரச்சினைகளை அலசி வருகிறார். பயனுள்ள பதிவுகள். கட்டாயம் படிக்கவேண்டியவை.

6. திரு வே.நடனசபாபதி அவர்கள்


          எனது புகைப்படம்

நினைத்துப்பார்க்கிறேன்
என்ற பிளாக்கை நடத்திக்கொண்டு வருகிறார். 

லிங்க்: http://puthur-vns.blogspot.com/

விவசாயப்படிப்பு படித்துவிட்டு பேங்கில் சேர்ந்து பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
தன்னுடைய தளத்தில் பேங்கிங்க் சம்பந்தப்பட்ட அனுபவங்களை பகிர்கிறார். 

இவருக்கும் எனக்கும் ஒரு தனிப்பட்ட சொந்தம் இருக்கிறது. இவருடைய மூத்த சகோதரரும் நானும் ஒன்றாகப் பணி புரிந்தவர்கள்.

அவர் ஒரு ஸ்லைடு புரொஜக்டர் வைத்திருந்தார். அதில் ஒரு ரிப்பேர். நான் அதை சரி செய்து கொடுத்தேன். அது இப்போது அவர்கள் குடும்பத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை. (நான்
ஒரு சகல கலா வல்லவன் என்பதை எப்படி நாசூக்காக வெளிப்படுத்தியிருக்கிறேன், பாருங்கள்) 

7. திரு தமிழ் இளங்கோ அவர்கள்

          My Photo

"எனது எண்ணங்கள்"என்ற தளத்தில் தனது கருத்துகளைப் பதிகிறார்.

லிங்க்: http://tthamizhelango.blogspot.com/

இவரது பதிவுகள் சிந்தனையைத் தூண்டக்கூடியவை. இவரது பதிவுகளில் வரும் போட்டோக்கள் தனித்தன்மை வாய்ந்தவை.

8. திரு வெங்கட்நாகராஜ் அவர்கள்


பதிவுலகத்தின் இளம் தாரகை இவர் என்று சொன்னால் மிகையாகாது. தன் பெயரையே தன் தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர் எழுதாத சப்ஜெக்ட்டே இல்லை. டில்லியில் மத்திய அரசு உத்தியோகத்தில் இருக்கிறார்.


லிங்க்:http://venkatnagaraj.blogspot.com/

இவர்தான் நான் முதல்முதலில் நேரில் சந்தித்த பதிவர். நான் என் குடும்பத்துடன் “சார்தாம்” யாத்திரை போவதை என் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்து இவர் என்னுடன் தொடர்பு கொண்டு என் பயண நேரங்களைத் தெரிந்து கொண்டு பழைய டில்லி ரயில் நிலையத்தில் சந்தித்தார். அதன் பிறகு பல முறை சந்தித்திருக்கிறோம்.

இவருடைய துணைவியார் பிறந்து வளர்ந்த ஊர் கோவை என்பதால் கொஞ்சம் ஒட்டுதல் அதிகம். தன் துணைவியார் பெயரிலும் தன் மகள் பெயரிலும் பதிவுகள் ஆரம்பித்து அவர்களும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவருக்கு எனது பாராட்டுகள்.

9. திரு என். கணேசன் அவர்கள்

                                      My Photo
தளத்தின் பெயர்: என்.கணேசன்
லிங்க்: http://enganeshan.blogspot.in/
தன்னுடைய பெயரையே தன் தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர் ஒரு பேங்க் ஆபீசர். பேங்க்குக்காரர்களுக்கு கணக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைப்பவர்களுக்கு இவரைப் பற்றித் தெரிந்தால் ஆச்சரியப்படுவார்கள்.

நல்ல கதாசிரியர். தன் பதிவுகளில் தொடர் பதிவுகளாக பல க்ரைம் நாவல்களை எழுதி வருகிறார். அவை பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதை விறுவிறுப்புக்கு இணையானவை.

சமீபத்தில் அத்தகைய தொடர் ஒன்றை நிறைவு செய்து அதை புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார். பரம(ன்) ரகசியம் என்று அதற்குப் பெயர். அந்த தொடர் பிளாக்கில் வெளிவரும்போது (வியாழன் மாலை 6 மணிக்கு வெளி வரும்) காத்திருந்து அதைப் படித்தேன். மேலும் பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்

ஆன்மிகத்திலும் மிகுந்த நாட்டம் உள்ளவர். சித்தர்களைப் பற்றி இவர் எழுதும் தொடர் தினத்தந்தி வார இதழில் தொடர்ந்து வெளியாகிறது.


இவர் தற்போது கோவையில் வசிக்கிறார் என்பது எனக்குப் பெருமை.

10. திரு பகவான்ஜி அவர்கள்



அவர்களின் தளம்.

ஜோக்காளி

லிங்க்:  http://www.jokkaali.in/

தமிழர்களின் நகைச்சுவை உணர்வுகளுக்கு தீனி போடுவதென்பது எளிமையான காரியம் அன்று. அதில் திரு பகவான்ஜி வெற்றி பெற்றுள்ளார் என்பதை அவர் தளத்தின் தமிழ்மணம் ரேங்க் காட்டுகிறது.
எனக்கு இவர் அறிமுகமில்லாவிடினும் இவர் பதிவுகளின் ரசிகர்களில் நானும் ஒருவன். ஆபாசமில்லாமல் நகைச்சுவையைத் தருவது கடினமான செயல். அதை இவர் அனாயாசமாக செய்து கொண்டு வருகிறார். பாராட்டுகள்.

தமிழ்மணம் தர வரிசையில் நெம்பர் ஒன் ஆகத் திகழ்பவர்.

11. திரு தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்

தமிழ்வாசி பிரகாஷ்

வலைச்சர ஆசிரியர் குழுவில் சேவை செய்யும் இவர் அமைதியாகப் பதிவிட்டுக் கொண்டு இருக்கிறார். கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் வல்லுநர். வலைச்சரத்தில் இவர் பங்கு பாராட்டிற்குரியது.

இவரின் தளம்

! தமிழ்வாசி !

லிங்க்: http://www.tamilvaasi.com/


இவரை எனக்கு இப்போதுதான் அறிமுகம். 

கம்ப்யூட்டர் மற்றும் வாழ்க்கை நுட்ப பதிவர்கள்.

$
0
0
வலைச்சரம்மூன்றாம் நாள்  3-12-2014 புதன்கிழமை

கார் ஓட்டத் தெரிந்தவர்களுக்கு காரின் மெக்கானிஸம் தெரிய வேண்டியதில்லை. அது போல கம்ப்யூட்டர் உபயோகிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அதில் இருக்கும் தொழில் நுணுக்கங்கள் தெரியாது. கம்ப்யூட்டரை தொழில் நிமித்தமாக பயன் படுத்துபவர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய அளவு கம்ப்யூட்டரைப்பற்றி அறிந்திருப்பார்கள். அதற்கு மேல் அவர்களுக்குத் தேவையில்லை.

ஆனால் சில பதிவர்கள் (என்னைப் போன்ற கிறுக்கர்கள்) இந்தக் கம்ப்யூட்டரில் என்னென்ன ஜாலவேலைகள் செய்ய முடியுமோ அவைகள் அனைத்தையும் தங்கள் தளத்தில் செய்து பார்க்க ஆசை கொண்டவர்கள். ஆனால் அவர்களுக்கு இந்த வகையில் ஆராய்ச்சி செய்ய நேரம் இருப்பதில்லை. அவர்களுக்காகவே சில தொழில் நுட்பங்களைக் கண்டு பிடித்து தருவதற்கு சில பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.
இங்கு ஒரு எச்சரிக்கையும் தேவை. இந்தப் பதிவுகளில் கூறப்படும் உத்திகள் அல்லது புது அப்ளிகேஷன்கள் ஒருவருக்கு கட்டாயம் தேவை என்றால் மட்டுமே உபயோகப்படுத்தவேண்டும். இனாமாகக் கிடைக்கிறதே என்று தேவையில்லாதவற்றை உங்கள் கம்ப்யூட்டரில் சேகரிக்க வேண்டாம். பிறகு கம்ப்யூட்டர் வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகும்.

ஆனால் வாழ்க்கை என்பது அப்படி இல்லை. வாழ்வது எப்படி என்ற வகை தெரியாவிடில் ஒருவர் பல சங்கடங்களுக்கு ஆளாவார். அதற்கான நுட்பங்களை சில பதிவுகளில் பார்க்கலாம்.

1.  திருவேலன்அவர்கள்

இவரின்தளம்:



லிங்க்: http://velang.blogspot.com/

தொழில்நுட்பப் பதிவர்களில் இவர்தான் நெம்பர் ஒன். ஏகப்பட்ட தகவல்களை தன் பிளாக்கில் தந்து கொண்டிருக்கிறார்.

கம்ப்யூட்டரில் வல்லவர் என்பதால் இவர் தளத்திலிருந்து ஒரு தூசியைக் கூட யாரும் எடுக்கமுடியாதபடி காபந்து செய்திருக்கிறார். ஆனால் என்னைப் போன்று கல்லிலிருந்து நார் உரிப்பவர்களுக்கு முடியாதது ஒன்றுமில்லை. அவர் பிளாக் முகப்பை எப்படி நகல் எடுத்து போட்டிருக்கிறேன் பாருங்கள்.

இவரின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. 


2.  திருஅன்புஅவர்கள்


இவர்தான் அன்பு என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரது போட்டோ அவரது தளத்தில் என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இவரின்தளம்; அன்பைதேடி,,அன்பு
தெரியாத தொழில்நுட்ப செய்திகளை சரியான நேரத்தில் பகிரும் பயனுள்ள பாதுகாப்பான தமிழ் தளம்.  


லிங்க்: http://www.anbuthil.com/


பல கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களை இங்கு காணலாம். இவரும் தன் தளத்தை கவனமாகப் பேணிக் காக்கிறார்.


3. பெட்டகம் 



லிங்க் : http://pettagum.blogspot.in/

பல இயற்கை மருத்துவக் குறிப்புகள் மற்றும் வீட்டுக் குறிப்புகள் இத்தளத்தில் மண்டிக்கிடக்கின்றன. சிலவற்றை நான் உபயோகப்படுத்தி பயனடைந்திருக்கிறேன்.

4.  திருகரந்தை ஜெயகுமார் அவர்கள்



தன் பெரிலேயே தளம் வைத்திருக்கும் இவரின் தள முகப்பைப் பாருங்கள்.



லிங்க் : http://karanthaijayakumar.blogspot.com/

உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம் என்று கூறும் இவர் அந்தக் கூற்றுக்கு ஏற்ற பதிவுகளைத் தன் தளத்தில் வெளியிடுகிறார். அவைகள் வாழ்க்கைக்கு பெரும்பயன் தருபவை.


5.  திருசுப்பையா அவர்கள்


இவர் மனிதர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக ஒரு வகுப்பறையே வைத்திருக்கிறார்.


லிங்க்: http://classroom2007.blogspot.in/

தன் தளத்தை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். ஜோதிடம் மற்றும் வாழ்க்கைக்குறிப்புகள் பற்றியும் பல சமூகப் பிரச்சினைகள் பற்றியும்   எழுதி வருகிறார்.

கோவையில் வசிக்கும் இவரை இன்னும் நான் சந்தித்ததில்லை.

6.அவர்கள்உண்மைகள்


இந்த தளத்தை நடத்துபவர் தன்னை அநாமதேயமாக வைத்துள்ளார். காரணம் இவர் பல உண்மைகளைச் சொல்கிறார். இது ஒரு சமூக விழிப்புணர்வுத் தளம்.
இந்தத் தளத்தை பலரும் விரும்பிப் படிக்கிறார்கள் என்பது இதன் தமிழ்மணம் ரேங்கில் இருந்து தெரிகிறது.

சமகால சமுதாயப் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்கு மிகுந்த மன வலிமை வேண்டும். அத்தகைய மன வலிமை இவருக்கு இருப்பது கண்டு பாராட்டுகிறேன்.

7.தங்கம்பழனிஅவர்கள்.


இவருடைய தளத்தின் பெயர்: வேலைவாய்ப்புசெய்திகள்


இவருடைய தளம் வேலை வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இது ஒரு பெரிய சமூக சேவை ஆகும். இவருக்கு எனது பாராட்டுகள்.


8.ஜீவி அவர்கள்


இவருடைய தளத்தின் பெயர்
லிங்க் : http://jeeveesblog.blogspot.in/2014/12/blog-post.html

2008 முதல் பிளாக்கில் எழுதிவரும் இவர் ஜனரஞ்சகமான பதிவுகளை எழுதி வருகிறார். சமீபத்தில் திரு, வை.கோபாலகிருஷ்ணன் நடத்திய சிறுகதை விமர்சனப் போட்டியில் நடுவராக இருந்து பெரும் தொண்டு ஆற்றியுள்ளார்.

இவர் பதிவுகள் எல்லாம் வாசிக்க வேண்டியவை. 

9.பிளாக்கர்நண்பன்


லிங்க் : http://www.bloggernanban.com/

தளத்தின் பெயர் - ப்ளாக்கர்நண்பன்

இந்த தளத்தின் சொந்தக்காரர் Abdul Basithஅவர்கள்


சிறந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பப் பதிவுகள் கொண்ட தளம். அனைத்து தொழில் நுட்ப ப் பதிவர்களும் தங்கள் விவரங்களை மிக மிக ஜாக்கிரதையாகப் பாதுகாக்கிறார்கள். ஏன் அவ்வளவு பயம்  என்று தெரியவில்லை.

புதிய பதிவர்களுக்காக பிளாக் தொடங்கி நடத்துவது எப்படி என்ற விவரங்கள் விரிவாகக் கொடுத்திருக்கிறார். பழைய பதிவர்களுக்கும் உபயோகமாகும் பல உத்திகளை தன் பதிவுகளில் பதிந்திருக்கிறார்.






10.தமிழ்கம்ப்யூட்டர்



தன் படத்தை தானே வரைந்திருக்கிறார். tc. kumaresan , இந்த தளத்தின் பொறுப்பாளர்



லிங்க்: http://tamilcomputerinfo.blogspot.in/

இந்த வலைப்பூ கணினியை பற்றி கற்றுக்கொண்டு இருக்கும் அடிப்படை பயனாளர்களுக்காக  என்று தன் தளத்தில் அளவித்திருக்கிறார்

அந்த அறிவிப்பிற்கு  ஏற்றவாறு கம்ப்யூட்டர் பற்றிய பல அரிய பயனுள்ள பதிவுகள் இந்த தளத்தில் உள்ளன.



     

பெண் பதிவர்கள் - நான்காம் நாள் பதிவு

$
0
0
வலைச்சரம்நான்காம் நாள்                4-12-2014 வியாழக்கிழமை

பதிவுலகத்தில்வரலாறுபடைத்த சில நிகழ்வுகள்

நான் வலையுலகில் பார்த்த ஓரிரண்டு நிகழ்வுகளை, அவை பெண்கள் சம்பந்தப்பட்டதினால் அவை பற்றிய என் கருத்துகளை இங்கே பதிகிறேன்.

ஆணாதிக்கம் என்பது மனிதன் தோன்றிய நாளில் இருந்து வருவது. இன்று பெண்கள் முன்னேற்றம் என்பது பல துறைகளில் அவர்கள் ஆணுக்கு நிகராகவும் மேம்பட்டும் இருப்பதிலிருந்து தெரியலாம். இருந்தாலும் ஆண் தன் மனதிலிருந்து இந்த ஆணாதிக்க மனப்பான்மையை முற்றிலும் விலக்கவில்லை என்பது நான் சொல்லும் இரண்டு பதிவுலக நிகழ்வுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் முதல்முதலாக பெரிய அளவில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. அதில் ஈரோட்டிலிருக்கும் ஒரு பெண் பதிவரும் கலந்து கொண்டார். அவர் ஒரு முஸ்லிம் பெண். பர்தா அணியும் பழக்கம் உள்ளவர். அவர் பதிவர் சந்திப்புக்கும் பர்தா அணிந்தே கலந்து கொண்டார். பிறகு தன் பதிவில் இந்தப் பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதுகையில் தான் பர்தாவுடனேயே பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் கடைசி வரையில் அப்படியே இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதை சில ஆண் பதிவர்கள் கேலி செய்து “நாங்களும் வேட்டியுடனே வந்தோம், கடைசி வரை வேட்டியுடனேயே இருந்தோம்” என்று எதிர் பதிவு போட்டார்கள். இந்த கருத்து வேறுபாடு ஒரு பெரிய பிரச்சினையாகி இனக்கலவரம் ரேன்ஞ்சிற்குப் போய்விட்டது. அந்தப் பெண் பதிவர் மனம் நொந்து போய் சில நாட்கள் பதிவுலகத்தில் இருந்து விலகி இருந்தார். இப்போது மனம் தேறி பதிவுகள் எழுதுகிறார்.

அடுத்த நிகழ்வு. சில வருடங்களுக்கு முன் ஒரு ஆண் பதிவருக்கும் பெண் பதிவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தங்கள் பதிவுகளில் மறைமுக ஏச்சுக்களில் ஈடுபட்டனர். அதில் உணர்ச்சி வசப்பட்ட ஆண் பதிவர் “பூக்காரி” என்று ஒரு மகா கீழ்த்தரமான பதிவை எழுதி தன் தளத்தில் வெளியிட்டார். இது பெரிய பிரச்சினையாக உருவாகி, பலரும் பஞ்சாயத்து பேசி, கடைசியில் அந்தப் பதிவை நீக்கினார். வருத்தமும் தெரிவித்தார். ஆனாலும் அந்தப் பிரச்சினை பல காலம் புகைந்து கொண்டே இருந்தது.

இந்த நிகழ்வுகளை இங்கே ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பெண் பதிவர்களுக்கு பதிவுலகில் பல ஆபத்துகள் மறைந்திருக்கின்றன என்று சுட்டிக் காட்டத்தான்.

இப்போது நிலை கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் பெண் பதிவர்கள் கம்பி மேல் நடக்கும் சர்க்கஸ் கலைஞர் மாதிரி வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது பதிவுலகில் கோலோச்சி வரும் சில பிரபல பெண் பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.

திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்தான் நெம்பர் ஒன். ஆனால் அவரை ஏற்கனவே குறிப்பிட்டு விட்டபடியால் இங்கு மறுபடியும் குறிப்பிடவில்லை,

1.துளசிகோபால்அவர்கள்


அவர்கள் தளத்தின் முகப்பு -



தளத்தின் லிங்க் : http://thulasidhalam.blogspot.in/

தமிழ் நாட்டவரான இவர் தற்போது நியூசிலாந்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அனைத்து பதிவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.

2004 ம் வருடத்திலிருந்து பதிவு எழுதுவதாக இவரின் தளத்திலிருந்து தெரிய வருகிறது. இவருடைய பெரும்பாலான பதிவுகள் பயணக் கட்டுரைகளே. இவர் போகாத ஊர்களே இல்லை என்ற அளவிற்கு பல வெளிநாடுகளுக்கும் இந்திய ஊர்களுக்கும் தன் கணவர் கோபாலுடன் சென்று வந்திருக்கிறார்.

இவருடைய பயணக் கட்டுரைகளைப் படிக்கும்போது நாமே அந்த ஊர்களில் இருப்பது போன்ற உணர்வு வரும். இவர் நல்ல போட்டோகிராபர். இவருடைய பதிவுகளில் வரும் போட்டோக்களைப் பார்க்கும்போது அந்த இடங்களை நேரில் பார்ப்பது போல் இருக்கும். இது போக அவர்கள் ஊரில் நிலவும் சமூகப் பழக்க வழக்கங்களையும் தன் தளத்தில் அவ்வப்போது பதிகிறார்.

மதுரை பதிவர் சந்திப்புக்கு வந்திருந்து அனைத்து பதிவர்களிடனும் அளவளாவினார். அதைப் பற்றி அவர் எழுதின இரண்டு பதிவுகளைப் பாருங்கள்.

1.   http://thulasidhalam.blogspot.in/2014/11/blog-post.html

2.   http://thulasidhalam.blogspot.in/2014/11/blog-post_28.html

தமிழ் பதிவர்களுடன் அத்யந்த உறவுகள் ஏற்படுத்திக்கொள்வதில் இவருக்கு நிகர் யாருமில்லை. ஜிஎம்பி அவர்களின் இந்தப் பதிவைப் பாருங்கள்.  http://gmbat1649.blogspot.in/2014/11/to-via.html

அவர்கள் ஊரில் அதாவது நியூஸிலாந்தில் நடக்கும் விசேஷங்களை நமக்கு அப்படியே படம் பிடித்துக் காட்டுவார். இங்கே செல்லுங்கள்- http://thulasidhalam.blogspot.in/2014/09/blog-post_15.html

2.ரஞ்சனி நாராயணன்.

இவருடைய தளத்தின் பெயரும் இதுவே. தளத்தின் முகப்புப் படம்


லிங்க் : http://ranjaninarayanan.wordpress.com/

இவர் ஒரு சகலகலா வல்லவர். பல பொருட்களில் பதிவு போட்டு வருகிறார். நான் இவருடன் பதிவர் சந்திப்புகளில் பேசியிருக்கிறேன்.

பழகுவதற்கு இனிமையானவர். சமீபத்தில் என்னுடைய ஒரு பதிவின் காரணமாக என் பேரில் லேசான வருத்தம் கொண்டுள்ளார். அன்பு இருக்கும் போதுதான் வருத்தம் வரும். காலம்தான் இதற்கு மருந்து.

இவருடைய நகைச்சுவைக்குஒரு சாம்பிள்.

அங்கு ஒரு குழாய். ‘மாலா! மன்னிக்கு பித்தளை வாளியும் மொண்டாளியும் (நீரை முகர்ந்து கொள்ள பயன்படும் பாத்திரம்) கொண்டுவந்து குடு’ என்றார். ‘நான் தளிபண்ற உள் கதவ சாத்திண்டு போறேன். கவலைப்படாம குளி’ என்றவாறே வெளியே போனார். அன்று நான் அங்கு பார்த்த பித்தளை வாளி இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்த மொண்டாளிக்கு ஈடு இணை இந்த காலத்து ‘மக்’ (mug) கிற்கு வருமா?



3.மனோசாமிநாதன்

இவருடைய தளத்தின் பெயர் -

முத்துச்சிதறல்

தளத்தின் லிங்க் : http://muthusidharal.blogspot.in/2014/12/blog-post.html

வாழ்க்கையில் நிகழும் சாதாரண சம்பவங்களைக்கூட சுவையாகத் தர முடியும் என்பதற்கு இவருடைய பதிவுகள் உதாரணம். எடுத்துக்காட்டாக மனிதர்கள் பரஸ்பரம் செய்யும் சின்னச்சின்ன உதவிகள் கூட எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று உதவிஎனப்படுவதுயாதெனில்...என்னும் பதிவில் சொல்லியிருக்கிறார். 

பெண்கள் சமையல் குறிப்புகளைத்தான் பதிவிடுவார்கள் என்ற பரவலான எண்ணத்தை இவரது தளம் போக்குகிறது.

4.வேதா இலங்காதிலகம்.


இவரைப் பற்றிய கூகுளின் வாழ்க்கைக் குறிப்பு:

இலங்கையிலுள்ளகோப்பாய்எனும்ஊரில்பிறந்தவேதா, இலங்கையின்கழுத்துறைமாவட்டத்தேயிலை, ரப்பர்தோட்டநிர்வாகியானஇலங்காதிலகம்என்பவரைவாழ்க்கைத்துணைவராகஏற்றுக்கொண்டார். வாழ்வாதாரத்துக்காக 1986-ல்டென்மார்க்நாட்டிற்குச்சென்றகணவரைத்தொடர்ந்து 1987-ல்இவரும்தன்மகன், மகள்ஆகியோருடன்டென்மார்க்சென்றார். அங்குடெனிஷ்மொழியைக்கற்றுபாலர்பள்ளியில்ஆசிரியராகப்பணியாற்றினார். இவர்மகன்இயந்திரவியல்தொழில்நுட்பமும், இவர்மகள்தகவல்உதவியாளராகவும்படித்துள்ளனர். இவரதுமகள்தற்போதுஇலண்டனில்உள்ளசிறந்தமருத்துவமனைஒன்றில்பணியாற்றிவருகிறார். தந்தைநகுலேஸ்வரர்ஊக்குவிப்பால் 1976-ல்இலங்கைவானொலிக்குகவிதைஎழுதத்துவங்கியஇவர்சிறுசஞ்சிகைகள், ஐரோப்பியத்தமிழ்சஞ்சிகைகள், சிலதமிழ்இணையஇதழ்கள்போன்றவற்றில்எழுதிவருகிறார். இவர் 2002-ல்"வேதாவின்கவிதைகள்"என்றகவிதைநூலையும், 2004-ல்"குழந்தைகள்இளையோர்சிறக்க"மொழிபெயர்ப்புக்கட்டுரைத்தொகுப்புநூலையும், 2007ல்கணவருடன்இணைந்து"உணர்வுப்பூக்கள்"எனும்வாழ்வியல்கவிதைகள்நூலையும்எழுதிவெளிக்கொண்டுவந்துள்ளார்என்பதும்இங்கேகுறிப்பிடத்தக்கது.

இவருடைய வலைத்தளத்தின் பெயர்: வேதாவின்வலை..

முகப்புப் படம்

தளத்தின் லிங்க்: http://kovaikkavi.wordpress.com/

பல்சுவைப் பதிவுகள் போடுகிறார். 

புல்வெளியைப்பற்றி ஒரு பதிவுபோட்டிருக்கிறார் பாருங்கள்

அவசியம் இவர் தளத்தைப் பார்வையிடுங்கள்.

5.அம்பாளடியாள்


தளத்தின் லிங்க் ; http://rupika-rupika.blogspot.com/

இந்த தளம் காப்புரிமை பெற்றுள்ளது. தன் பதிவை திருடுகிறார்கள் என்று புலம்புபவர்கள் இவரிடம் ஆலோசனை பெறலாம்.

இவர் பெயரைக் கேள்விப்படாதவர் பதிவுலகில் இருக்கமாட்டார்கள். அவ்வளவு பிரபலம். அனைத்துப் பதிவர் தளங்களிலும் இவர் பின்னூட்டம் இருக்கும்.

கவிதைகளுக்காகவே தன் தளத்தை அர்ப்பணித்துள்ளார்.

தமிழின் சிறப்பைப் பற்றி அவர் புனைந்திருக்கும் கவிதையைப் படியுங்கள் 
                        

 

6.தேனம்மை லக்ஷ்மணன்

பதிவின் பெயர் “சும்மா”

லிங்க் : http://honeylaksh.blogspot.in/

இவர் பதிவுகளில் பல சுவைகளும் விரவிக் கிடக்கின்றன. உதாரணத்திற்கு

·

பல டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றிருக்கிறார். பதிவர் சந்திப்புகளில் சந்தித்திருக்கிறேன். A versatile Blogger.

7.ஆதி வெங்கட்

இவரது தளத்தின் பெயர்:கோவை2தில்லி

லிங்க் : http://kovai2delhi.blogspot.in/

பிரபல பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்களின் துணைவியார். பிறகு பதிவுகளின் தரத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்.

எங்கள் ஊரில் வளர்ந்தவர் என்பதால் எனக்கு இவர் மேல் ஒரு தனி அபிமானம் உண்டு. இவருடைய மகளும் ஒரு வலைத்தளம் வைத்திருக்கிறார்.

தான் படித்த ஒரு நாவலின் (மடிசார் மாமி) தாக்கத்தை விவரிப்பதை படித்தால் நாமும் உணர்ச்சி வசப்படுவோம். 

8. R. உமையாள் காயத்ரி
தன் தளத்தை தன் பெயரிலேயே வைத்திருக்கிறார்.

மிதிவண்டியைப்பற்றி இவர் எழுதியதைப் படத்தால் இவரின் யதார்த்த எழுத்து புரியும்.

9.சுமஜ்லா

தளத்தின் பெயர்: என்'எழுத்து இகழேல்

முஸ்லிம் பெண்ணான இவர் இந்தமாதிரி பொது தளத்தில் எழுத வந்திருப்பதே பெரிய முன்னேற்றமல்லவா? அவருடைய சமூகப் பின்னணியில் பல கதை கட்டரைகள் எழுதுகிறார். இவருடைய பொது நோக்கை இந்தப்பதிவில் பாருங்கள்.

10. Manjubashini Sampathkumar

இவருடைய தளத்தின் பெயர்:  

2007 முதல் பதிவுகள் எழுதி வருகிறார். சென்ற வாரத்தில் வலைச்சர ஆசிரியராக இருந்து பிறகு என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார். சமையல் குறிப்புகள், மற்றும் தனி மனித வாழ்க்கை பற்றி எழுதும் இவர் திறமைக்கு ஒருசேம்பிள்பதிவு.

என்னுடைய போட்டோவை என் அறிமுகப் பதிவில் போட்டிருந்தேன். அது என்னை மிகவும் கடுமையானவனாக காட்டியிருக்கிறது. உடனே எனக்கு மின்னஞ்சல் அனுப்பி, சிரித்த முகமாக ஒரு போட்டோ எடுத்துப் போடவேண்டும் என்று ஒரு அன்புக் கட்டளை பிறப்பித்தார்கள். 

நானும் அந்த மாதிரி போட்டோ எடுக்க முயற்சித்தேன். படம் எடுத்த என் மகள், அப்பா, இந்த விஷப் பரீட்சை எல்லாம் வேண்டாம், மக்கள் பயந்து விடுவார்கள், பழைய படமே போதும் என்று சொல்லி விட்டாள்.
இருந்தாலும் மஞ்சுவின் வேண்டுகோளை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. இதோ சிரித்த முகமாக ஒரு அழகான போட்டோ.

                                          

இப்போது திருப்திதானே, மஞ்சு.

11.கோமதி அரசு

தளத்தின் பெயர்   : திருமதி பக்கங்கள்

லிங்க் :http://mathysblog.blogspot.com/

நிறைய ஆன்மீகப் பயணங்கள் பற்றி எழுதியிருக்கிறார். திருச்செந்தூர் அனுபவத்தைப் பற்றி இவர் சொல்வதை படியுங்கள் 

இன்னும் அநேக பெண் பதிவர்கள் நல்ல பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எல்லோரையும் ஒரே பதிவில் குறிப்பிட முடியவில்லை.
அவர்கள் என்னை மன்னிக்கவேண்டும்.


பல்சுவை பதிவர்கள் -ஐந்தாம் நாள்.

$
0
0
வலைச்சரம்ஐந்தாம் நாள் 5-12-2014 வெள்ளிக்கிழமை
இன்றைய பதிவில் சில பல்சுவை பதிவர்களை அறிமுகப்படுத்த விழைகிறேன்.

1.கடல் பயணங்கள்
கடையின் முதலாளி : திரு சுரேஷ் குமார்.
http://www.kadalpayanangal.com/

அன்னம் பிரம்மம் என்று சொல்வார்கள். திரு ரமேஷ் அந்த பிரம்மத்தை அனுதினமும் நேரில் காண்பவர். காணுவது மட்டும் அல்ல. அந்த பிரம்மத்துடனேயே ஒன்றிப்போனவர்.

ஒரு மட்டை ஊறுகாயில்  பிரம்மத்தைக் காணும் காட்சியைக் காணுங்கள்.


இவர் ரசிக்கும் அந்த மட்டை ஊறுகாயப் பாருங்க.
                                               


எந்த ஊரில், எது, எங்கே நன்றாக இருக்கும் என்று கண்டுபிடித்து அதை அனுபவித்து யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக என்ற நோக்கத்தில் பதிவுகள் இடுகிறார். என்னால் அந்த ஊருக்கெல்லாம் இந்த வயசான காலத்தில் போக முடியுமா? அதனால் அவர் பதிவுகளைப் பார்த்து "ஜொள்"விட்டுக் கொண்டிருக்கிறேன். முடிந்தவர்கள் நேரில் சென்று சுவைத்து இன்புறலாம்.

2. கோவை நேரம்
       முதலாளி : திரு ஜீவானந்தம்.

இவர் என் வீட்டுக்கு சமீபத்தில், 2 கி.மீ. தூரத்தில் குடியிருக்கிறார். இவர் கொடுக்கும் இம்சைகளையும், உண்டாக்கும் வயிற்றெரிச்சலையும் நான் யாரிடத்தில் முறையிடுவேன் என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்த போது, கடவுள் திரு சீனா ஐயா ரூபத்தில் வந்து அனுக்கிரஹம் செய்தார். இதோ இங்கே உனக்கு ஒரு வலைத்தளம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறேன். அதில் உன் வயிற்றெரிச்சலை எல்லாம் கொட்டிக்கொள்ளலாம் என்று வரம் கொடுத்தார். (திரு ஜீவானந்தம் மன்னிக்கவேண்டும்)

திரு ஜீவானத்தந்திற்கு வீட்டில்  கிடைக்கும் உணவோடு திருப்தி அடைவதில்லை. நல்ல உணவு கிடைக்கும் உணவு விடுதிகளை இனம் காணுவதில் வல்லவர். அதுவும் என் வீட்டைச்சுற்றி ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள உணவகங்கள்தான் இவருக்கு கண்ணில் படும் போல. அங்கு போய் ஒரு வெட்டு வெட்டிவிட்டு உடனே அதைப் பதிவில் எழுதி விடுவார்.

இதப்பாருங்க.

                              


இந்தச்சாப்பாடு 

இராமசாமி உணவகம், (Ramasamy Canteen ) கவுண்டம்பாளையம், கோவை


என்கிற இடத்தில் வெகு சீப்பாகக் கிடைக்கிறதாம். ருசியோ ருசியாம். இந்த இடம் என் வீட்டிலிருந்து 2 கி.மீ.

அப்புறம் இதைப் பாருங்க


முட்டை பப்ஸ், ஸ்ரீ லட்சுமி ஐயங்கார் கேக் ஷாப், கவுண்டம்பாளையம், கோவை


இந்த இடத்தில முட்டை பப்ஸ் செய்யறத நேர்ல போய் பார்த்து படம் எடுத்துப் போட்டிருக்கார். இதைப் பார்த்த பிறகு அதன் பேரில் ஆசை வராமலிருக்குமா? ஆனால் எனக்கு வீட்டில் ஓட்டலுக்குப் போகக்கூடாது என்று தடா. நான் என்ன செய்யட்டும்.

இன்னொரு வயித்தெரிச்சல் பாருங்க


இது கிடைக்கிற இடம் .

A -1 பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி, கோவை


இந்தக் கடை, என் வீட்டிலிருந்து ஒரு பர்லாங்க் தூரத்தில் இருக்கிற கடை. எங்க ஊட்ல ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.  பிரியாணி சாப்பிட்டா ஊட்டுக்குள்ள வரப்படாது அப்படீன்னு. இதப் பார்த்துட்டு எப்படீங்க சும்மா இருக்கிறது?  நான் என்ன செய்யட்டும், நீங்களே சொல்லுங்க 


3.கமலாவின் அடுப்பங்கரை
இவரின் தளத்தின் லிங்க் : லிங்க் : http://adupankarai.kamalascorner.com/

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிற கொள்கைப்பாடு உடையவர் திருமதி கமலா அவர்கள். திருவாளர்கள் சுரேஷ் மற்றும் ஜீவானந்தம் சொன்ன உணவகங்களில் சாப்பிட்டு சலித்துப் போனவர்கள் இந்த அடுப்பங்கரைச் சமையலைச் சாப்பிட்டு நாக்கைத் தேத்திக்கொள்ளலாம்.

இஞ்சிப்புளி ஜீரணத்திற்கு முகவும் நல்லது.
               
                         

செய்முறையைவிவரமாக கமலா அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இஞ்சிப் புளி சாப்பிட்டு பசி எடுத்ததும் சாப்பிட டபுள் பீன்ஸ் சாதம் ரெடி
                           
                               

இப்படி பல உணவு தயாரிக்கும் முறைகள் இந்த தளத்தில் உள்ளன.


4.ஜலீலா
தளம். சமையல் அட்டகாசங்கள்

லிங்க்: http://samaiyalattakaasam.blogspot.com/

இந்தத் தளத்தில் ஒரு வார்னிங்க் போர்டே வைத்துவிட்டார்கள்

கமலா அம்மாவின் அடுப்பங்கரைச் சமையல் சலித்துப்போனால் ஜலீலா பேகத்தின் சமையலை ருசிக்கலாம்.


பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறதல்லவா? இப்படி பல உணவுகள் தயாரிக்கும் முறைகள் இவருடைய தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.


5. ஸ்கூல் பையன்
புனைபெயரில் தளம் அமைத்திருக்கும் இவரின் பதிவுகள் வெகு சுவாரஸ்யமானவை. மனம்மயக்கும் மூனாறுபதிவில் மூனாறு பற்றிய சுவாரஸ்யமான பல விவரங்கள் இருக்கின்றன. இது போல் பல பயணக்கட்டுரைகளும், சினிமா விமர்சனங்களும், சமுதாயச் சார்பு கட்டுரைகளும் இவர் தளத்தில் பார்க்கலாம்.

6.கரிசக்காடு

உதயசங்கர்இந்த தலைப்பில் வைத்திருக்கும் தளத்தில் வட்டார செய்திகளைச் சார்ந்த பதிவுகளைப் பார்க்கலாம். கவிதைகளைப்பற்றிய இவர் பார்வை வித்தியாசமானது. பல நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.
சிறுகதைகளும் இவர் பதிவில் உண்டு. 


காற்றில்கரைந்த பூதம்சாப்பாட்டுப் பிரியர்கள் படிக்கவேண்டிய ஒரு கதை.

7.நிகழ்காலத்தில் சிவா

இவர் பெயரும் சிவா தான். நான் சந்தித்திருக்கிறேன்.



இவர் ஒரு இமாலய சாதனையாளர். எப்படியென்றால் திருக்கைலாய யாத்திரை இரண்டு முறை சென்று வந்திருக்கிறார். அதில் என்ன விசேஷம் என்றால் கைலாய மலையை பரிக்ரமா நடந்தே செய்திருக்கிறார். பெரும்பலானோர் மானசரோவரோடு நிரும்பி விடுவார்கள். இந்த யாத்திரையைப் பற்றா விரிவாக தன் தளத்தில் பதிந்திருக்கிறார்.

வேறு பல உபயோகமான பதிவுகளும் இவர் தளத்தில் இருக்கின்றன.
உடலில் வியர்வை நாற்றம்வராமலிருக்க இவருடைய உத்திகள் பிரயோஜனமானவை.

8. கோவை எம். தங்கவேல்

எல்லோருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் சொத்து அதாவது வீடு கட்டும் மனை, அல்லது பெரிய இடங்கள் வாங்கும் சந்தர்ப்பம் வரும். சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் பல சட்ட திட்டங்களும் சட்ட ஓட்டைகளும் உண்டு. அதைப் பற்றிய அனைத்து விவரங்களும் ஆலோசனைகளும் இவர் பதிவுகளில்காணலாம்.

ஆன்மீகத்தலும் இவர் சிறந்து விளங்குகிறார். மகாபாரதத்தில்தர்மத்தின் பாதையைப் பற்றி கண்ணனும் உத்தவரும் வாதம் செய்வதை அருமையாக விளக்குகிறார். அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் தேவையான தளம்.


9. கில்லர்ஜி
தன் பெயரையே தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர் தன்னைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்




கடவுளிடமே சவால்விடும்அளவிற்கு துணிவு கொண்டவர்.

படித்துப் பாருங்கள். சிரித்திச் சிரித்து வயிற்று வலியால் அவதிப்படுவீர்கள்.


10. சதீஷ் சங்கவி

தன் பெயரையே தளத்தின் பெயராக வைத்துள்ள இவர் ஒரு கால கட்டத்தில் ஈரோடையே கலங்கடித்துக் கொண்டிருந்தார். பதிவுலக நடைமுறைப்படி இப்போது கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார். ஈரோடு பதிவர் சந்திப்புகளின் மூலம் எனக்கு நன்கு பரிச்சயமானவர். பயங்கர கலகலப்பானவர்.

இராத்திரிநேர பூஜையில்என்ற இவர் பதிவைப் பாருங்கள். கொஞ்சம் விரசமான பாட்டை எப்படி கிண்டல் செய்திருக்கிறார்!
ரயில்வேநிர்வாகத்தை இவர் துவைத்து எடுப்பதைப் பாருங்கள்.
பழகுவதற்கு இனிமையானவர். இவரை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கொடிகட்டிப் பறந்தவர்கள் - ஆறாம் நாள்

$
0
0
வலைச்சரம்ஆறாம் நாள்   6-12-2014 சனிக்கிழமை

கொடிகட்டிப் பறந்தவர்கள் 

வலைப்பதிவின் போக்கை கவனித்து வருபவர்களுக்கு ஒரு உண்மை புலப்பட்டிருக்கும். 2009 -10 ம் வருடங்கள்தான் தமிழ் வலைப்பதிவின் பொற்காலம். நிறைய புது பதிவர்கள் பதிவுகள் எழுத வந்தார்கள். நிறைய எழுதினார்கள். நன்றாகவும் எழுதினார்கள்.

அதில் சிலர் அதி சீக்கிரத்தில் மிகப் பிரபலம் ஆனார்கள். பதிவுலகத்தின் சாபக்கேடு என்னவென்றால் எப்படிப்பட்ட பிரபல பதிவராக இருந்தாலும் மூன்று அல்லது நான்கு வருடத்தில் சோர்வடைந்து பதிவிடுதலைக் குறைத்துக் கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் காணாமல் போய் விடுவார்கள்.

ஒரு சிலரே தொடர்ந்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில பதிவர்களை இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.

1.சி.பி.செந்தில்குமார்
 தளத்தின் பெயர் : அட்ரா சக்கை
 லிங்க் : http://www.adrasaka.com/

இதுவரை 4000 பதிவுகள் போட்டிருக்கிறார். ஒரு கோடி ஹிட்ஸ் வாங்கியிருக்கிறார். இந்த சாதனையை முறியடிக்க தமிழ்ப் பதிவுலகில் யாரும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்மண ரேங்க் வரிசையில் முதாவது இடத்தில் வெகு நாட்கள் இருந்தார்.

வெகு துடிப்பான இளைஞர்.நெல்லையில் நடந்த பதிவர்சந்திப்பில் 90 சதம் இவர்தான் பேசிக்கொண்டு இருந்தார்.


எல்லாவிதமான டாபிக்குகளிலும் பதிவுகள் போட்டிருக்கிறார். மிகவும் துணிச்சல்காரர்.

சாருவைப் பற்றி ஒரு பதிவுபோட்டிருக்கிறார் பாருங்கள். 



2.ஈரோடு கதிர்

My Photo
தளத்தின் பெயர் : கசியும்மௌனம்
லிங்க் : http://maaruthal.blogspot.in/

மிக இனிமையான பதிவர். இவர்தான் நான் முதல்முதல் சந்தித்த பதிவர். ஈரோடுதான் இவர் ஊர். முதல் முதல் பதிவர் சந்திப்பு விரிவான முறையில் நடத்திய பெருமை இவரையே சேரும்.

கொங்குத் தமிழில் எழுதிய இந்தப் பதிவைப் பாருங்கள்.
யாருக்கு கல்யாணம்?”

ஃப்ரெண்டுக்குங்ண்ணா… கொடுமுடில.. மத்யானம் ரிசப்சனுக்கு போகனும்ங்… அப்ப நீங்ககொடுக்கிறத கொடுத்துடுவேன்

என்னைத் தெரிஞ்ச ஃப்ரெண்டா?”

இல்லீங்ண்ணா… என்னோட ஃப்ரெண்ட்ங்


அதே ட்ரேட் மார்க் சிரிப்பு


இப்பவும் காக்கா கத்துதா?  கோவை கிராமங்களில் வீட்டுக்கு முன்னால் காகம் கரைந்தால் அன்று வீட்டுக்கு விருந்தினர் வருவார்க்ள என்ற நம்பிக்கை உண்டு. இதைப் பற்றி அழகு தமிழில் கதிர் எழுதியிருப்பதைப் படியுங்கள்.



3.எழிலாய்ப்பழமைபேச...

லிங்க் ; http://maniyinpakkam.blogspot.in/
இந்த தளத்தின் பதிவர் "பழமை பேசி"என்னும் மௌன.மணிவாசகம்.


கோயமுத்தூர்க்காரரான இவர் அமெரிக்காவில் வேலை பார்த்துக்கொண்டு ஊர்ப் பாசத்தை விடாமல் இருக்கிறார். 

ஈரோடு வலைப் பதிவர் சந்திப்பில்பெரும் பங்கு எடுத்திருக்கிறார். 

அமெரிக்கவாழ்க்கையைப் பற்றியும் பதிவுகள் போட்டிருக்கிறார்.


4.பாமரன்பக்கங்கள்.. 
பதிவர் பெயர் :திரு.ராதாகிருஷ்ணன்.





 எவ்வளவுநேரம்தான்கையாலக்ளிப்போடுறது
                     சும்மாசும்மாமுடிபறந்துமூஞ்சிலவிழுதுங்ணா.



2009 லிருந்து பதிவு எழுதும் இவர் ஏறக்குறைய இப்போது எழுதுவதே இல்லை. இவருடைய சில பதிவுகள். அரேஞ்டு லவ்என்று ஒரு பதிவு. அந்தக்காலத்தில் இருந்த போன் வசதியைப் பற்றி சொல்கிறார். அன்புள்ள மம்மிஎன்று ஒரு புலம்பல் பதிவு படிக்க சுவையாக இருக்கிறது.


5.தாராபுரத்தான்
 திரு.பழனிசாமி அவர்கள், தாராபுரம்.
லிங்க் : http://tharapurathaan.blogspot.in/


தன் ஊரின் பெயரையே தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர்  அரசு உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றவர். காற்று வாங்க வாருங்கள் என்று தன் ஊருக்கு அழைக்கிறார்.


இவரை பதிவர் சந்திப்புகளில் சந்தித்திருக்கிறேன். இவரையும் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும்.



6.சுரேஷ்(பழனியிலிருந்து)
தளத்தின் பெயர் : கனவுகளே..,

லிங்க் : http://kanavukale.blogspot.com/


சுமித்ராவின் சரித்திரம்என்ற தொடர்கதை எழுதியிருக்கிறார். நிறைய சினிமா விமர்சனங்கள்பதிவிட்டிருக்கிறார். கடைசியில் காணாமல் போய்விட்டார்


7. பன்னிக்குட்டி ராமசாமி
பதிவின் பெயர் ; ஸ்டார்ட் மியூசிக்
லிங்க் : http://shilppakumar.blogspot.in/




2010 ல் இருந்து பதிவு எழுதும் இவர் அந்தக்காலத்தில் பண்ணாத குறும்புகள் இல்லை,சேம்பிள்பாருங்கள்.
ங்ணா.... வெட்டி நாயம் பேசுறவங்க தெரியாம வந்துட்டீங்கன்னா அப்படியே ரிவர்ஸ் கியர் போட்டுக்குங்ணா...

மெதுவாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறார்



8. ஜாக்கி சேகர்
பதிவின் பெயர் : பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.
லிங்க் : http://www.jackiesekar.com/
2008 ல் இருந்து பதிவு எழுதி வரும் இவர் பெரும்பாலும் சினிமா விமர்சனங்கள் எழுதுவார். சமூகப் பிரச்சினைகள்பற்றியும் எழுதுவார்.

இவர் புதிதாக ஒரு முயற்சி மேற்கொண்டுள்ளார்.


அதில் விடியோ பிளாக் வெளியிடப்போகிறார். மாதிரி பாருங்கள்.

லிங்க் : http://youtu.be/JZM9ykwAsJk

விடியோவை கிளிக் செய்து பாருங்கள்.

9. நைஜீரியா ராகவன்.
 லிங்க் : http://raghavannigeria.blogspot.in/
நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். சமகாலப் பிரச்சினைகளை அலசுகிறார்.

10. சாரு நிவேதிதா
லிங்க் : http://charuonline.com/blog/
இந்தப்பெயரைக் கேள்விப்படாதவர்கள் தமிழ்நாட்டிலேயே யாரும் இருக்க முடியாது. most controversial writer.
இவருடைய பிரதாபங்களைவிவரிப்பதைப் பாருங்கள்.

இவருடைய சிறப்பு என்னவென்றால் இவரை மோசமாக விமரிசிக்காத எழுத்தாளரோ, பதிவரோ இல்லை. ஆனால் அவை எல்லாவற்றையும் அனாயாசமாக எதிர்கொண்டு அவர்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

நிறைய புத்தகங்கள் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய தளத்தைக் கட்டாயம் பார்க்கவேண்டும்.

11.வால் பையன்
2010ல்  கொடிகட்டிப் பறந்தவர்களில் இவரும் முக்கியமானவர். எனக்கு நன்கு அறிமுகமானவர். அப்பொழுது இருந்த இவர் தளத்தின் தமிழ்மண ரேங்க்கைப் பாருங்கள்.
2010 blog rank 6

புரட்சிகரமான பதிவுகள் போடுவார். சூன்யம்வைப்பதைப் பற்றி இவரிடம்தான் கற்றுக்கொண்டேன். இவருடைய தற்பெருமையைப் பாருங்கள்.

"நான் டோண்டு சார்,தருமி சார் கூட அமர்ந்து கூட பூஸ்ட்சாப்பிட்டிருக்கேன், "

"டிஸ்கி"என்கிற வார்தையையே இவர் பதிவிலிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்.

 தற்போதும் சில சமயம் பதிவுகள் போடுகிறார்.

சில புது பதிவர்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
Viewing all 300 articles
Browse latest View live